Showing posts with label சத்யராஜ். Show all posts
Showing posts with label சத்யராஜ். Show all posts

Thursday, 5 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள


அதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் நன்றாக பொருந்தும். தமிழ் சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாததாக நடிகர்களாக இருவரும் உள்ளனர்.

மிமிக்ரி ஆர்டிஸ்டா டிவில நுழைந்து பின்பு தொகுப்பாளராக வந்து நடிகராக அறிமுகம் ஆகி இப்போ கலக்கி கொண்டு இருக்கிறாரு நம்ம சிவா. அவருக்கு அடுத்தடுத்து வரிசையா வந்து படங்கள் குவிக்கிறது. இவரோட நடிப்பில் நாளை வெளியாகும் படம் வருத்தபடாத வாலிபர் சங்கம்.

படத்தை வாங்கியவர்களும் எந்த வருத்தமும் இல்லாமல் ரிலாக்சாக இருக்கிறார்கள். காரணம் சிவ கார்த்திகேயன். இவரின் காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் இளைஞர்கள் மத்தியில் சிவ கார்த்திகேயன் என்றால் வரவேற்பு இருக்கிறது. முக்கியமான இன்னொரு காரணம், படத்தின் டீம்.

படத்தை இயக்கியிருக்கும் பொன்ராம் ராஜேஷ் எம். மின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். தன்னுடைய சிஷ்யன் கேட்டு கொண்டதற்காக இந்தப் படத்துக்கு ராஜேஷ் எம். தான் வசனம் எழுதியுள்ளார்.


தேசிங்குராஜாவில் காமெடி என்ற பெயரில் நம்மை எல்லாம் அடித்து துவைத்து தொங்க விட்ட பரோட்டா சூரிதான் இதிலும் காமெடி செய்கிறார். இந்த படத்திலாவது பேசியே சாவ அடிக்காம சிரிக்க வைக்கிறாரா என்று பார்ப்போம். எல்லாவற்றுக்கும் மேல் புரட்சி தமிழன் சத்யராஜ் இருக்கிறார்.

சிவ கார்த்திகேயனுக்கும், சத்யராஜுக்குமான மோதல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். ஹீரோயினாக நடித்திருப்பவர் ஸ்ரீ திவ்யா. இவருக்கும் சிவாவிற்கும் கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று நாளை பார்த்து விடுவோம்.


டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஊதா கலரு ரிப்பன் இப்போ என்னோட பேவரிட் பாட்டு. சுப்பிரமணியெம் ஒளிப்பதிவு. சிவ கார்த்திகேயனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். 30 லட்சம் பேர் அதை பார்த்திருக்காங்க என்ற பூரிப்பு சிவ கார்த்திகேயனுக்கு. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை தயாரித்திருக்கிறார்.

வாலிபர் சங்கத்தில் இம்ப்ரசான திருப்பதி பிரதர்ஸ் சிவ கார்த்திகேயனை இயக்கும் பொறுப்பை பூபதி பாண்டியனிடமிருந்து பொன்ராமிடம் தந்திருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இதைவிட கட்டியம் கட்டி கூற முடியுமா என்ன. ஆனால் படம் ஊத்தி கொண்டால் அது லிங்குசாமி க்கே வெளிச்சம்.



Sunday, 23 June 2013

தலைவா வெளியிட்டு விழா படங்கள் & பாடல்கள்


நேற்று மாலை தலைவா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. ஜி.வி.பிரகாஷும் அவரது வருங்கால மனைவி சைந்தவியும் விஜய்யை வாழ்த்தி ஒரு பாடல் பாடினார்கள். நாளை - அதாவது இன்று விஜய்யின் பிறந்தநாள் என்பதற்காக.

விழாவின் தொடக்கத்தில் லேசரில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவோ, சே குவேரா, நெல்சன் மண்டேலா என உலகத் தலைவர்களின் படங்களை ஒளிரச் செய்தார்கள். கடைசில் நாம் எதிர்பார்த்த அந்த திட்டமிட்ட விபத்தும் நடந்தது. தலைவர்கள் வரிசையில் கடைசியாக விஜய்யின் முகமும் லேசரில் ஒளிர... அரங்கம் அதிர்ந்த அளவுக்கு நம் மனமும் அதிர்ந்தது. பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று....

சத்யராஜ் கொஞ்ச காலமாக விஜய்யின் கொள்கைப் பரப்பு செயலாளராக நடந்து கொள்கிறார். இந்த விழாவிலும் அப்பணியை சிறப்பாகவே செயல்படுத்தினார். இங்கே உலக தலைவர்களின் முகங்களை லேசாரில் காண்பித்தார்கள். அதில் எனக்குப் பிடித்த பெரியார், எம்ஜிஆர், பிரபாகரனின் முகங்களும் இடம்பெற்றிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன் என்றார். அடுத்து அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் ஜேம்ஸ் கேமரூனின் இதயம் சுக்கு நூறாக உடைந்திருக்கும். தலைவா படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பாராட்டியவர், அவர் தென்னகத்து ஜேம்ஸ் கேமரூன் என்றார், எவ்வித சங்கோஜமும் இல்லாமல். எப்படிப்பா...?

சந்திர பிரகாஷ் ஜெயின் - படத்தின் தயாரிப்பாளர் - தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று ஆஸ்திரேலிய நிகழ்வு ஒன்றை விவரித்தார். அனைவரும் எதிர்பார்த்தது விஜய்யின் பேச்சை.

ஜுன் 8 நடைபெறுவதாக இருந்த பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டதைப் பற்றி தீனி போடுவார் என்று பார்த்தால், படத்தைப் பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று இரண்டே வார்த்தைகளில் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டார்.

ரசிகர்களின் ஆரவாரத்தை தாண்டி கேட்டது நம் புரட்சி தமிழனின் ஜால்ரா சத்தம்தான். விஜய் தலைவா ஆயிட்டார், இனி அவரது ரசிகர்கள் தளபதிகள் ஆக வேண்டியதுதான் என்றார். அகராதியை தலைகீழாக புரட்டியும் இதற்கு அர்த்தம் விளங்கவில்லை. தெரிந்ந்தவர்கள் பின்னூட்டமிடலாமே.


1.வாங்கண்ணா;

விஜய் & சந்தானம் இணைந்து பாடி அசத்தி இருக்கிறார்கள் கேட்க மிக சூப்பரா இருக்கு. நம்ம தளபதி பாடும் பாடல்கள் அனைத்தும் கலக்கல் ரகம் அதில் இந்த பாடலும் இணைந்து கொண்டது வாங்கண்ணா அசத்துங்கண்ணா. நானும் இந்த பாடல அப்லோட் பன்றேன் 2 மணி நேரம் ஓடுதே தவிர அப்லோட் ஆகவில்லை.

2.யார் இந்த சாலை ஓரம்;

ஜி.வி. பிரகாஷ் அவரின் வருங்கால மனைவி சைந்தவி இணைந்து பாடி இருகின்றனர் லவ்லி மெலோடி சாங். ரசித்து அனுபவித்து இருவரும் பாடி இருக்கின்றர்கள்.

  3.சொல் சொல் அன்பே;

இது இன்னொரு மெலோடி கேட்க மிக சுமார் தான்.

4.தமிழா தமிழா;

தமிழனின் பெருமையை சொல்கிறோம் என்ற பாடல் இந்த பாட்டு திரையில் வரும் பொழுது அனைவரும் தம் அடிக்க வெளியே செல்வது உறுதி.

5.தளபதி தளபதி;

தலைவான்னு பெயர் வச்சாச்சு இளைய தளபதியின் புகழ் பரப்ப ஒரு பாடல் இல்லையேன்றால் எப்படி எனவே மொக்கையா ஒரு பாடல். தளபதி திருந்துனாலும் சுத்தி இருக்குற பக்கிங்க விடாது போல.

