Thursday 26 September 2013

நடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டு விழா கலைஞன்!


மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.


அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.

ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.


சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை. எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது ராதாவின் நாடக வாழ்க்கை.

ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி மைசூர் நாடக கம்பெனி, பிறகு சாமண்ணா நாடக கம்பெனி, அப்புறம் ஜெகந்நாதய்யர் கம்பெனி, 1924 ஆம் ஆண்டு ராதா நடித்த 'கதரின் வெற்றி' நாடகத்தை காந்தி, கஸ்தூரி பாய், பாரதி, ராஜாஜி ஆகியோர் கண்டு ரசிக்கிறார்கள்.

தாவை சினிமா நடிகராக்கிய படம் ராஜசேகரன். நாடகமானாலும், சினிமாவானாலும் பொது விதிகளை உடைப்பவர் ராதா. இழந்த காதல் நாடகத்தில் மனைவியை சவுக்கால் அடித்து கழுத்தை நெரித்து நாற்காலியில் உட்கார வைத்து பதினைந்து நிமிடம் பேசுவார். எப்படி? ஆடியன்சுக்கு முதுகு காட்டியபடி. நாடகத்தில் முகத்தை காட்ட வேண்டும், முதுகை காட்டக்கூடாது என்ற பொது விதி இழந்த காதலில் பொடிப் பொடியானது.

ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே நாடகம் தொடங்கும் முன் நிஜ ஆகூசனுடனே கொட்டகை வாசல் திறக்கும். அதிலும் போர் வாள் நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா. விளைவு, சென்னையில் போர் வாளுக்கு தடை விதிக்கப்பட்டது.


தடை செய்யப்பட்ட ராதாவின் இன்னொரு நாடகம், ராமாயணம். விடுவாரா ராதா? அதே நாடகத்தை தேவாசுரப் பாடல் என பெயர் மாற்றி அரங்கேற்றினார். ஆனாலும் பல இடங்களில் அடிதடி. இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்.

ராதாவின் கலை உச்சம், ரத்தக் கண்ணீர். திருவாரூர் தங்கராசு எழுதிய இந்நாடகம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருச்சியில் அரங்கேறியது. ரத்தக்கண்ணீரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.ஏ. பெருமாள் முதலியார் சினிமாவாக தயாரிக்க முன்வந்தபோது, அதில் நடிக்க ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் ராதா.

அந்தக் காலத்தில் ஒளவையார் வேடத்தில் நடிக்க கே.பி. சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். அதைவிட 25,000 ரூபாய் அதிகமாக தந்தால் நடிக்கிறேன் என்று ராதா கூற, மறுபேச்சின்றி அந்த சம்பளம் அவருக்கு தரப்பட்டது.

எம்.ஆர். ராதா நடிகவேள் ஆனது 1952-ல். திருச்சி தேவர் மன்றத்தில் ராதா போர் வாள் நாடகத்தை நடத்தினார். அப்போது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அளித்த பட்டம்தான் நடிகவேள்.

பெரியாரின் 101வது பிறந்தநாளான 17-09-1979 அன்று பெரியார் இறந்த நேரமாக காலை 7.25 மணிக்கு உயிர் துறந்தார் எம்.ஆர். ராதா. தனது 72 ஆண்டு வாழ்க்கையில் அவர் புரிந்த பகுத்தறிவு பிரச்சாரமும், சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலான போராட்டங்களும் அளப்பரிய. அன்றைய பெருமைக்குரிய இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி கார் வெறும் பெயிண்ட் அடித்த தகர டப்பாதான் என்று சொன்னவர் அவர்.


ராதாவின் சட்டென்று மாறும் மாடுலேஷன் குரலா, குறும்பு தெறிக்கும் நடிப்பா, பகுத்தறிவு பளீரிடும் வசனமா... எது அவரை தனித்துவப்படுத்துகிறது?

இவை அனைத்துமே என்றாலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் முதுகு வளைக்காத அந்த நேர்மையான துணிச்சல்... இன்று வரை எந்த நடிகனிடமும் காணக் கிடைக்காதது.

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ராதா ஒரு முறை உரையாற்றினார். சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் என்பதாகியிருந்தது அவரது உரை. சினிமாவில் உழைப்பு குறைவு, கூலி அதிகம் என்றவர் முத்தாய்ப்பாக இவ்வாறு சொன்னார் :

ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள். அதனால்தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்கிறேன்.

திரைத்துறையில் இருந்து கொண்டே அதன் சீரழிவை பேச ராதாவைப் போலொரு துணிச்சல்காரர் இன்று இல்லை. ராதா விட்டுச் சென்ற அந்த வெற்றிடம் இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. சூப்பர் ஸ்டார்களாலோ, உலக நாயகர்களாலோ, புரட்சி தளபதிகளாலோ கலைஞர்களாலோ நிரப்ப முடியாத உயரிய இடம் அது. ராதாவின் தனித்துவம் பிரகாசிக்கும் இடமும் அதுதான்!

நன்றி.....

Tuesday 24 September 2013

மன வருத்தம் தந்த சினிமா நூற்றாண்டு விழா


செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சில அம்சங்கள் திரையுலகினருக்கும், பிறருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கியமாக திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் தரப்படவில்லை. விழாவுக்கு முந்தைய நாள் வரை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு அழைப்பிதழ் தரவில்லை என அவரே இன்னொரு மேடையில் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைமொழி கொண்ட படைப்பாளி. தமிழின் சிறந்த பத்துப் படங்களை தேர்வு செய்தால் அவரின் வீடு படமும் இடம்பெறும். திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும், எப்படி அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா துறையில் அறிமுகப்படுத்தியவர் அவரே. அவரிடம் உதவி இயக்குனர்களாக யார் இருந்தாலும் தினம் ஒரு கதையை படித்து அதன் கதைச் சுருக்கத்தை எழுதித்தர வேண்டும். கண்டிப்பான தினம் ஒரு கதையாவது வாசிக்க வேண்டும்.

இதன் காரணமாகதான் வேறு எந்த இயக்குனருக்கும் இல்லாத அளவுக்கு பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி என அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் தமிழின் முன்னணி இயக்குனர்களாக பரிணமித்திருக்கிறார்கள் அவருக்கே அழைப்பில்லை.


இதில் உச்சகட்ட சோகம் நம்ம இளைய தளபதியை ஓரம்
கட்டியதுதான். பொதுவான விழாவுக்கு சொந்த கோபதாபங்களை காட்டுவது சரியானதல்ல. ஆனால் காலங்காலமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி சீட்டில் உட்கார வைப்பதால் விஜய்யின் மவுசு எதுவும் குறைந்துவிடப் போவது இல்லை. அதே நேரம் மனரீதியாக தொடுக்கப்படும் இந்த தாக்குதல்கள் எந்த நடிகருக்கும் நெருக்கடியானதே.

இதுபோன்ற நெருக்கடிகளை வெளிப்படையாக அணுக முடியாத மொண்ணையான அமைப்பாக திரைத்துறை இருப்பதுதான் கவலைக்குரியது. கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ இப்படி ஒரு நடிகரை தனியாக கட்டம் கட்ட முடியுமா?

விழா நடந்த அரங்கில் அழைப்பிதழ் வைத்திருந்த திரையுலகினர் பலரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அழைப்பிதழ் இல்லாத அதிமுக பிரமுகர்கள் போலீஸால் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல்வர் கிளம்பியதும் கூடவே கிளம்பிச் சென்றது முக்கியமானது.

திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய போது பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் முன் வரிசையில் அமர்ந்திருக்க விவேக், சிம்ரன், த்ரிஷாவுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்பட்டன. பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோருக்கு விருதில்லை. அதேபோல் கே.ஆர்.விஜயா, அஞ்சலி தேவி உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் முறையாக அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குரூப் போட்டோ எடுத்த போது பின்வரிசையில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.


விழா சரியாக திட்டமிடப்படவில்லை திறமையான பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்படவில்லை என பரவலான அதிருப்தி உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்த போது முக்கால்வாசி அரங்கம் காலியாக இருந்தது. சென்னை வந்திருக்கும் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் திரளாக விழாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் யாரையும் காணவில்லை.

இயக்குனர்கள் சங்கம் சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிடுவதாக இருந்தனர். தொடக்கநாள்வரை அந்த மலர் தயாராகவில்லை. தமிழுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறேன் என்று அங்கீகாரம் கோரும் ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நிறைந்திருந்தும் இயக்குனர்கள் சங்கத்தால் ஒரு மலரை குறிப்பிட்ட தேதியில் தயாரிக்கவோ, வெளியிடவோ முடியவில்லை.

தமிழின் முக்கிய படங்கள், ஆரம்பகால சினிமாக்கள் அழிந்துவிட்டன. முதல் தமிழ் மௌனப் படமான கீசகவதத்தின் பிரதி யாரிடமும் இல்லை. கீசகவதம் மட்டுமின்றி நடராஜ முதலியார் எடுத்த எந்தப் படத்தின் பிரதியும் இன்று நம்மிடம் இல்லை. இருக்கிற படங்களையாவது டிஜிட்டலில் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் அரசின் செவிகளை எட்டவில்லை. பாலுமகேந்திராவின் பல படங்களின் பிரதிகூட இன்று இல்லை. இப்படியொரு சூழலில் அவற்றை பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதுதான் ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும். கோடிகள் செலவழித்து டான்ஸ் புரோக்கிராம் நடத்துவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பி காசு பார்க்கலாம்.

பழைய படங்களை ஆவணப்படுத்தும் முயற்சி எப்போது மேற்கொள்ளப்படுகிறதோ அப்போதுதான் சினிமா நூற்றாண்டு விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

நன்றி!

Saturday 21 September 2013

கச்சா எண்ணெய் வர்த்தகம்


கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.

இப்போது ஒரு பிளாஷ்பேக்... 

ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடித்து, கார்கள் உற்பத்தியும் விற்பனையும் உச்சத்தை அடைந்த நேரம். உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு... தனது எதிர்காலம் கச்சா எண்ணெய்யின் வரத்துடன் சார்ந்து இருப்பதை அமெரிக்கா உணர்ந்த நேரம். அதே நேரத்தில் செளதி அரேபியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட நேரம்.


கப்பலில் ரூஸ்வெல்ட்-செளதி அரேபிய மன்னர்: 

இந் நிலையில், அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் எகிப்துக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான ரெட் சீ பகுதிக்கு ரகசியமாய் செல்கிறார். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த USS Quincy போர்க் கப்பலில் ரூஸ்வெல்ட் மற்றும் அப்போதைய செளதி அரேபிய மன்னர் இப்ன் செளத் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். அமெரிக்காவுக்கு தடையில்லாத கச்சா எண்ணெய் சப்ளை வேண்டும். இதை செளதி அரேபியா நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ரூஸ்வெல்ட்டின் கோரிக்கையை இப்ன் செளத் மெளனமாய் கேட்கிறார்.

சிக்கல் இல்லாமல் ஆட்சியில் இருக்க இதைச் செய்தால், 

உங்களது பரம்பரையே செளதியில் தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. அமெரிக்க ராணுவம் எப்போதும் செளதிக்கு (மன்னர் குடும்பத்துக்கு) ஆதரவாய் இருக்கும், உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் வருவோம் என்கிறார் ரூஸ்வெல்ட். ஆனால், நீங்கள் தரும் கச்சா எண்ணெய்க்கான பணத்தை நாங்கள் டாலர்களில் வழங்குவோம் என்கிறார். (அதற்கு முன் சர்வதேச வர்த்தம் பல்வேறு நாடுகளின் கரன்சிகளிலும் தங்கத்தையும் அடிப்படையாக வைத்து நடந்து வந்தது).


இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது: 

இதை செளதி மன்னர் ஏற்றுக் கொள்ள உலகின் மாபெரும் வர்த்தகம் (கச்சா எண்ணெய்) டாலர்களில் ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் உலகளவிலான பெரும்பாலான வியாபாரம் டாலர்களுக்கு மாறுகிறது. இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது. எல்லா நாடுகளும் தங்களது வேண்டியதை இறக்குமதி செய்ய டாலர்களை சேமித்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

பலவீனமான நிலை: 

இந் நிலையில் 1970ம் ஆண்டில் டாலரின் மதிப்பு சடாரென சரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை விற்று விற்று டாலர்களைக் குவித்து வைத்திருந்த வளைகுடா நாடுகளுக்கு பெரும் சிக்கல். அவர்களது அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர்கள்) வீங்கிப் போய், பலவீனமான நிலைக்குப் போனது. இதையடுத்து சில வளைகுடா நாடுகள் இனியும் டாலரை மையமாக வைத்து கச்சா எண்ணெய் வர்த்தம் செய்வது தவறு, இதை பல்வேறு கரன்சிகள் அடங்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்று குரல் தந்தன. குறிப்பாக, ஈரான். இதை கத்தார், இராக், யுஏஇ, வெனிசுவேலா ஆகியவை ஆதரித்தன.


செளதி அரேபியா இதை ஏற்கவில்லை: 

ஆனால், உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான செளதி அரேபியா இதை ஏற்கவில்லை. காரணம், செளதியில் அவ்வளவு டாலர்கள் இருந்தது தான். எண்ணெய் வர்த்தகத்தை மற்ற கரன்சிகளுக்கு மாற்றினால் அதனிடம் இருப்பில் உள்ள டாலர்களின் மதிப்பு பெருமளவில் சரிந்துவிடும். இது ஒரு குறுகிய கால பிரச்சனை தான். இருந்தாலும் அந்த ரிஸ்க்கை செளதி எடுக்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம்

இது தான் பின்னணி: 

(இதை இன்னும் விளக்க வேண்டுமானால்... ரூஸ்வெல்ட் தந்த உறுதிமொழிப்படி செளதி அரச குடும்பத்துக்கு இன்று வரை உறுதுணையாக நிற்கிறது அமெரிக்கா. செளதியில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா பேசுவதில்லை, அதே போல இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கோபம் வரும் அளவுக்கு, செளதியும் பெரிய அளவில் மூக்கை நுழைப்பதில்லை)

இது தான் செளதி நிலைமை: 

இப்படியே பல ஆண்டுகளாய், டாலர்களிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து இன்று என்ன நிலைமை என்றால் டாலரின் மதிப்பைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரயத்தனப்படுவது செளதி அரேபியா தான் என்ற நிலை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி செளதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டாலர்கள் தான். அதே போல செளதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டாலர்களாகவே இருந்தன. இப்போதும் நிலைமை அதே. இதனால், டாலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட செளதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது.


இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்: 

(இதன்மூலம் நாம் அறிவது என்னெவென்றால், டாலர் சர்வதேச கரன்சியாக கோலோச்ச வேண்டும் எனில் உலகளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர்களில் தான் தொடர்ந்து நடக்க வேண்டும். அது நடக்கும் வரை அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேண்டும் அளவுக்கு டாலர்களை அச்சடித்து செலவிடுவார்கள். ஆனால், மற்ற நாடுகள் தான் டாலர்களின் பின்னால் ஓடி, ஓடி அதை சேர்த்து வைக்க வேண்டும். டாலர்கள் கையில் இல்லாத நாட்டின் கரன்சிக்கு இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்.)

ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு: 

செளதியின் ஆதரவு இல்லாததால் டாலரைத் தவிர்த்த பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்யும் முடிவை மற்ற வளைகுடா நாடுகளும் நீண்ட காலததுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. ஆனால், ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு. நீண்ட காலமாகவே அமெரிக்காவின் டார்ச்சருக்கு உள்ளாகி வரும் ஈரான், ரஷ்யா- சீனா- இந்தியா போன்ற நாடுகளுடன் தனது வர்த்தகத்தை டாலரிலும் ரூபிளிலும், யுவான் மற்றும் ரூபாயிலுமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரானுக்கும் டாலர் தேவை. வெறும் ரூபிளையும் யுவானையும் ரூபாயையும் வைத்துக் கொண்டு அந்த நாடு என்ன செய்ய முடியும்?.

ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே..:

ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து அரிசி, பருப்பு, டீ, மருந்துகள், கருவிகள், ராணுவ தளவாடங்கள், மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்யலாமே தவிர, ரஷ்யா- சீனா- இந்தியாவில் கிடைக்காத, மற்ற நாடுகளில் கிடைக்கும் பொருள்களை இறக்குமதி செய்ய ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே.. இதனால், அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்றாலும், இதற்கு மேலும் இந்தியாவுக்கு ரூபாயில் ஈரான் கச்சா எண்ணெய்யை விற்குமா என்பது சந்தேகமே.

யூகோ வங்கியில் ஈரானின் ரூ. 30,000 கோடி: 

(இந்தியாவுக்கு ஈரான் விற்கும் கச்சா எண்ணெய்க்காக அந்த நாட்டுக்கு தரப்படும் பணத்தில் 45 சதவீதம் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கிக் கிளை மூலம் ரூபாயாகத் தரப்படுகிறது. இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து ரூ. 30,000 கோடிகளைத் தொட்டுவிட்டது. ஆனால், இதை ஈரான் இதை இன்னும் பயன்படுத்தவே இல்லை. காரணம், ரூபாயை வைத்துக் கொண்டு சர்வதேச சந்தையில் ஈரானால் ஏதும் வாங்க முடியவில்லை)


கப்பல்கள் இல்லை: 

மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொண்டு வர நாம் சார்ந்து இருப்பது அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் டேங்கர்களைத் தான். இந்த அளவுக்கு மாபெரும் டேங்கர்கள் இந்தியாவிடமும் இல்லை, ஈரானிடமும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த டேங்கர்களை ஈரான் பக்கமே போகக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டன. இதனால் ஈரானே முன்வந்தாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல. மேலும் தனது கச்சா எண்ணெய்க்கு ஈடாக ஈரான் ரூபாய்க்குப் பதிலாக தங்கத்தைக் கேட்கலாம். அதைத் தருவதிலும் இந்தியாவுக்குப் பிரச்சனை இல்லை.

பிரச்சனை அமெரிக்காவுக்கு அல்ல: 

ஆனால், இதில் அமெரிக்காவுக்குத் தான் பிரச்சனை. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர் தவிர்த்து வேறு எதிலும் (தங்கம் அல்லது ரூபாய்) நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது அந்த நாடு. இதனால் இந்தியாவுக்கு மறைமுகமாக பலவிதமான நெருக்கடிகளைத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வைத்துவிட்டது. இதனால் இழப்பு அமெரிக்காவுக்கு அல்ல. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் தான்!

நன்றி - முக நூல் 

Friday 20 September 2013

மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு...



சும்மா மோடிக்கு கண்மூடி ஜால்ரா அடிக்கும் சிலருக்கு...

இனிமே எவனாச்சும் மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவின் முதல் மாநிலம்ன்னு சொல்றவங்க இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு பேசுங்க...

இல்லன்னா ஓடி போயிருங்க..எதாச்சும் அசிங்கமா சொல்லிற போறேன்..

