Showing posts with label இதயம். Show all posts
Showing posts with label இதயம். Show all posts

Tuesday, 18 June 2013

சயின்ஸ் கபாலி {18.06.2013}


இதயம் துடிக்கும் போது சத்தம் வருவதேன்?

மனிதன் இதயத் துடிப்பின் போது லப்டப் ஓசை கேட்பதாக சொல்கிறோம். இந்த சப்தம் எப்படி ஏற்படுகிறது என்பது தெரியுமா உங்களுக்கு?

மனித இதயம் நான்கு அறைகளை கொண்டது. மேல உள்ளவை வலது,இடது ஆரிகிள்கள். கிழே உள்ளவை வலது,இடது வென்ட்ரிகில்கல். ஆரிகில்களையும், வென்ட்ரிகில்கலையும் இரு வால்வுகள் இணைகின்றன. அவை ஈரிதழ் வால்வு மற்றும் மூவிதழ் வால்வு என அழைக்கப்படுகின்றன.
இந்த வால்வுகளே இரத்தத்தை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு செல்ல அனுமதிகின்றன.

இதயம் சுருங்கி விரிதலின் போது ஒரு ஆரிக்கிள் சுருக்கம், ஒரு வென்ட்ரிக்கில் சுருக்கம், அதையெடுத்து சிறு ஓய்வு இவற்றை உள்ளடக்கியதே இதய துடிப்பாகும்.இந்த செயலின் போது வால்வுகள் மூடுவதால் இரு வகை ஒலிகளை கேட்கிறோம். வென்ட்ரிக்கில் சுருக்கத்தின் போது வால்வு இழுத்து மூட படுவதால் "லப்" என்ற ஒலி உண்டாகிறது. வென்ட்ரிக்கில் விரிவடையும் போது "டப்" என்ற ஒலியும் உண்டாகிறது. இந்த செயல் மாறி மாறி நடைபெறுவதால் நம்மால் லப்டப் என்ற ஒலியை கேட்க முடிகின்றது. 


 வினோத விலங்குகள்;

*சிங்கத்தின் கர்ஜணை அதிகபட்சம் நான்கு மைல் தூரம் வரை கேட்கும்*

*துருவ கரடிகள் இடது கையை தான் அதிகம் பயன்படுத்தும்*

*பற்கள் இல்லாத பாலுட்டி எறும்புதின்னி*

*கண் இமைகள் உடைய ஒரே மீன் இனம் சுறா. இவற்றால் இமைகளை சிமிட்ட முடியும்*

*இறால் மீனின் இதயம் தலை பகுதியில் உள்ளது* 

*ஆந்தையால் நீல நிறத்தை பார்க்க முடியும்*

*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட 2 மடங்கு நீளம் கொண்டது*


இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் உயிரினம்;

மனிதர்களாகிய நமக்கு இழந்த உறுப்புகளை திரும்ப பெரும் திறன் இல்லை. அதாவது அவை மீண்டும் நமக்கு வளர்வது இல்லை. இந்த விஷயத்தில் சாலமண்டர் என்ற உயிரினம் நமக்கு உதவகூடும் என்று விஞ்ஜானிகள் கருதுகின்றனர்.

நீரிலும், நிலத்திலும் வாழ கூடும் சாலமண்டர் ஒரு அதிசய உயிரினம். காரணம் இது இழக்கும் உறுப்புகள் மீண்டும் வளர்ந்து விடுகின்றன. கால்கள்,தண்டுவடம்,முளைத்திசு, இதயத்தின் சில பகுதிகள் என இவற்றை இழந்தாலும் இவை மீண்டும் எவ்வித குறை பாடு இன்றி வளர்ந்து விடுகிறது. 

சாலமன்டரின் இந்த அதிசய திறனுக்கு அதன் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என கண்டறிந்து உள்ளனர்.  சாலமற்றரின் நோய் எதிர்ப்பு செல்களை நீக்கியவுடன் அதனால் இழந்த  உறுப்புகளை  திரும்ப பெற முடிவது இல்லை.
இதுகுறித்த ஆய்வை தொடந்து வரும் விஞ்ஜானிகள் மனிதர்களுக்கு இந்த சிறப்பை ஏற்படுத்த முடியுமா என்ற நோக்கில் உழைத்து வருகிறார்கள்.



புகழ்பெற்றவர்களின் படைப்புகள்;

* காளிதாசர் - ரகு வம்சம் *

*பான பட்டர் - ஹர்ஷ சரிதம் *

*மகாத்மா காந்தி - சத்திய சோதனை *

*ரவீந்த்ர நாத் தாகூர் - கீதாஞ்சலி *

*ரூசோ - சமுதாய ஒப்பந்தம் *

*ஷேக்ஸ் பியர் - மெர்ச்சென்ட் ஆப் வெனிஸ் *

*மார்க்சிம் கார்க்கி - தாய் *

*சார்லஸ் டிக்கன்ஸ் - எ டேல் ஆப் டூ சிட்டிஸ் *

*வால்டர் ஸ்காட் - ஜவன் ஹோ  *

*காரல் மார்க்ஸ் - மூல தனம் *


வாழ்த்துகளுடன்!