எ.எல். விஜய் இயக்கம் இவரின் அனேக படங்கள் காப்பி தான். இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கும் பொழுது கூட தேவர் மகன் படம் தான் நினைவிற்கு வருகிறது. பார்க்கும் பொழுது துப்பாக்கி அளவிற்கு இருக்காது என்றே தோணுகிறது.

ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா இருக்கு அது என்னன்னு தானே கேக்குறிங்க வழக்கம் போல தீவிரவாதி, குண்டு வெடிப்பு அதுக்கு காரணம் இஸ்லாமியர்கள் இது மட்டும் கண்டிப்பா இடம் பெற்று இருக்கும். 


நன்றி,வணக்கம் 

Friday, 10 May 2013

நாகராஜ சோழன் M .A M.L.A

நம்ம தமிழ் சினிமால ஒரு படம் ஹிட் ஆனால் அதன் இரண்டாம் பாகம் தயாரிப்பது தற்போதைய ட்ரென்ட். அந்த வரிசையில் முன்பு சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மணிவண்ணனின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் 
டூப்பர் ஹிட் ஆனா அரசியல் கலக்கலான ஹிட் படம் அமைதி படை. இந்த 
படத்தோட இரண்டாம் பாகம் அப்படின்னு சொன்னதும் கேக்கனும்மா அரசியல் ஆர்வலர்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மீது மிக பெரிய எதிர் பார்ப்பு வந்து விட்டது.
சத்யராஜ் மணிவண்ணன் இரண்டு பேருமே லொள்ளு பார்ட்டிகள் இவர்களிடம் நாம எதிர்பார்ப்பதும் அதுவே. இவர்களின் முந்தைய படங்களும் 100% லொள்ளாகவே இருக்கும் இந்த படமும் அது போலவே இருக்கும்னு நமக்கு தெரியாதா? இவங்க இரண்டு பேரிடமும் மாட்டி கொண்டு யாரு யாரு எல்லாம் நாற போகிறார்கள் என்று எண்ணினேன் அதனால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தேன்.
இன்றைக்கு வெள்ளி கிழமை அதனால 11 மணி காட்சிக்கு போனால் 1.30 மணிக்கு தொழுக போக முடியாது. அப்ப மேட்னி போகலாம் என்று பார்த்தால் 2.00 மணிக்கு படம் நான் இங்க இருந்து கிளம்பி தியேட்டரை சென்று அடைய முப்பது நிமிடம் ஆகும் நான் போறதுகுள்ள படம் ஆரம்பம் ஆகி விடும். என்ன செய்யலாம் சரி சாப்பிட்டு விட்டு சாயங்காலம் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
போன முறை 3 பேர் 3 காதல் படத்திற்கு விமர்சனம் படிக்காமல் சென்று மாட்டி கொண்டோம் இந்த தடவை யாராச்சும் காலையில் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் போட்டு இருப்பாங்க அதை படிச்சு பார்த்து விட்டு செல்லலாம் என முடிவு பண்ணி அலசி பார்த்தேன். நம்ம அட்ராசக்க சிபி விமர்சனம் பண்ணி இருந்தாரு படிச்சேன் படம் ஒன்னும் வொர்தா தெரியல்ல வெறும் வசனத்திற்காக மட்டும் போயி பார்க்க வேண்டுமா என முடிவு செய்து கிரிக்கெட் விளையாட சென்று விட்டேன். 250 ரூபாய் மிச்ச படுத்தி கொடுத்த அண்ணன் செந்தில் குமார் வாழ்க.

விமர்சனம் படிக்க வந்தா இப்படி ஏமாத்திட்டேன் என்று யாரும் சாபம் விட வேண்டாம் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும் ஹாஹா...

http://www.adrasaka.com/2013/05/blog-post_7352.html

நன்றி வணக்கம்.