இந்தியாவின் சப்பான் குஜராத் என்று குட்டிகரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் லட்சணம்
என்னவென்று கீழ்காணும் பட்டியலை படித்து விட்டு இனி குஜராத் சப்பான்
சிங்கபூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!

*இந்தியாவில் தனி நபர் வருமானம் -
குஜராத்திற்கு 10 ம் இடம்.

*ஹூமன் டெவலப்மெண்ட் 527புள்ளிகள்
இந்தியாவில் 14 இடம்.

*ஜிடிபி(Gross domestic product (GDP) -
இந்தியாவில் 5ம் இடம்.
வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்திரபிரேதசம் கூட
3 ம் இடத்தில் உள்ளது.

*எழுத்தறிவில் 18 ம் இடம்

*ஏழைகள் குறைந்த மாநிலத்தில் 10 ம் இடம்.

*சாலைகள் பராமரிப்பு 11 ம் இடம்.

* தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தில் முதல் 4 நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.

*பிரவச கால குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12முதல் 14 வரை.

*மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்
ஆண்கள் 63.12
பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67, பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.

References:

1. http://www.rediff.com/business/slide-show/
slide-show-1-indian-states-with-highest-per-ca
pita-income/20120912.htm#10

2. http://en.wikipedia.org/wiki/Human_Developmen
t_Index
http://indiatext.net/hdi-india/

3. http://indiatext.net/gdp-indian-states/
http://www.census2011.co.in/literacy.php

4. http://business.rediff.com/slide-show/2010/
jul/15/slide-show-1-indias-top-10-states-with-
lowest-povtery.htm#9

5. http://www.infrawindow.com/reports-statistics/
road-denstiy-in-india-dispartiy-persist_15/

6. http://www.jagranjosh.com/general-knowledge/
indian-states-that-have-the-maximum-number-
of-industries-1303192911-1

7. http://infochangeindia.org/women/statistics/life-
expectancy-and-infant-mortaltiy-rates-for-
selected-indian-states.html

8. http://infochangeindia.org/women/statistics/life-
expectancy-and-infant-mortaltiy-rates-for-
selected-indian-states.html

டேய் அப்பாடக்கருகளா போதும்டா.... நீங்க ஓட்டுனது... ரீல் அறுந்து போச்சு..... 

Monday 16 September 2013

பிரதம வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் யார் கொடுத்தது ?


4 முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் !! நாட்டின் ஒரு கட்சியின் பிரதம வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் யார் கொடுத்தது ?

இந்திய அரசால் நான்கு முறை தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் ஆர் எஸ் எஸ் அது எப்படி ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பதை எல்லாம் சிந்திக்கின்ற மனநிலையில் யாரும் இங்கே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது . இந்த ஆர் எஸ் எஸ் இயக்கத்தை பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் தான் வாய் மூடி இருக்கிறார்கள் என்றால் அவர்களை மூலத்த்தை அறிந்தவர்கள் கூட இவர்களை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பது தான் நம்முடையா ஆதங்கமாக இருக்கிறது .

இன்றைய செய்தி நிறுவங்கள் எப்படி இருக்கிறது '' POST MAN JOB '' என்று சொல்லுவார்கள் அதை போல இருக்கிறது எது உண்மை எது பொய் என்று தெரியாமல் யாருடைய சுய லாபத்திற்காக எடுத்த வாந்தியே இவனும் எடுக்கிறான் பரபப்பு தலைப்புடன் வெட்கி தலைகுனிய வேண்டும் இந்த செயலுக்கு இப்போது இருக்கிற ஊடகம்.


பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.

ஆர் எஸ் எஸ் கொள்கைகளை படித்த எந்த சமூகத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் மனிதாபிமானம் உள்ளவன் இந்த இயக்கத்தை அடியோடு வெறுக்காமல் இருக்க மாட்டான் . இவர்களுடைய முகத்திரையே அவ்வப்போது தி .க மற்றும் கம்யூநிஸ்ட் இயக்கவாதிகள் மற்றும் சமூக எழுத்தாளர்கள் பலர் சுட்டி காட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.


இன்றும் இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளை சார்ந்தவர்கள் சிறையில் இருக்கத்தான் செய்கிறார்கள் அப்படி இருக்கும் போது இவர்கள் எப்படி நாட்டின் முக்கியமான இடம் வகிக்கும் பிரதம வேட்பாளரை தேர்தெடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது ?

யாரும் கொடுக்க வில்லை இவர்களே உருவாக்கியது தான் இந்த பாரதிய ஜனதா கட்சி இதில் முற்றிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பில் உள்ளவர்கள் தான் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் . அதுவும் உயர் சாதியே சார்ந்தவர்கள் தான் . ஒன்றும் அறியாத சாதாரண  ஹிந்து மக்களை மூளை சலவை செய்து நாட்டில் கலவரங்களை உருவாக்கி ஆட்சியே பிடிப்பதே இவர்களுடைய முக்கிய நோக்கம்


இவர்கள் நாட்டில் நடந்த கலவரங்கள் குண்டுவேண்டிப்புகளில் முக்கிய பங்கு உள்ளவர்கள் ஆர் எஸ் எஸ் எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளை சார்ந்தவர்கள் லோகேஷ் சர்மா,தேவேந்திர குப்தா ,புரோஹித் ,ராம்ஜி ,சந்தீர்ப டாங்கே ,தயாநந்த் பாண்டே ,சுனில் ஜோஷி ,யோகி ஆதித்யநாத் , இந்திரேஷ் குமார் ,சுவாமி அசீமானந்தா , இன்னும் சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.


சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள். இப்படி பொய்யே சொல்லி நஞ்சை உருவாக்கும் கூட்டம் .சில இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் என்று கூறி தடை செய்த இந்திய அரசு . அந்த செயலுக்கு முழு காரணமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தை இன்னும் ஏன் முழுமையாக தடை செய்யவில்லை எனபது தான் கேள்வி குறியாக இருக்கிறது

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்! 

Sunday 15 September 2013

தோரணம் 15/09/2013


நியாயமான கேள்வி;

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !
...
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !

காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !

இதுதான் இன்றைய மனிதனின் நிலை.
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!


இந்த வார நகைச்சுவை;

ஒரு இண்டர்வியூ வின் போது,,
மேலாளர் :

நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய
சொல்லுங்க

பையன்: ஓகே சார்,, சொல்லுங்க நான்
ட்ரை பண்றேன்.,

மேலாளர் : நல்லது,
பையன் : கெட்டது,

மேலாளர் : வாங்க சார்,
பையன் :போங்க சார்,

மேலாளர் : அழகு
பையன் : ஆபத்து,

மேலாளர் : நீங்க தப்பா சொல்றிங்க,
பையன் : நான் சரியா சொல்றேன்,

மேலாளர் : பேச்ச நிறுத்து,
பையன் : தொடர்ந்து பேசு,

மேலாளர் : இப்போ வாய
மூடுரியா இல்லையா

பையன் :
இப்போ பேசுறியா இல்லையா?

மேலாளர் :
நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன் :
தொடங்குடா எல்லாத்தையும


மேலாளர் : போடா வெளிய,
பையன் : வாடா உள்ள,,

மேலாளர் : ஐயோ கடவுளே..,
பையன் : ஆஹா பிசாசே,

மேலாளர் : யு ஆர் ரிஜக்டேட்.,
பையன் : ஐ ஆம் செலக்டட்...,-


கனிவாய் பேசுங்கள்;

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவேமகனை பெற்றுக்கொள்வதைவிட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றேஅழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரதுமனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..


இந்த வார கவிதை;

ஹைக்கூ;

ஐந்தில் தெரியாத அருமை..........

ஐம்பதில் தெரிந்தது......

முதியோர் கல்வி !

எழுதியவர்; வெ . ராம்குமார் வேலூர்

சுய மதிப்பிடு; 

திருவோடு சுமந்தும்....

பிச்சை எடுக்கவில்லை....

ஆமை !

எழுதியவர்; டி.எஸ்.ரேவதி



தேவையா...இவையெல்லாம்....?

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில்

மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...

இவையெல்லாம்....?


நன்றி.....

Saturday 14 September 2013

சண்டைக்களமாகும் நடிகர் சங்கம்


பெரிய பெரிய ஜாம்பவான்களின் முயற்சியால் உருவானது நடிகர் சங்கம். அன்று மதராசப்பட்டிணமாக இருக்கையில் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு தமிழகம்தான் சினிமா தலைநகரமாக இருந்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென்று தனித்தனி நடிகர் சங்கங்களை உருவாக்கிக் கொண்டன. பொதுவான ஒன்று என எந்த மாநிலத்திலும் இல்லை.

தமிழன் இளிச்சவாயன் ஆயிற்றே. தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. கேட்டால் அர்ஜுன், பிரகாஷ்ராஜ் அமலா பால், நயன்தாரா என்று எல்லா மொழி நடிகர்களும் நடிப்பதால் இந்த பெயர் என்கிறார்கள். விளக்கெண்ணைய். மலையாளத்திலும்தான் கமல், மீனா, தேவயானி தொடங்கி எல்லோரும்தான் நடிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடத்திலும் அப்படித்தானே? தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கும்வரை என்னுடைய மகன் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக மாட்டான் என்று சில வருடங்கள் முன் பாரதிராஜா அறிவித்தார். மனோஜ் கே. பாரதி நடிகர் சங்க உறுப்பினரா தெரியாது. ஆனால் பாரதிராஜாவின் கோபத்தில் நியாயம் உண்டு.


கடன் மேலும் கடன் என்று தத்தளித்த சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த். அவர் தலைவராக இருந்த நேரம் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கக் கடனை அடைத்தார். சங்க வங்கிக் கணக்கில் எட்டு கோடிவரை பணமும் கையிருப்பில் இருந்தது. ஆனால் இன்று...?

இந்தக் கேள்விக்குறிதான் இப்போதைய பிரச்சனைக்கு முழுக் காரணம். சரத்குமார் தலைவர், ராதாரவி செயலாளர் என்று ஆன பிறகு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது, பொதுக்குழுவின் அனுமதியில்லாமல் தனியாருக்கு சங்க இடத்தை தாரை வார்த்தது.

18 கிரவுண்ட் நிலம் சங்கத்துக்கு சொந்தம். அதில்தான் கம்பீரமாக நின்றது சங்கக் கட்டிடம். அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம், செலவேயின்றி நமக்கும் கட்டிடம் கிடைக்கும், தியேட்டர் கிடைக்கும் என்றெல்லாம் ஆசைகாட்டி நிலத்தை தாரை வார்த்தனர். சத்யம் குழுமத்துடன் ஒன்றரை கோடிக்கு 2010 நவம்பர் 25 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கான அனுமதியை கூட்டம் போட்டு கேட்டது 2011 ஜனவரி 19 ல். சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் கல்யாணத்துக்கு நாள் குறித்த கதை. முதல் டென்ஷன் இதில்தான் தொடங்கியது. சொந்த தோட்டத்தை விற்று அதில் கூலிக்கு வேலை செய்ய சேர்ந்தால் எப்படியோ அப்படிதான் சங்க நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததும். அதை செய்ய சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது அவர்களை எதிர்ப்பவர்களின் கேள்வி?

முறையாக அனுமதி வாங்காமல் சங்கக் கட்டிடத்தை இடித்ததால் வழக்கு தொடரப்பட்டு கட்டிடம் இருந்த இடம் இப்போது கழிப்பறையாக கேட்பாரின்றி கிடக்கிறது. சங்கத்தின் கையிருப்பு என்னவாயிற்று என்பது இன்னொரு கேள்வி.


இதனை யார் கேட்டாலும் அதிகாரத்தை வைத்தும் சங்க விதிகளை காட்டியும் அவர்களை கட்டம் கட்டும் வேலையை ராதாரவி செம்மையாக செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகட்ட துணிந்தவர் விஷால். துணைக்கு ஆர்யா, கார்த்தி, சூர்யா என்று இளம் டீம். இவர்களின் கையெழுத்து வேட்டைக்கு ஆதரவாக சிவகுமார், நாசர், கமல்ஹாசன் போன்ற பெரிய தலைகளும் ஆதரவு தந்திருக்கிறார்கள். நெருக்கடி முற்றிய நிலையில் வரும் 18 ஆம் தேதி பேரவை கூட்டத்தை சரத், ராதாரவி தரப்பு கூட்டியிருக்கிறது.

பேரவை கூட்டத்துக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது, உறுப்பினர் அட்டை இல்லாதவருக்கு, அரங்க வாசலில் கையெழுத்து இடாதவருக்கு அரங்கத்தில் அனுமதி இல்லை என ஏக கெடுபிடி. அதேபோல் நிகழ்ச்சி நிரலிலும் அவர்களின் ஆதிக்கம் தான். ஆண்டறிக்கையை - வரவு செலவு கணக்குகளை படித்து ஏற்றுக் கொள்ளுதல். சங்கத்தை பற்றியும், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை பற்றியும் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள் பற்றி முடிவெடுத்தல் என்று எல்லாமே அதிகாரத்தின் கட்டளைகள் போலிருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயம். ஒவ்வொரு ஆண்டிற்கான சந்தாவையும் ஜனவரி 31 க்குள் கட்ட வேண்டும். நடிகர் பூச்சி முருகன் உள்ளிட்ட சிலர் ஜனவரி 5 ஆம் தேதியே டிடி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நேரில் பணம் கட்டியிருக்க வேண்டும், டிடி செல்லாது என்று பிப்ரவரியில் டிடி யை திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அதாவது பூச்சி முருகனும் மற்றவர்களும் சங்க உறுப்பினராக இனி தொடர முடியாது.


இந்நிலையில் பேரவை கூட்டத்தின் நோட்டீஸில் இதற்கு நேரெதிரான வாசகம் ஒன்றை சேர்த்திருக்கிறhர்கள்.

2013 ஆம் ஆண்டு சந்தாவை 31-03-2013 க்குள் செலுத்தத் தவறியதால் சங்க விதி எண் 11 ன்படி உறுப்பினர் பதவி இழந்தவர்கள் சிலர் தங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி நிர்வாகிகளிடம் கொடுத்த விண்ணப்பங்கள் பற்றி முடிவெடுத்தல்.

சந்தாவை ஜனவரி 31 க்குள் செலுத்தவில்லை என்று பூச்சி முருகன் உள்ளிட்ட சிலரின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் இதில் கடைசிதேதி 31-03-2013 என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் வாசகம் உள்ளது.

நடிகர் சங்கத்தில் ராதாரவிக்கு ஆதரவான நாடக நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.


தேர்தல் நேரத்திலும் இதுபோன்ற இக்கட்டான நேரங்களிலும் அவர்களின் ஆதரவுதான் ராதாரவியையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறது. நடிகர் சங்கத்தில் காலாவதியான நாடக நடிகர்கள் எதற்கு என்று நாசர் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்பது இதனால்தான். சிவாஜி, பாலையா என்று நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களே நாடகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்று இதற்கு ராதாரவி ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். சிவாஜி நாடகத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர் சினிமா நடிகர். ஆனால் இங்கு உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்காதவர்கள். ஊரில் செட்டிலாகிவிட்ட காலாவதியான நாடக நடிகர்களை கைக்குள் போட்டு பெரும்பான்மை எங்களுக்குதான் என்று சங்கத்தை புதைகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. அந்த நாடக நடிகர்களை மீண்டும் உறுப்பினர்களாக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான், உறுப்பினர் பதவி இழந்தவர்களுக்கு கருணைகாட்டும் மேற்படி வாசகம்.


சங்கத்தின் சொத்துக்களை நிர்வகிக்கவும், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ட்ரஸ்டில் தலைவர், செயலர், பொருளாளர் உள்பட ஒன்பது பேர் இருக்க வேண்டும். ஆனால் சரத்குமார், ராதாரவி தவிர வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. சர்ச்சைக்குப் பின் வாகை சந்திரசேகரை மட்டும் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அதேபோல் சங்க செயற்குழுவில் நான்கைந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் பெயரும் முகமும் தெரியாத ராதாரவி ஆதரவு நாடக நடிகர்கள்.

சங்கம் இன்று ராதாரவி எனும் தனி மனிதனின் ஆட்சிக்குட்பட்ட தனியார் நிறுவனமாகதான் இயங்குகிறது. அதனை கேள்விக்குட்படுத்தும் எவரையும் கட்டம் கட்டுவதற்கு கூட்டப்பட்டதுதான் 18 ஆம் தேதி நடக்கயிருக்கும் பேரவை கூட்டம். ராதாரவியையும், சரத்குமாரையும் தூக்கியெறியாதவரை நடிகர் சங்கத்துக்கு விமோசனமில்லை என்பதுதான் இளம் நடிகர்களின் கூற்றாக இருக்கிறது. நடக்கிற விஷயங்களும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

நன்றி-சினிமா செய்திகள்

Thursday 12 September 2013

பிராய்லர் கோழி : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!



பிராயலர் கோழி தற்போது கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா?

பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே…

இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்.

மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை.

ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு.

அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது.

அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு.

ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம்.

பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Wednesday 11 September 2013

அஜித்திற்காக விட்டுக்கொடுத்த சிம்பு

{அண்ணே தலைவா படம் ஊத்திகுச்சு}  

அஜித்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு வெளியாவதால் தனது படமான வாலுவின் வெளியீட்டை தள்ளிப் போட்டுள்ளாராம் சிம்பு.

அஜித் குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ள ஆரம்பம் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

அதே நாளில் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜாவும், ஆர்யாவின் இரண்டாம் உலகமும் திரையிடப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாகவிருந்த சில படங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

நான் எல்லாம் 'தல' ரசிகராக்கும் என்று சொல்லித் திரிபவர் சிம்பு என்பது அனைவரும் அறிந்ததே.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த சிம்புவின் வாலு படம் ஒரு வழியாக தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

அஜித் படத்துடன் தன் படம் மோத வேண்டாம் என்று நினைத்த சிம்பு வாலு படத்தின் வெளியீட்டு திகதியை தள்ளிப் போட்டுவிட்டாராம்.

Monday 9 September 2013

கபாலி இன்னா சொல்றாருன்னா 09/09/2013


எழுத்துகள்;

தமிழ் மொழி 247 எழுத்துகள் கொண்டது என்பது நமக்கு தெரியும் அதேபோல பிற மொழிகளும்  எத்தனை எழுத்துகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

ஆங்கிலம் -  26 எழுத்துகள்
ஸ்பெயின் - 27 எழுத்துகள்
இத்தாலி  - 20 எழுத்துகள்
அரபு - 28 எழுத்துகள்
லத்தின் - 22 எழுத்துகள்
துருக்கி - 28 எழுத்துகள்
கிரேக்கம் - 24 எழுத்துகள்
பாரசீகம் - 31 எழுத்துகள்
ஜெர்மனி - 26 எழுத்துகள்
சமஸ்கிருதம் - 48 எழுத்துகள்
பிரெஞ்சு - 26 எழுத்துகள்
சீனா - 214 எழுத்துகள்


தெரிந்து கொள்ளுங்கள் ;

1. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம் லண்டனில் உள்ள 'மெட்ரோ பாலிடன் லைன்' ஆகும்.

2. விமானம் ஓட்ட லைசென்ஸ் பெற்ற முதல் இந்திய தொழில் அதிபர் ஜே.ஆர்.டி.டாடா ஆவார்.

3. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு அமெரிக்கா.

4. 'இக்ளு' எனப்படும் வீடுகள் பனிக்கட்டிகளால் கட்டப்பட்டது.

5. தங்க கடற்கரை என்று அழைக்கப்பட்ட ஆப்ரிக்க நாடு கானா ஆகும்.

6. ஆங்கில கால்வாயை முதலில் நீந்தி கடந்தவர் 'மேத்யு வெப்' ஆவார்.

7. செவ்வாய் கிரகத்தில் முதலில் இறங்கிய ரோபோ 'ஆரெஸ் வல்லிஸ்'


எறும்பு ?  

எறும்புகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடம். 50 முதல் 100 நாட்கள் வரை இரை இல்லாமல் உயிர் வாழும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு. ஆனால் அவற்றின் சேமிப்பு பழக்கத்தால் அவை பட்டினி கிடக்கும் வாய்ப்புகள் குறைவு தான். ஏனெனில் ஒவ்வொரு எறும்புக்கும் தல 200 கிராம் உணவு வீதம் சேமித்து வைக்கபட்டிருக்கும்.


உலகின் அசுத்தமான நகரங்கள்;

உலகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, அசுத்த காற்று மற்றும் காரில் இருந்து வெளி வரும் அசுத்த புகை ஆகியவற்றை கணக்கிட்டு  அசுத்த நகரங்களாக 5 நகரங்களை குறிப்பிட்டுள்ளனர் அவை;

1. பாங்காங்
2.பீஜிங்
3.டெல்லி
4.கொல்கத்தா
5.டெக்ரான்

இன்னும் பிற தகவல்களுடன் வேறொரு பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்!

Thursday 5 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - கிளம்பிட்டான் டா கைப்புள்ள


அதிர்ஷ்டம் ஒரு மனுஷனுக்கு வந்தா கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டுமாம் அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ நம்ம விஜய் சேதுபதிக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் நன்றாக பொருந்தும். தமிழ் சினிமாவின் தற்போதைய தவிர்க்க முடியாததாக நடிகர்களாக இருவரும் உள்ளனர்.

மிமிக்ரி ஆர்டிஸ்டா டிவில நுழைந்து பின்பு தொகுப்பாளராக வந்து நடிகராக அறிமுகம் ஆகி இப்போ கலக்கி கொண்டு இருக்கிறாரு நம்ம சிவா. அவருக்கு அடுத்தடுத்து வரிசையா வந்து படங்கள் குவிக்கிறது. இவரோட நடிப்பில் நாளை வெளியாகும் படம் வருத்தபடாத வாலிபர் சங்கம்.

படத்தை வாங்கியவர்களும் எந்த வருத்தமும் இல்லாமல் ரிலாக்சாக இருக்கிறார்கள். காரணம் சிவ கார்த்திகேயன். இவரின் காமெடிப் படங்கள் வெற்றி பெற்றதால் இளைஞர்கள் மத்தியில் சிவ கார்த்திகேயன் என்றால் வரவேற்பு இருக்கிறது. முக்கியமான இன்னொரு காரணம், படத்தின் டீம்.

படத்தை இயக்கியிருக்கும் பொன்ராம் ராஜேஷ் எம். மின் பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். தன்னுடைய சிஷ்யன் கேட்டு கொண்டதற்காக இந்தப் படத்துக்கு ராஜேஷ் எம். தான் வசனம் எழுதியுள்ளார்.


தேசிங்குராஜாவில் காமெடி என்ற பெயரில் நம்மை எல்லாம் அடித்து துவைத்து தொங்க விட்ட பரோட்டா சூரிதான் இதிலும் காமெடி செய்கிறார். இந்த படத்திலாவது பேசியே சாவ அடிக்காம சிரிக்க வைக்கிறாரா என்று பார்ப்போம். எல்லாவற்றுக்கும் மேல் புரட்சி தமிழன் சத்யராஜ் இருக்கிறார்.

சிவ கார்த்திகேயனுக்கும், சத்யராஜுக்குமான மோதல்தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள். ஹீரோயினாக நடித்திருப்பவர் ஸ்ரீ திவ்யா. இவருக்கும் சிவாவிற்கும் கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, பிசிக்ஸ் எல்லாம் நன்றாக இருக்கிறதா என்று நாளை பார்த்து விடுவோம்.


டி.இமானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ஊதா கலரு ரிப்பன் இப்போ என்னோட பேவரிட் பாட்டு. சுப்பிரமணியெம் ஒளிப்பதிவு. சிவ கார்த்திகேயனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். 30 லட்சம் பேர் அதை பார்த்திருக்காங்க என்ற பூரிப்பு சிவ கார்த்திகேயனுக்கு. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை தயாரித்திருக்கிறார்.

வாலிபர் சங்கத்தில் இம்ப்ரசான திருப்பதி பிரதர்ஸ் சிவ கார்த்திகேயனை இயக்கும் பொறுப்பை பூபதி பாண்டியனிடமிருந்து பொன்ராமிடம் தந்திருக்கிறது. படத்தின் வெற்றிக்கு இதைவிட கட்டியம் கட்டி கூற முடியுமா என்ன. ஆனால் படம் ஊத்தி கொண்டால் அது லிங்குசாமி க்கே வெளிச்சம்.



உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே !



தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

இது ஒரு மீள் பதிவு..

Tuesday 3 September 2013

சும்மா நச்சுன்னு இருக்கு - அப்படி ஒன்னும் மோசம் இல்லை


ஆக்ஷன் மசாலாக்களை மட்டுமே எடுத்து வந்த ஏ.வெங்கடேஷ், மசாலாவுக்கு இப்போது மரியாதை குறைவு என்பதை உணர்ந்து, மக்கள் ரசனைப்படி திறந்திருக்கும் காமெடி கடைதான் இந்த சும்மா நச்சுன்னு இருக்கு.

பி.விமல் படத்தை தயாரித்திருக்கிறார். பவர் ஸ்டார் திகாரில் நடிப்பு பயிற்சி பெறுவதற்கு முன் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் கதை, காட்சி, ஹைலைட் என்று எதைக்கேட்டாலும் ஏ.வெங்கடேஷ் பவர் ஸ்டாரிலிருந்துதான் தொடங்குகிறார். அவரு ஒரு டான்சில் சிம்பு, விஜய் மாதிரி ஆடியிருக்கிறார். சில சீன்ஸ்ல முன்னணி ஹீரோக்களை இமிடேட் செய்திருக்கிறார்.... இந்த மாதிரி.

தமன்குமார், தம்பி ராமையா, அர்ச்சனா ஆகியோருடன் ஏ.வெங்கடேஷும் நடித்துள்ளார். அச்சு என்பவர் இசையமைக்க, சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், வி.டி.விஜயன் எடிட்டிங்.

பவர் ஸ்டாரின் இம்சைகளை சுகமான சுமைகளாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கான படம்.


கதை;
கதையின் நாயகன் தமன் குமார் ஊரில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னைக்கு வந்து அவரது நண்பர்களான தம்பி ராமையா, ஈரோடு மகேஷ் ஆகியோருடன் ஆட்டோ ஒட்டி கொண்டு இருக்கிறார். நாயகி விபா காதலனை கரம் பிடிக்க மலேசியாவில் இருந்து இந்தியா வர ஒரு இரவில் ரௌடி கும்பலால் விரட்ட படுகிறார். அப்போது நமது நாயகன் அவரை காப்பாற்ற ரௌடி ஒருவன் வீசிய கல் நாயகியின் தலையில் அடிக்க அவர் கோமாவில் விழுகிறார்.

நாயகியை காண அவர் குடும்பம் இந்தியா வர அவர்கள் தமனை விபாவின் காதலன் என தப்பாக நினைக்க பணத்திற்காக தமனும் நாயகியின் காதலனாய் மலேசியா தனது நண்பர்களோடு பயணமாகிறார்.

அங்கு நாயகியின் அப்பாவின்{எ.வெங்கடேஷ்} தம்பி{பவர் ஸ்டார்} தனது அண்ணன் சொத்தில் பங்கு தராததால் அவரை பழிவாங்க சந்தர்பம் எதிர்பார்த்து காத்து இருக்கிறார். தமனை கடத்தி தன் அண்ணனை மிரட்டி சொத்தில் பங்கு வாங்கலாம் என நினைக்கிறார்.

தமன் ஆள் மாறாட்டம் செய்ததில் மாட்டி கொண்டாரா ?
நாயகியின் காதல் என்ன ஆனது ?
பவர் ஸ்டார் சொத்தை கை பற்றினரா ?

என காமெடி ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.


தமன்குமார் நல்ல நடிச்சு இருக்கார் குறை சொல்ல ஒன்னும் இல்லை. நாயகியாக விபா,அர்ச்சனா இதுல விபா முக்கால்வாசி படத்துல்ல கோமள படுத்துராங்க அதனால சொல்ல ஒன்னும் இல்ல. அர்ச்சனா நாயகியின் தங்கை தமனின் நல்ல குணத்தை பார்த்து லவ் பண்றாங்க ஓகே.

படத்தில் என்னை கவர்ந்தது தம்பி ராமையா,ஈரோடு மகேஷ் அப்பறம் நம்ம தமிழகத்தின் பொக்கிஷம் பவர் ஸ்டார் தான்.

படம் வழக்கம் போல நம்ம பவர் ஸ்டார் என்ட்ரி ஆனதும் செம்மையா கீது. தம்பி ராமையாவின் காமெடி சூப்பர். படத்துல்ல குறையே இல்லையான்னு கேட்டா நிறைய இருக்கு பாட்டெல்லாம் ஒண்ணுமே நல்லா இல்ல. ஆனாலும் பெரிய ஹிரோ பெரிய பட்ஜெட் அப்படின்னு நம்மகிட்ட 150 ரூபாய் கொள்ளை அடிக்காம வெறும் 60 ரூபாய்க்கு நம்மள நல்லா சிரிக்க வச்சு அனுப்புறாங்க.

சும்மா நச்சுன்னு இருக்கு ஜாலி யா ஒரு தடவ போயி பார்க்கலாம் பாஸ்.


Monday 2 September 2013

வாலிப கவிஞர் வாலி -யின் சிறப்பு செய்திகள்


நூறாண்டு காண வேண்டிய வாலியை காலன் 82ல் எடுத்துக் கொண்டான். அதனால் என்ன. நீலக்கடல் காயலாம், வார்த்தை சமுத்திரம் வற்றவா போகிறது.

1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வ‌ரி எழுத வரலைன்னாதான் மூட் ச‌ரியில்லைன்னு வேடிக்கையாகச் சொல்வார்.

2. புதிய இசையமைப்பாளர் என்றால், நாலஞ்சு படம் பண்ணுங்க, அப்புறம் பார்த்துட்டு உங்க இசையில எழுதறேன் என்று திருப்பி அனுப்பி விடுவார். ஜென்டில்மேனுக்காக ரஹ்மானிடமும் அதேதான் சொன்னார். நான் சேகரோட மகன் என்று ரஹ்மான் சொன்னதும் ஆச்ச‌ரியப்பட்டு பாடல் எழுத சம்மதித்தார். அந்தப் பாடல்தான் ஜென்டில்மேனில் வரும் சிக்கு புக்கு ரயிலே.

3. இளம் கவிஞர்களின் பாடல் வ‌ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்‌ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப‌ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.

4. வாலி எழுதிய சில பாடல்கள் பயங்கர எதிர்ப்பை சந்தித்தன. முக்கியமாக சகலகலாவல்லவனில் வரும் நேத்து ராத்தி‌ரி யம்மா, இந்துவில் வரும் சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி. மிகப்பொpய வார்த்தை தாக்குதல்களை சமைஞ்சது பாடலுக்காக வாலி எதிர்கொண்டார்.

5. வாலியும், நாகேஷும் வாடா போடா நண்பர்கள். வாய்ப்பு தேடிய காலத்தில் தி.நகர் காபி ஹவுஸில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். வாலிக்கு பேப்பர் வாங்கித் தந்து, எதையாவது எழுது என ஊக்கப்படுத்தியவர் நாகேஷ்.

6. இளையராஜா இசையில் வாலி முதலில் எழுதிய பாடல், பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற, வாங்கோண்ணா...

7. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில் வாலி வேலை பார்த்த போது அவர் எழுதிய நாடகங்களுக்கு மனோரமா நடித்திருக்கிறார்.

8. வாலியின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். வாலிக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோத‌ரிகள்.

9. உழைப்பில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். விடா முயற்சியும், உழைப்புமே தன்னை இப்படியொரு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். என்றாவது ஒருநாள் உங்கள் வியர்வை உங்கள் உயர்வை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பார் வாலி.

10. சின்ன வயசிலேயே எழுத்தும், கவிதையும், ஓவியமும் வாலியை ஆக்கிரமித்துவிட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்த போது நேதா‌ஜி என்ற கையெழுத்துப் பத்தி‌ரிகையை நடத்தினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் பிரபல எழுத்தாளர் கல்கி.

11. சிலேடைப் பேச்சில் வித்தகர். பாய்ஸ் படத்துக்காக பொருள் இல்லாமல் ஒரு பாடல் (டேட்டிங் பாடல்) வேண்டும் என வாலியிடம் இயக்குனர் ஷங்கர் கேட்ட போது வாலியின் பதில், பொருள் இல்லாமல் நான் பாடல் எழுதறதில்லை (அந்தப் பாடலுக்கு மட்டும் ஒரு லட்சம் பெற்றதாக கேள்வி).

12. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அவரை அவரது தயார் ரங்கப்பா என்றுதான் அழைப்பார்.

13. கண்ணதாசன் மீது அதிக ம‌ரியாதை கொண்டவர். அவர் இறந்த போது, எழுதப் படிக்கத் தெ‌ரியாதவர்களில் எமனும் ஒருவன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான் என்று எழுதினார்.

14. சென்னைக்கு பாடல் எழுதுவதற்காக முதலில் வந்த போது வாலி திருவல்லிக்கேணியில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர் தெருவில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். வாடகை மாதம் ஐந்து ரூபாய்.

15. நன்றி மறக்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்தப் பிறகுதான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்தது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்வார். எம்எஸ்வியை சந்திக்கும் முன்பு எனக்கு சோத்துக்கே வழியில்லை, அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என்றும், எம்எஸ்வியை சந்திப்பதற்கு முன் த‌ரித்திரம் என்னை தொட்டது, அவரை சந்தித்த பிறகு ச‌ரித்திரம் தொட்டது எனவும் கூறுவார்.

16. சக கலைஞர்களைப் பாராட்டி திடீர் கவிதை புனைவார். கவிஞர் முத்துலிங்கத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். பாடகி பி.சுசீலாவை குறித்து அவர் எழுதியது,

சுசீலாவே - நீ
விளைந்த இடம் விஜயவாடா
கடவுள் கலந்து வைத்தான்
நீ விளையும் போதே
குரல்வளையில் விஸ்கி, சோடா.

17. கண்ணதாசனுடன் எம்.‌ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.‌ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.

18. ஏவிஎம் முக்காக வாலி எழுதிய முதல் பாடல், அவளுக்கென்ன அழகிய முகம்... சர்வர் சுந்தரம் படத்தில் இடம் பெறுவது. இரவு நேரம் தான் போதையில் இருந்த போது மெய்யப்ப செட்டியார் ஆள்விட்டு அழைத்து அந்தப் பாடலை எழுதி வாங்கியதாக வாலி தெ‌ரிவித்திருக்கிறார்.

19. வாலி கேமராமேன் மாருதிராவுடன் இணைந்து வடைமாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

20. வாலிக்கு சென்டிமெண்டில் நம்பிக்கை உண்டு. ம வ‌ரிசையில் அவர் எழுதியப் பாடல்கள் வெற்றி பெற்றதை ரஹ்மான் சுட்டிக்காட்டிய பிறகு ம வ‌ரிசையில் பல பாடல்களை எழுதினார். அழகிய தமிழ்மகனில் வரும் முன்னால் முன்னால் வாடா... சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா அன்பே வா... ஆகியவை அப்படி எழுதியவை.

21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரு‌ம் நான் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வ‌ரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வ‌ரியை சொன்னவர் கருணாநிதி.

22. வாலியின் மனைவி ரமண திலகம். தனது லவ் லட்டர் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த அவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்தார் வாலி.

23. வாலி பார்த்தாரே பரவசம், ஹேராம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம், பாலசந்த‌ரின் பொய்க்கால் குதிரை.

24. எம்.‌ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.

25. பாடல் எழுதி வாங்க வாலியின் வீட்டிற்கு எம்.எஸ்.வி. தொடங்கி ரஹ்மான்வரை அனேகமாக தமிழின் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். இது வாலிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

24. கோபக்காரர். வாலின்னாலே கோபம்தான் ஞாபகம் வரும் என்று கமல் ஒருமுறை கூறினார். இதையே ர‌ஜினியும் கூறியிருக்கிறார்.

25. சக கவிஞர்களை மதிப்பதில் வாலிக்கு நிகர் வாலிதான். அதேநேரம் சிறந்த பாடல்களை கேட்டால் எப்படி நாம் அதனை தவறவிட்டோம் என நினைக்கக் கூடியவர். கவிஞர் தாமரையின் ஒரு பாடலை கேட்டு இரவு தூங்க முடியலை என்று கூறியிருக்கிறார்.

26. பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. கே.வி.மகாதேவன் பாடல் வாய்ப்பு கேட்டுப் போன வாலியை அவர் காது படவே திட்டி அனுப்பியிருக்கிறார். எம்.எஸ்.வி.யும் வாலிக்கு சினிமாவுக்கு பாடல் எழுத வராது, பேசாமல் வானொலி வேலையை பார்க்கச் சொல் என்று வாலியின் நண்ப‌ரிடம், வாலி விஸ்வநதனை சந்திக்கச் சென்ற போது கூறியிருக்கிறார்.

27. எம்.‌ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.‌ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.

28. வாலிக்கு நெடுங்காலமாக மது அருந்தும் பழக்கம் உண்டு. பேச்சிலராக இருந்த போது அவரது மாலைப்பொழுது ஸ்காட்ச் விஸ்கியுடன்தான் தொடங்கும்.

29. ரோஷக்காரர். பாரதவிலாஸ் படத்தில் வாலி எழுதிய இந்தியா என்பது என் வீடு பாடலுக்கு தேசிய விருது தருவதற்காக வாலியிடம் அவரது பயோடேட்டாவை கேட்டனர். வாலி தரவில்லை. அந்தப் பாட்டுக்கு தேசிய விருதுக்கான தகுதியிருந்தா யாரு எழுதினது என்று பார்க்காமல் விருது தரணும், எங்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதுக்கு எந்த விருதாக இருந்தாலும் வேண்டாம் என்று தேசிய விருதையே மறுத்தார்.

