Showing posts with label பழ மொழிகள். Show all posts
Showing posts with label பழ மொழிகள். Show all posts

Saturday, 4 April 2015

பெண்கள் பற்றிய பழமொழிகள் !!!!

1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை, கண் இன்றிக் காட்சியும் இல்லை .

2 . பெண் கிளை, பெருங்கிளை .

3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.

4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும் .

5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார் .

6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள் .

7 . பெண் பாவம் பொல்லாதது .

8 . பெண் வாழ, பிறந்தகம் மகிழ

9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.

10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்.

11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் - வேட்லி.

12 . பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.

13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட் பைரன்.

14 . பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.

16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.

17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்

18 . தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.

20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்

Saturday, 11 May 2013

கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி?


கண்களை பற்றி அறிந்து கொள்வோம்;

1.கருவில் முதன்  முதலாக உருவாகும் உறுப்பு கண்களே.

2.தேனிக்களுக்கு ஐந்து கண்கள் உண்டு.

3.டால்பின்கள் தூங்கும் பொழுதும் கண்கள் திறந்து இருக்கும்.

4.வண்டுகளுக்கும்,முயல்களுக்கும் கண் இமைகள் கிடையாது.

5.கண்கள் இருந்தும் பார்வை இல்லாத உயிரினம் வவ்வால்.

பதநீர் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு?

நான் சிறுவனாக இருக்கும் பொழுது பதநீர் பருகியது அதன் பின்பு அதை கண்ணால் கண்டே பல ஆண்டுகள் ஆகி விட்டது. தெருக்கு தெரு டாஸ்மாக் தண்ணி கிடைக்கிறதே ஒழிய இந்த பதநீர் கிடைக்க மாட்டேன்கிறது.

பதநீரில் 85% நீர்சத்தும் 12% சர்க்கரை சத்தும் உள்ளது.மேலும் கால்சியம், பாஸ்பரஸ்,இரும்பு போன்ற  தாது உப்புகளும், வைட்ட மின்கள் சி,பி,டி
ஆகியவையும் உள்ளன.

பதநீரில் உள்ள இரும்பு சத்து பித்தத்தை நீக்குகிறது. பற்களின் வளர்ச்சிக்கும், மலசிக்கலை போக்கவும் பதநீர் உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ரொம்ப நல்லது.

தினந்தோறும் காலையில் டீ குடிப்பதை விட பதநீர் பருகினால் காலை உணவு போல உடலுக்கு சக்தி அளிக்கிறது.

பல நாட்டு பழ  மொழிகள்;

1.கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை-ஸ்பெயின்

2.எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும்-ஸ்காட்லாந்து

3.பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான்-ஜேர்மன்

4.தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல்-ருமேனியா

5.பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும்-துருக்கி

ஏன்டா தினமும் பதிவ போட்டு எங்கள சாகடிக்கிற அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது.என்ன பன்றது நேற்று போட்ட பதிவ பார்த்துட்டு அண்ணன் பதிவு உலக மாணிக்கம் பிலாசபி பிரபாகரன் சாபம் கொடுத்து விட்டுட்டாரு. அதனால பயன் தர மாதிரி நான் படித்த விடயங்களை எழுதி இருக்கேன். கடலில் இறங்கியாச்சு நீந்த மாட்டேன்னா எப்புடி? ஹாஹா