ிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGUvUpZ2SyIw2mKWZ6paSoxJvgzvUgMdd8VYFE9heZBfwhX-ENztjHtIYdJU8IpoVgG3EVH2uKE6G7wdhm-BgSNBh6HDiJBoVFMw7FfRas1XmppfxtQsutt8ijf32cO_bdOU4ye6gJmWtX/s320/DMDK+(4).jpg) |
(அடிக்கடி காணாமல் போகும் எதிர்கட்சி தலைவர்) |
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIdsKM3zWsz3oYvGYXpyCwDQAukEtQtNx21wvbWH8GpWv-hq1rXbGyBiMrBzY2Rr9xvJMvXi6sj2CzNWtGteXDDLrXG29_t49p0k8oqmuGEQ0YDoOLP6GHKSm93DJtPOeKLyKJT1MD0k6K/s1600/images+(1).jpg) |
(அரசியல் வியாபாரி) |
முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiojJsdvYX9mX0ScZ4tsG6pblK96HGmEvKdmDXCo2iDxpK5u42IZtNYXRxxoMIRWZTO4KcJUzSoRe9gyfYYxWFpxex9-AojaVJUD5vDHtbZZ2IY7uRlJwWXL14mpEo-daVnKdz4s_l9VdZU/s1600/images+(5).jpg) |
(நடையரசர்) |
இது மாதிரி ஏமாற்றும் வியாபாரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற மறுபடி காமராஜர் பெரியார் போன்றோர் மீண்டும் பிறந்தால் மட்டுமே மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அது வரை நமது நிலைமை???????????
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-HhLsI0TynEStc3akl13G6HfrFA-___34dxEAsvXGIM3FWQ5yTA53eyodQ_JgYU4ev1iomw78W3zPEwZi7bacXXS_7ynHz5J_qS6qZF2UXl4Eq8G3VvlosHUGhjMgW8fn8zpviHVWd2Qz/s1600/images+(6).jpg) |
(யாராச்சும் காப்பாத்துங்க) |
5 comments:
அவர் ஏமாற்றவில்லை. .
அவர் புத்திசாலி. . .
அருமையான கதை. .
புகைபட கமெண்ட் சூப்பர். . .
படங்களும், அதற்கேற்ற கதை சொன்ன விதமும் கலக்கல்...
நன்றி ராஜா சார்
வருகைக்கு நன்றி தனபாலன் அண்ணே
Post a Comment