30. ஈகோ இல்லாமல் எதையும் முன் வைப்பவர். வாலி அவதார புருஷன் எழுதுவதற்கான தூண்டுதல்களில் ஒன்று, மு.மேத்தாவின் நபிகள் காவியம். ஒரு இந்து விளக்கை ஒரு இஸ்லாமிய விளக்குதான் ஏற்றி வைத்தது என அதனை குறிப்பிட்டார்.

31. வாலியையும் வார்த்தையையும் பி‌ரிக்க முடியாதது போல அவருடன் இருந்த இன்னொரு பழக்கம் தாம்பூலம் போடுவது. ஐம்பது வருடங்களுக்கு மேல் தாம்பூலம் போட்டு வந்தார் வாலி. வார்த்தைகள் ச‌ரியாக அமையாத போது கவிஞரே தாம்பூலம் போடுங்க என்று நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு. தாம்பூலம் போட்டால் வாலி புத்துணர்ச்சியடைவார்.

32. பாடல் வ‌ரிகளில் சம்பந்தப்பட்டவர்களை இணைத்து விடுவதில் வாலி கில்லாடி. இளையராஜாவின் தாய் பெயர் சின்னதாய். தளபதியில் ஸ்ரீவித்யா சின்ன வயசிலேயே ர‌ஜினியை பெற்றெடுப்பார். அதனை பயன்படுத்தி சின்னதாய் அவள் என்று பாட்டு எழுதியிருப்பார்.

33. வாலியை நாடகத்தின்பால் திருப்பியது, கருணாநிதியின் மருதநாட்டு இளவரசி படத்தின் வசனங்கள். அதன் பிறகே நாடகம் எழுதுவதில் வாலி ஆர்வம் காட்டினார்.

34. பு‌ரியாத வார்த்தைகளில் பாடல் புனைவதில் முன்னோடி. மாருகோ.. மாருகோ..., முக்காலா முக்காபுலா, டாலாக்கு டோல் டப்பிமா... சில உதாரணங்கள்.

35. தனித்தமிழை பயன்படுத்தாததற்கு வாலி வருத்தப்பட்டதில்லை. மாறாக அது ச‌ரிதான் என வாதிட்டிருக்கிறார். யானையை நால்வாய் என்றும், மானை புல்வாய் என்றும் சொன்னால் யாருக்கு தெ‌ரியும், மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பிரதானம் என்பார்.

36. எம்.‌ஜி.ஆருடன் நெருக்கமான நட்பை பேணி வந்தவராக இருந்தும், எம்.‌ஜி.ஆர், சிவா‌ஜி யார் நடித்தாலும் எம்.ஆர்.ராதா படத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது என்று உண்மையை வெளிப்படையாக கூறியவர் வாலி. இதற்காக எம்.‌ஜி.ஆர். ரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளாக நேர்ந்தது.

37. ஒரு இசையமைப்பாளர் வேண்டம் என்று திருப்பி அனுப்பிய பாடல்கள் வேறெhரு இசையமைப்பாள‌ரின் இசையில் வெளிவந்து பெரிய ஹிட்டான ச‌ரித்திரம் வாலிக்கு உண்டு. வாலியின் எவர்கி‌ரின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்… இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராக‌ரிக்கப்பட்டதுதான்.

38. வாலி மொத்தம் 17 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் பாக்யரா‌ஜின் சாட்டை இல்லாத பம்பரம் படமும் ஒன்று.

39. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சட்டென்று வார்த்தையால் அடிக்கிற திறமை அவரைப் போல் சில‌ரிடம்தான் உள்ளது. மூப்பனாரை பற்றி பேசும் போது மூப்பனார் என் தோப்பனார் என்றார். அதேபோல் கற்பில் மேலானவர் மாதவியா கண்ணகியா என்று பட்டிமன்றம். நீர் யாரை சொல்றீர் என்று கண்ணதாசன் வாலியை கேட்க, வாலியின் பதில். இரண்டு பேருமே மேலானவர் இல்லை, இரண்டு பேருமே ஃபீமேல்.

40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.‌ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.

41. பாடல் எழுத கண்ணதாசன் முதற்கொண்டு பலரும் அசிஸ்டெண்டுகள் வைத்திருந்தனர். படி எடுப்பதற்கு அவர்கள் உதவுவார்கள். வாலி கடைசி காலம்வரை அசிஸ்டெண்டுகள் வைத்துக் கொண்டதில்லை. தனது வ‌ரியை தானே தன் கைப்பட எழுதுவார். கணினியும் உபயோகிப்பதில்லை.

42. நியூ படத்தில் வரும் சக்கரை இனிக்கிற சக்கரை பாடலின் சிச்சுவேஷனை எஸ்.ஜே.சூர்யா போனில் சொல்ல, சக்கர இனிக்கிற சக்கர... அதில் எறும்புக்கு என்ன அக்கறை.. நான் இக்கரை... நீ அக்கரை... என்று போனிலேயே வ‌ரிகள் சொல்லியிருக்கிறார்.

43. பல நூறு படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் வாலியை, தென்றலே என்றுதான் விளிப்பார். விருதுகளுக்கெல்லாம் மேலானது என்பார் வாலி.

44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்த‌ரிடம் கேட்டுத் தெ‌ரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.

45. வாலி படிப்பாளி. பரந்த படிப்பில்தான் அறிவு வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். நவீன இலக்கியத்தையும் விடுவதில்லை. சாரு நிவேதிதா, குட்டி ரேவதி போன்றவர்களின் ஆக்கங்களை சமீபத்தில் படித்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். பிடித்த எழுத்தாளர் காண்டேகர். ஜெயகாந்தனையும் பிடிக்கும்.

46. சிவா‌ஜி கணேசன் வாலியை வாத்தியார் என்று அழைப்பதுண்டு. நாடகத்தில் வசனம் எழுதுகிறவர்களை அப்போது வாத்தியார் என்று அழைக்கும் மரபு இருந்தது.

47. ஆன்மீகவாதி ஆனால் ஆடம்பரவாதியல்ல. வாலியின் திருமணம் 1985 ஏப்ரல் 7 ஆம் தேதி அழைப்பிதழ், போட்டோ எதுவுமில்லாமல்தான் நடந்தது. அதிலும் அன்றைக்கு அவர் கவிஞராக உச்சத்தில் இருந்தார்.

48. ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னதன் பேரில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்துக்கு முதல் பாட்டெழுதினார் வாலி. அப்போதும் சம்பளம் குறைவாக இருக்க தனக்கான நியாயமான ஊதியத்தை கேட்டு பெற்றுக் கொண்டார்.

49. பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்காமல் மதுரைக்கு டிவிஎஸ் சில் ஏதாவது வேலை பார்க்கலாம் என வாலி கிளம்ப தயாரான போது பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியை பார்க்க வர, இன்னைக்கு என்ன பாடல் பாடினீங்க என்று வாலி அவ‌ரிடம் கேட்டிருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அன்று பாடியது, கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா வாழ்விலே குழப்பமா.. பாடல். அதைக் கேட்ட வாலி அந்த நிமிடமே உற்சாகமும் தன்னம்பிக்கையும் பெற்று ஊருக்குப் போகும் முடிவை ரத்து செய்தார்.

50. அதேபோல் அவரை பாடல் எழுத சென்னைக்கு வரவழைத்ததும் பாசவலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது.

குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள ந‌ரிக்குச் சொந்தம்
குள்ள ந‌ரி தப்பி வந்தா 
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படிப் பார்க்கப் போனா
எட்டடிதான் சொந்தம்.

51. மது, தாம்பூல பழக்கத்தை பலர் சொல்லியும் வாலி விடவில்லை. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அவரது தந்தை திடீரென அகாலமடைந்ததால் ஏற்பட்ட விரக்தியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வாலிக்கு நெருக்கமானவர்கள்.

52. வாலியை அவரது தந்தை ஒவியம் கற்க அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவர்களின் வீட்டிற்கு வந்த தங்கம்மாள் என்ற அம்மையார் வாலி வரைந்திருந்த ஒரு படத்தைப் பார்த்து, என் தந்தையை அப்படியே இதில் பார்க்கிறேன் என்று அழுதார். அந்தப் படம் மகாகவி பாரதி. அழுதவர் பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதி. சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் வாலியை அதன் பிறகு அவரது தந்தையே சேர்த்துவிட்டார்.

53. ஒருமுறைக்கு பலமுறை திருத்தி எழுதச் சொன்னால் வாலிக்கு கோபம் வரும். கமல்ஹாசன் ஒருமுறை, இந்த ஃபீலிங் போதாது என்று கேட்க நாலுமுறை மாற்றி எழுதினார். கடைசியில் இதுக்கு மேல என்னால ஃபீல் பண்ண முடியாது என்று ரைட்டிங் பேடை துhக்கி எறிந்தார். பிறகு அவர் கடைசியாக எழுதியதே படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல்தான் அபூர்வசகோதரர்களில் வரும், உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே.

54. வாலி வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை பாஸ்போர்ட் இல்லா கவிஞன் என்பார்கள். நான் வெளிநாடுகள் போனதில்லையே தவிர பல வெளிநாடுகள் எனக்குள் போயிருக்கின்றன என தான் வெளிநாட்டு மதுபானம் அருந்துவதை சிலேடையாக சொல்லிக் காட்டுவார்.

55. முருக மற்றும் அம்மன் பக்தர். முருகனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டில் இழுத்துவிடுவார். உதாரணம்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்,
வள்ளிக்கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்.

56. மனைவி ரமண திலகத்தின் மரணம் வாலியை கடுமையாக பாதித்தது. அவ‌ரின் மறைவுக்குப் பின் இப்படி எழுதினார்.

நீ என்னை வெளியே சுமந்த
கருப்பை.

57. வாலி சிலரைப் போல் வதவதவென்று ஒரு பாடலுக்கு பல்லவியும் சரணமும் எழுதுவதில்லை. யாராக இருந்தாலும் நான்கு பல்லவி, நான்கு சரணங்கள். அதிலேயே இயக்குனரும் இசையமைப்பாளர்களும் திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

58. கவிஞன் வறுமையில் வாட வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லாதவர். 1964 முதல் வருமான வ‌ரி கட்டி வந்தார்.

59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசி‌ரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதி‌ரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.

60. வாலியிடம் அசிஸ்டெண்டாக சேர மூன்று பேர் முயன்றனர். ஒருவர் கிராமத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் மெடிகல் ஷhப் வைத்திருந்தவர். மூன்றாவது ஆள் நாடகம் எழுதுகிறவர். அவர்கள்தான் பிற்காலத்தில் பிரபலமான கங்கை அமரன், ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி

61. பாடல் எழுத தேவையான நேரம் எடுத்துக் கொள்வார். அரை மணியிலும் பாடல் தயாராகிவிடும். பழசிராஜாவில் இடம்பெறும் பாடல் முஸ்லீம் சம்பந்தப்பட்டது என்பதால் இளையராஜாவிடம் 3 மாதங்கள் காலஅவகாசம் வாங்கியதுதான் அதிகபட்சம்.

62. எல்லோரையும் புகழ்கிறார் என்றோரு விமர்சனம் வாலி மீது உண்டு. எல்லோரையும் புகழ்றது தப்பில்லையே, தூஷணம் செய்தாதான் தப்பு என்பார்.

63. அவதார புருஷன் வாலியின் மாஸ்டர் பீஸ். அதில் பலராலும் பாராட்டப்பட்ட ஏராளமான வ‌ரிகளில் ஒன்று,

சர்ப்பத்தில் படுத்தவன் - கோசலையின் 
கர்ப்பத்தில் படுத்தான்.

64. ஓவியர் வாலியைப் போல் ஓவியத்தில் சிறந்தவனாக வேண்டும் என்று ரங்கராஜன் என்ற பெயரை வாலியாக மாற்றிக் கொண்டார்.

65. பாடல்கள் எழுதி புகழ் பெற்ற பிறகு வாலிக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. வெறும் பாடலாசி‌ரியராக இருந்தால் போதாது என்று அவர் எழுதி வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகமான அம்மா.

64. ஷங்கர் அமேரிக்கா செல்ல விசா அதிகா‌ரியை சந்தித்த போது, தமிழரான ஒரு அதிகா‌ரி இவர்தான் ஜென்டில்மேன், காதலன் படங்களின் இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். விசா வழங்கும் அதிகா‌ரி கண்டு கொள்ளவில்லை. நீங்க விரும்பி கேட்கும் முக்காலா முக்காபுலா பாடலை இயக்கியது இவர்தான் என்றதும் ஆச்ச‌ரியப்பட்ட அதிகா‌ரி உடனே விசா தந்திருக்கிறார். இது ஷங்கரே சொன்னது.

65. கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி மடிந்த போது
வாலி இப்படி எழுதினார்.

நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே
குடந்தை - அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு
அத்துணை தெய்வங்களுமா
உடந்தை.

இதைப் படித்து, ஒரு நாத்திகனால் யோசிக்க முடியாததை எழுதிட்டீங்களே என்று போனில் வைரமுத்து வாலியை பாராட்டினார்.

66. ஸ்ரீரங்கத்தில் வாலி போட்ட முதல் நாடகம் தளபதி. துணைப்பாடத்தில் இடம்பெற்றிருந்த கிங்லியர் கதையை தழுவி இந்த நாடகத்தை வாலி எழுதியிருந்தார்.

67. நவீன பெண் கவிஞர்கள் உடலைக் கொண்டாடுதல் என்று உடல் உறுப்புகளின் பெயர்களை கவிதையில் எழுதுவதை பலர் எதிர்த்தனர். வாலியிடம் அது குறித்து கருத்து கேட்டபோது, ஆணுக்குள்ள எல்லா சுதந்திரமும் பெண்ணுக்கும் உண்டு. ஆண்டாள் எழுதாததா என்று ஒரே வார்த்தையில் எதிர்ப்பாளர்களை நிராக‌ரித்தார்.

68. உங்க பாடல் ச‌ரியில்லை என்று சொன்னால் வாலிக்கு கோபம் வரும். எம்.‌ஜி.ஆ‌ரிடம்கூட, உங்களுக்கு பு‌ரியலைன்னு சொல்லுங்க, ச‌ரியில்லைன்னு சொல்லாதீங்க என்று கோபித்திருக்கிறார்.

69. வாலி எழுதி பத்தி‌ரிகையில் பிரசுரமான முதல் சிறுகதை பிராந்தி. வெளியானது கி.வ.ஜா. வின் கலைமகள்.

70. வாலி சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதிய பாடல், கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... இந்தப் பாடலில் மனதை பறிகொடுத்துதான் வாலியை சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வரச்சொன்னார் டி.எம்.எஸ். பிறகு அந்தப் பாடலுக்கு இசையமைத்து அவரே பாடினார்.

71. வாலி நாடகத்துக்காக எழுதிய பாடல்கள் 1956 ல் புதையல் படத்துக்காக வாங்கப்பட்டது. என்றாலும் அப்பாடல்கள் புரட்சி வீரன் புலித்தேவனில்தான் பயன்படுத்தப்பட்டது.

72. வாலிக்கு பைபாஸ் சர்ஜ‌ரி செய்ய வேண்டும் என்ற போது அதற்கான முழுச் செலவை ஏற்றுக் கொண்டதுன், மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் வாலியை பத்திரமாக கவனித்துக் கொள்ளச் சொன்னவர் கருணாநிதி. அதனால், எனக்கு மறுபிறவி தந்தவர் என்று கருணாநிதியை வாலி குறிப்பிடுவதுண்டு.

73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.‌ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.‌ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பெரிய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.

74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

75. பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு இரண்டிலும் வாலி வித்தகர். இளையராஜா முதல் ரஹ்மான்வரை அனைவ‌ரிடமும் இந்த இரண்டு முறையிலும் பாடல் எழுதியிருக்கிறார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் வாலி எழுதிய பின் ரஹ்மான் மெட்டமைத்தது.

76. 1958 ல் அழகர் மலைக்கள்ளன் படத்தில் எழுதிய, நிலவும் தாமரையும் நீயம்மா, உலகம் ஒருநாள் உனதம்மா பாடல்தான் வாலியின் முதல் திரையிசைப் பாடல்.

77. இரண்டே வ‌ரிகளில் அடிப்பதில் வாலியை அடிக்க ஆளில்லை. கோவலன் கதையை இரண்டே வ‌ரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் சொன்னது.

புகா‌ரில் பிறந்தான்
புகா‌ரில் இறந்தான்

78. எம்.‌ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில், உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூ‌ரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சா‌ரில் பிரச்சனையாகி புதிய சூ‌ரியன் என மாற்றினர்.

79. பிரபுதேவாவுக்கு டான்சராக புகழ் வாங்கித் தந்த பாடல்கள் அனைத்தையும் வாலியே எழுதினார். பிரபுதேவா முதலில் தனியாக சினிமாவில் நடனமாடியது கதி‌ரின் இதயம் திரைப்படத்தில். ஏப்ரல் மே யிலே  பசுமையே இல்லை என்ற அந்தப் பாடலை எழுதியவர் வாலி. ஜென்டில்மேன் சிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா... சூ‌ரியன் லாலாக்கு டோல் டப்பிமா.. எல்லோமே வாலி எழுதியவைதான்.

80. பாடலின் டியூன் சிச்சுவேஷனுக்கு அந்நியமாக இருந்தால் இசையமைப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி மாற்றச் சொல்வார். இளையராஜா முதல் ரஹ்மான்வரை எல்லா இயக்குனர்களும் அப்படி மாற்றியும் இருக்கிறார்கள். பார்த்தால் பரவசம் படத்துக்கு வாலியின் கையில் இரவு ஏழு மணிக்கு டியூன் கிடைக்கிறது. சிச்சுவேஷனுக்கு டியூன் ச‌ரியில்லை என திருப்பி அனுப்புகிறார். 10.30 க்கு ரஹ்மானே வாலியின் வீடு தேடி வருகிறார். 12 மணிக்கு புதிய டீயூன் தயாராகிறது. அந்தப் பாடல்தான், மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சிஷ்யா...

81. கவிஞர் கண்ணதாசன் மீது ம‌ரியாதை கொண்டவர். ஒருமுறை போதையேறிய கண்ணதாசனுடன் இரவில் சென்ற போது பாண்டிபஜார் போலீஸார் இருவரையும் லாக்கப்பில் அடைத்த அனுபவமும் வாலிக்கு உண்டு.

82. பாடல் எழுத வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட போது கண்ணதாசனுக்கு அசிஸ்டெண்டாக சேரும் வாய்ப்பு வாலிக்கு வந்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். நான் கண்ணதாசனுக்கு எதிரே கடைவி‌ரிக்க வந்தவன் என்று கூறி அதனை மறுத்தார்.

மக்கள் மனதில் என்றும் அவர் நிலைத்து இருப்பார்.

நன்றி - சினிமா செய்திகள்