Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, 28 November 2013

பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி?


1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்!
(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)

2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்!
(தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது)

3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்!
(பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல)

4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்!
(சிலசமயம் செத்துபோன பாட்டியக் கூட கிண்டல் பண்ணுவானுங்க)

5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்!
(இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது)

6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்!
(ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க)

ஆனா பொண்ணுங்களா இருந்தா கஸ்டமே இல்ல..
சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்!
(ஹீ ஹீ நானும் தான் லைக் போடுறேன்)

Sunday, 15 September 2013

தோரணம் 15/09/2013


நியாயமான கேள்வி;

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !
...
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !

காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !

இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!


இந்த வார நகைச்சுவை;

ஒரு இண்டர்வியூ வின் போது,,
மேலாளர் :

நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய
சொல்லுங்க

பையன்: ஓகே சார்,, சொல்லுங்க நான்
ட்ரை பண்றேன்.,

மேலாளர் : நல்லது,
பையன் : கெட்டது,

மேலாளர் : வாங்க சார்,
பையன் :போங்க சார்,

மேலாளர் : அழகு
பையன் : ஆபத்து,

மேலாளர் : நீங்க தப்பா சொல்றிங்க,
பையன் : நான் சரியா சொல்றேன்,

மேலாளர் : பேச்ச நிறுத்து,
பையன் : தொடர்ந்து பேசு,

மேலாளர் : இப்போ வாய
மூடுரியா இல்லையா

பையன் :
இப்போ பேசுறியா இல்லையா?

மேலாளர் :
நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன் :
தொடங்குடா எல்லாத்தையும


மேலாளர் : போடா வெளிய,
பையன் : வாடா உள்ள,,

மேலாளர் : ஐயோ கடவுளே..,
பையன் : ஆஹா பிசாசே,

மேலாளர் : யு ஆர் ரிஜக்டேட்.,
பையன் : ஐ ஆம் செலக்டட்...,-


கனிவாய் பேசுங்கள்;

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவேமகனை பெற்றுக்கொள்வதைவிட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றேஅழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரதுமனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..


இந்த வார கவிதை;

ஹைக்கூ;

ஐந்தில் தெரியாத அருமை..........

ஐம்பதில் தெரிந்தது......

முதியோர் கல்வி !

எழுதியவர்; வெ . ராம்குமார் வேலூர்

சுய மதிப்பிடு; 

திருவோடு சுமந்தும்....

பிச்சை எடுக்கவில்லை....

ஆமை !

எழுதியவர்; டி.எஸ்.ரேவதி



தேவையா...இவையெல்லாம்....?

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில்

மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...

இவையெல்லாம்....?


நன்றி.....

Thursday, 29 August 2013

வாய் விட்டு சிரிப்போம்..!!


மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
...................................................................................................

நன்றி

Sunday, 4 August 2013

தோரணம் - 04/08/2013


இந்த வார நகைச்சுவை;

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"

9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க
சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள்
சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

இந்த வார நகைச்சுவை; 2

2.500 ரூபாய்க்கு முடி வெட்டி,
100 ரூபாய்க்கு ஜெல் வாங்கி,
அத அரைமனி நேரமா
தலயில போட்டு தேய்ச்சி
Spike வச்சிக்கிட்டு,
சும்மா... பந்தாவா...
ஆபிஸ் வந்தா...
பக்கத்து டேபிள் தம்பி
சொல்றாரு...
.
.
"சார் ...., தல கலஞ்சிருக்கு!.


இந்த வார கவிதை;

பேருந்து

உங்களை ஜாதி மதம் பார்க்காமல்
சுமந்து சென்றேன் ...

ஆனால் நீங்கள் ஜாதி சண்டைக்காக என்னை கல்லை கொண்டு எரிவது சரிதானா .????

கல்லெடுத்து எறிந்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத கவர்மெண்ட் பஸ்ஸின் குமுறல்....

மாற்றம்;

அழகிய கூந்தல் அதிலொரு பின்னல்,
காதில் கம்மல், அதில் ஒரு மாட்டல் ,
பின்னழகு பரவாயில்லை,
முன்னழகு எடுப்பாயில்லை,ஏறெடுத்து பார்த்தேன்,
மொத்தமாய் ஏமாந்தேன்,
ஆடவன் அவன்.

