Friday 29 November 2013

நவீன சரஸ்வதி சபதம் - கடவுளின் மங்காத்தா


எங்கேயும் எப்போதும், ராஜாராணி படத்தில் ஜெய்யின் கலக்கலான நடிப்பு ரொம்ப பிடித்து இருந்ததால் இந்த படம் ஜெய்க்காக  பார்க்க வேண்டும் என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். தஞ்சை ஜி.வி காம்ப்ளெக்ஸ்ஸில் படம் நான் செல்வதற்குள் படம் 2.30 மணிக்கே தொடங்கி விட்டது. 10 நிமிடம் தாமதம் சரி ஜன்னல் ஓரம் 3.00 மணிக்கு அங்கு செல்வோம் என சென்றால். மாலை 6 மணி காட்சிக்கு தான் படம் திரையிட படுவதாக அறிவித்தார்கள். சரி மீண்டும் ஜி.வி காம்ப்ளெக்ஸ் சென்று 20 நிமிட தாமதமாக படம் பார்க்க அமர்ந்தேன்.

ரொம்ப நாள் ஆச்சு சாமி படம் பார்த்து சிறு வயதில் சிவாஜி கணேசன் சிவனாக நடித்து டி வியில் பார்த்ததுண்டு அது போல இந்த படமும் சிவபெருமானின் திருவிளையாடலே.

படம் டைட்டிலே நவீன சரஸ்வதி சபதம் என்று இருந்ததால் இது சாமி படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடவுள் நாரதர் பார்வையில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சிவபெருமானாக சுப்பு பஞ்சு நாரதராக மனோபாலா. சாமி படம் என்றதும் பூஜை,நாட்டியம் அப்படி நினைச்சுறாதிங்க. இவரு ஹைடெக்கான சிவபெருமான் சிஸ்டம்,ஆப்பிள் போன், ஐ பேட் என கலக்கலா இருக்காரு.


கதை;

சிவபெருமானான சுப்பு நாரதரான மனோபாலாவிடம் இந்த உலகில் தான் விளையாண்டு ரொம்ப நாள் ஆகுது அதுனால ஒரு நான்கு பேர தேர்ந்து எடு அவர்களோடு நாம் ஒரு திருவிளையாடல் விளையாடுவோம் என கூறுகிறார். மனோபாலாவால் தேர்ந்து எடுக்கப்படும் அந்த நால்வர் நம்ம ஜெய், வி.டி.வி கணேஷ், சத்யன், அப்பறம் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் பஜ்ஜி கதாபாத்திரத்தில் நடித்தவர். 

முதல் பாதி முழுவதும் இந்த நால்வரின் அறிமுகம் அவர்களை பற்றிய முன் கதை என நல்லா ஜாலி யா நகைச்சுவையா போகுது. அதிலும் ஜெய் கதாநாயகி நிவேதா தாமஸ் மேல் கொள்ளும் காதல் அத பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சூப்பர். நிவேதா பார்க்கவும் நல்ல அழகா இருகாங்க. ஒரு ஜாடையில் பார்க்கும் போது கண்ணா லட்டு திண்ண ஆசையா விசாகா மாதிரி இருக்கு. படம் இடைவேளை வரை தான் நிவேதாவிற்கு வேலை அதுக்கு அப்பறம் படத்தின் இறுதியில்தான் வாய்ப்பு.  எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல.

காதல் செட் ