Showing posts with label கொய்யா. Show all posts
Showing posts with label கொய்யா. Show all posts

Tuesday, 30 July 2013

சயின்ஸ் கபாலி இன்னா சொல்லுறாருன்னா 30/07/13


இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !

•வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது.

• குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.

• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாகஉள்ளது என அர்த்தம்.

• கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

• சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

• இயர் (ear) போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், வெடிக்கும்.

• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறுவிதமாக இருக்கும்.

• 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

• சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

• பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம்வலது, இடது என நடக்கும்.

• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

• பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

• 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

• குழந்தைகள் பிறக்கும் போதுமூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

• வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

• சூயிங்கத்தை முழுங்கினால்,வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

• கண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,"பாஸ்பீன்ஸ்" எனப்படும்..


கொய்யா - அடங்கொய்யா;

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துகள் இருப்பதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றாக பழுத்த கொய்யாவுடன், மிளகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் நீங்கி சோர்வு இருந்த இடம் தெரியாமல் போய் விடுமாம்.

கொய்யா பழத்துடன் சப்போட்டா பழம் தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக செரிமானம் ஆவதுடன் மலசிக்கல் தீரும் வயிற்று புண்ணும் குணமாகும்.

அதோடு வயிற்றுபோக்கு, மூட்டுவலி,அரிப்பு,மூல நோய், தொண்டை புண் போன்ற பாதிப்புகளும் அகலும் என்று கூறுகிறார்கள்.

கொய்யா பழத்திலும் அதன் கொட்டைகளிலும் புரதம்,கொழுப்பு சத்து, மாவு சத்துகள் சிறிதளவே இருக்கும் வேளையில் நார்ச்த்து, கால்சியம் ,இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

பழுக்காத கொய்யா காய் வயிற்று கடுப்பையும் வயிற்றோடத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தில் பட்டையும் வேர் ஆகியவற்றை கொண்டு தயாரித்த கசாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வாயிற்று போக்கை தடுக்கும்.

படித்தீர்களா கொய்யாவின் மகத்துவத்தை.