கே.தமிழ் இனியா - கொள்ளிடம்



மரத்தின் மகிமை;

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.

''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம்.காரணம் கேட்க அவர் சொன்னார்,

''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு

எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.


ஆறறிவு படைத்த-அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?'


பயனுள்ள தகவல்;

*மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -தாய்,தந்தை
*மிக மிக நல்ல நாள் -இன்று
*மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
*மிகவும் வேண்டியது -பணிவு
*மிகவும் வேண்டாதது -வெறுப்பு
*மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
*மிக்க கொடிய நோய் -பேராசை
*மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
*கீழ்த்தரமான விடையம் -பொறமை
*நம்பக் கூடாதது -வதந்தி
*ஆபத்தை விளைவிப்பது -ஆதிக்க பேச்சு
*செய்ய கூடாதது -நம்பிக்கை துரோகம்
*செய்ய கூடியது -உதவி
*விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
*உயர்வுக்கு வழி -உழைப்பு
*நழுவ விடக் கூடாதது -வாய்ப்பு
*பிரிய கூடாதது -கணவன் மனைவி ,சொந்தம் ,நட்பு
*மறக்க கூடாதது -நன்றி


இரங்கல்;

எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை!

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் வாலி திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 1931ல் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் வாலிக்கு 2007ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி

சிறுகதை, கவிதை, உரைநடை நூல்களையும் வாலி எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இளம் தலைமுறை கவிஞர்களை ஊக்குவிப்பதிலும், வாய்ப்புக்கு வழிவகுப்பதிலும் முதன்மையானவர் கவிஞர் வாலி.

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இது போன்ற பாடல்கள் ஏராளம்.

இன்றுடன் வாலி இறந்து 15 நாட்கள் ஆகின்றன..
அவரது இழப்பு தமிழிற்கு பெரும் இழப்பு தான்..
வாலி மறைந்தாலும் அவரது புகழ் மறையாது ..
வாலிக்கு நிகர் வாலிதான்!


வலைச்சரம்;

ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுபேற்க சீனா ஐயா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு வார காலத்திற்கு எனக்கு பிடித்த பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் அங்கு பதிவாக இட போகிறேன். நாளையில் இருந்து வலைச்சரத்தில் எனது பதிவுகள் தொடரும்.

Wednesday, 24 July 2013

என்ன வாழ்க்கைடா இது ?


திருமணம் ஆன உடன்
===================

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.


சிறிது ஆண்டுகள் கழித்து
===================

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து
=================

1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

ஹா ஹா என்ன வாழ்க்கைடா இது.

நன்றி!

Saturday, 13 July 2013

தோரணம் - 12/07/13


இந்த வார கவிதை;


ஏக்கம்;

கை நிறைய பூக்கள்...

மல்லிகை செடியில்

மலர்கள் பறிக்கிறாள்..!

மடியில் ரோஜாக்கள்

கடவுளுக்கு மாலை தொடுக்கிறாள்..!

தலையில் பூ கூடை வைத்து

கூவி கூவி விற்கிறாள்..!

கட்டிய பூவை,,

தலையில் சுமந்த மலரை,,

கூந்தலில் சூட முடியாத பெண்

சமூகத்தில் விதவை.

ஆர்.சத்யசேகர்  - சாமிதோப்பு


திருடா திருடா;

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் ஆய்வில் தெரிய வந்த தகவல்..

* லண்டனில் ஒவ்வொரு 4.5 வினாடிக்கு ஒருமுறை ஒருவர் தன் பொருட்களை திருடர்களிடம் பரி கொடுக்கிறார். அதாவது லண்டன் நகரில் திருட்டு பயம் அதிகமாம்.

* பெரும்பாலான வழிப்பறி கொள்ளைகள் பகலில் தான் நடைபெறுகிறது.

* உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் திருடர்களில் சராசரியாக 700 பேருக்கு ஒருவர் தான் போலீசாரிடம் பிடிபடுகின்றனர். மற்றவர் சுதந்திரமாக வெளியே நடமாடிக் கொண்டு தான் இருகின்றனர்.

* வீடுகளில் நடக்கும் திருட்டுகளில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வேலைக்காரர்களே ஈடுபடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே உஷாரா இருந்துகோங்க.


இந்த வார நகைச்சுவை;

முதலாளி தனது நண்பருடன் தொழிற்சாலைக்குள் சுற்றிவந்தார். வழியில் ஒரு எந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த தொழிலாளியை நெருங்கி ஏதோ சொன்னவர் மறுபடியும் நண்பருடன் இணைந்து நடக்கலானார்.
“அந்தத் தொழிலாளிகிட்ட என்ன சொன்னாய்?” கேட்டார் நண்பர்.

“வேலையை வேகமா செய்யணும்னு சொன்னேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்கு எவ்வளவு சம்பளம் தர்ற?” கேட்டார் நண்பர்.

“மாசம் ஆறாயிரம் ரூபாய் தர்றேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்குக் கொடுக்கிற சம்பளப்பணம் உனக்கு எப்படிக் கிடைக்குது?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை விற்பதால் கிடைக்குது.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சு கொடுக்கிறது யாரு?” கேட்டார் நண்பர்.

“அந்தத் தொழிலாளிதான்.” சொன்னார் முதலாளி.

“அவரு ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு பொருள்கள் செஞ்சு கொடுப்பாரு?” கேட்டார் நண்பர்.

“ஆயிரம் ரூபாய் இருக்கும்...” சொன்னார் முதலாளி.

“அப்படின்னா மாசம் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவரு செஞ்சுகொடுக்கிறாரு. ஆனா அவரு செய்ற வேலைக்கு நீ அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறதுக்கு பதிலா, ‘வேகமா வேலை செய்யணும்’-னு நீ தினமும் சொல்றதுக்காக அவருதான் உனக்கு மாசம் இருபத்து நாலாயிரம் ரூபாய் கொடுக்கிறாரு, இல்லையா?” கேட்டார் நண்பர்.

“ம்...” என்று சொன்ன முதலாளி உடனே சுதாரித்துக்கொண்டு, ”ஆனா இந்த மெஷின்லாம் என்னோடதாச்சே,” என்றார்.

“இந்த மெஷின்களை நீ எப்படி வாங்கின?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை வித்து அதிலே கிடைச்ச பணத்திலேதான் வாங்கினேன்.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சது யாரு?” கேட்டார் நண்பர்.

இப்போது முதலாளி சொன்ன பதில்: “வாயை மூடிட்டு வா... அவன் காதிலே விழப்போவுது...”


இந்த வார விழிப்புணர்வு தகவல்; 

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை

9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.
இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார் அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்?

நான், அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!


சிங்கம் 2 - கர் புர் கிர்;

வர வர தமிழ் நாட்டு ஜன தொகைய விட தமிழ் சினிமா பைடேர்ஸ் தொகை அதிகமாயிருச்சு போல. சிங்கம் 2 படத்துல்ல எம்புட்டு பேர கொலையா கொன்னு எடுக்குறாரு அம்மாடியோவ். ஓங்கி அடிச்சா ஒண்ணுக்கு போற வெய்ட்ல சீ ஒன்னற டென் வெய்ட்ல, நாடுவிட்டு நாடு காண்டம் விட்டு காண்டம் சாரி சாரி கண்டம் கண்டம் பறந்து தாக்குற எவுகனைடா அப்படின்னு அவரு ஓங்கி ஓங்கி அடிக்கும் போது அந்த புள்ளைங்க எல்லாத்தையும் பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு இந்த காசுக்காக எம்புட்டு அடி வாங்குறாங்க.

சூர்யா நல்ல அடிக்கிறாப்ல, பறந்து பறந்து பந்தாடுறாரு, பயங்கரமா பஞ்ச் அடிகிறாரு எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் விஜய் பண்ணுனா நம்ம ஆளுங்க விட்டு கிழிக்கிறாங்க அத இந்த ஆள அவரு தம்பியலாம் லைட்டா களாய்சிட்டு விட்டுடுறாங்க அது ஏன். அய்யா சூர்யா சிங்கம் 1ல சென்னைல உள்ள ரௌடிய காலி பண்ணிடிங்க சிங்கம்2 ல வெளிநாட்டுக்காரன்ன போயி புடிச்சுட்டு வந்திங்க. சிங்கம் 3 ல செவ்வாய் கிரகம் போவிங்களா.

இசையை பத்தி சொல்லணுமே காது சவ்வு அருந்துருசுல. மொத்ததுல்ல படம் பார்த்துட்டு வெளிய வந்து சாரிடான் மாத்திரை வங்கி போட்டது தான் மிச்சம்ல. படம் பார்த்த தலை வலி வரும்ன்னு நான் ஜோக்கா தான் படிச்சு இருக்கேன் அத நேற்று தான் அனுபவிச்சேன்ல. 


மதம்;

நான் பொதுவா மத விசயங்களை பதிவாக எழுதுவதில்லை. இன்னைக்கு மெட்ராஸ் பவன்ல சிவகுமார் மோடியின் பேட்டியை பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தாரு அத படிச்சதுக்கு அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் போல இருக்கு.

எந்த மதமும் பிறர் உயிரை எடுக்க வேண்டும் என்று  சொல்லவில்லை. எல்லா மதங்களும் நல்லதையே போதிகின்றன. அதை பின்பற்ற வேண்டிய ஐந்து அறிவு மனிதனே தவறு செய்கிறான். தவறு செய்யாதவர்கள் எந்த மதத்திலும் இல்லை அவ்வாறு செய்பவன் மனிதனே இல்லை.

நன்றி!

Wednesday, 3 July 2013

தோரணம் 03/07/2013

பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? 
உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன் கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள்…!!! எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.
பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்.
தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பசுபதிகோவில் என்ற இடத்தில இயங்கும் பாரத் பெட்ரோல் பங்கில் மட்டும் யாரும் போயி பெட்ரோல் போட்டுறாதிங்க. அங்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டல்  50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறானா என்பதே சந்தேகம் தான். அந்த அளவு திருட்டு நடைபெறுகிறது அந்த பங்கிற்க்கு உள்ளூர் காரர்கள் யாரும் செல்வது இல்லை. இப்போது அங்கு அவ்வளாவாக விற்பனை இல்லை என்றாலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் ஏமாந்து அங்கு சென்று விடுகின்றனர். 

யார் பிரபல ஒளிவட்ட பதிவர்;
நம்ம பதிஉலகில் யாரு பிரபலமான பதிவர்ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம்ன்னே. நிறைய பயனுள்ள தகவல்கள் அட்டகாசமான நகைச்சுவையான எழுத்துநடை அதிகமான வாசகர்களை கவர்வது அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன் அப்படில்லாம் இல்லையாம் பின்ன எப்படி?

1.தான வந்து பேச மாட்டாராம்? {மனசுள்ள பெரிய பாலான்னு நினைப்போ}

2.நம்ம அவரோட முக புத்தகத்தில் ரிக்வெஸ்ட் கொடுத்த அச்செப்ட் பண்ணிக்க மாட்டாராம். {இவரு பெரிய அனுஷ்கா ஷெட்டி}

3.எந்த ஒரு புது முக பதிவர் நல்லாவே எழுதுனாலும் பாராட்ட மாட்டாராம். {நீயே ஒரு காலத்துள்ள புதுமுகம் தான்}

4.தப்பி தவறி கூட மத்தவனுக்கு கமெண்ட் போட மாட்டாராம். {போட டேய்} 

5.பெரிய பெரிய பிரபலம்லாம் இவங்களோட ரசிகர்களாம். {பவர் ஸ்ட்ரா இருப்பாரோ}

6. எல்லோரும் பிரபல பதிவர் ஆயிட்டதால இப்போ இவங்க எல்லாம் ஒளிவட்ட பதிவராம். {ஏன் பதிவு எழுதும் போது சுத்தி மெழுகுவத்தி ஏத்தி வச்சுப்பான்களோ}

7.ஒருத்தவனையும் பாராட்ட மாட்டானுங்க ஆனா இவங்கள மட்டும் நாம பாராட்ட வேண்டும் என்று நினைப்பானுங்க {இந்த பொழப்புக்கு}


இந்த வார நகைச்சுவை;
ஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..

போன் வந்துச்சி ... பார்த்தா புது நம்பர்...
யாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்...

" Helo... யாரு? ! "ன்னேன்.

" நான் யாருங்குறது இருக்கட்டும் ... உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "ன்னு கேட்டான்.

" பண்ணுதே.. ! "ன்னேன் நான்

" Computer Work பண்ணுதா.? "ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.

" அதுவும் Work பண்ணுதே..! "ன்னேன் நான்.

அதுக்கு அந்த நாதாரி சொல்லுது,

" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? ... நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ ...! " அப்படிங்குறான்....

வரதட்சணை;

நிறைமாத கர்பிணியான அவள் அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டாள்.

அவளின்கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வேலையை முடித்துவிட்டு வேகவேகமாக ஓடினான் கோவிலுக்கு,இறைவனிடம் கைகூப்பி வேண்டினான்.

இறைவன் அவன் முன் தோன்றி உன்பிரார்த்தனைஎன்னவென்று என்னிடம்சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன்.அதற்க்கு கைமாறாக நீ நான்சொல்வதை கேட்க வேண்டும் என்றான்இறைவன்.இறைவனின்கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன்வேண்டுதலை இறைவனிடம் கூறினான்.

எந்த வேண்டுதல் என்னவென்றால் " என்மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்கவேண்டும் பின் குழந்தை வேண்டாம் "என்று வேண்டிக்கொண்டான். இறைவனும் அவனின்வேண்டுகோளை நிறைவேற்றினான்.

உங்களது வேண்டுகோள் என்னவென்று கூறுங்கள்இறைவா என்று அவன் கேட்டான்.

எனது வேண்டுகோளை காலம்வரும்பொழுது கேட்கிறேன் என்றான்இறைவன்.சுமார் இருபத்து ஐந்து வருடங்கள்கழித்து அவனின் கனவில் இறைவன்தோன்றி தன வேண்டுகோளை வைத்தான்.

அவன் மகன் திருமணத்தின் பொழுது பெண்வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும்கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீவரதட்சணை கொடுத்து உன் மருமகளாகஏற்றுகொள்ள வேண்டும் என்றான்இறைவன்.

இதை கேட்டு அதிர்ந்து போனான் அவன்.பெண் பிள்ளை பிறந்தால்வரதட்சணை தரவேண்டுமே என்று தான்உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண்பிள்ளையை கொடுத்து விட்டு இப்படி ஒருதலையில்சுமத்துகிறாயே இறைவா என்று கதறினான்."

நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்.

உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்.

திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்வேண்டும்

உன்னை அரவணைக்க ஒரு பெண்வேண்டும்

உன்னை நினைத்தே உனக்காக உருக ஒரு பெண் வேண்டும்

உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கஒரு பெண் வேண்டும்

"உன் வாழ்க்கையில் பங்கு கொண்டஇத்தனை பெண்களும் உனக்கு பாரமாகதெரியவில்லை

ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி பாரமானது ?

நீ எவளவு வரதட்சணை கேட்டாலும்பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக்கூடாது என்று நீ நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் ?"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாகத்தேரியாது "என்று புத்தியில்உறைக்கும்படி சொன்னான் இறைவன்.




இந்த வார கவிதை;

ஹைக்கூ; 

பூமி தாயின் 

அசுர தாலாட்டு 

நில நடுக்கம்!

எழுதியவர் சா. அக்பர் - கந்தசாமி பாளையம்.

வேண்டுதல்;

முதியோர் இல்லத்தில் இருந்த அம்மா 

இறைவனிடம் இப்படி பிராத்தனை செய்தால்..

"ஆண்டவனே , ஏன் மகன் மாதிரி 

என் பேரனும் இருந்து விட கூடாது "

எஸ்.ஸ்ரீதேவி ரோஜா- காரமடை 
{மனதை தொட்ட வரிகள்}

மனதை தொட்ட வரிகள்;
வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்---


நல்லோர் மனதை நடுங்க செய்யாதே!

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே!

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே!

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே!

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே!

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே!

குருவை வணங்கக் கூசி நிற்காதே!

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே!


நன்றி!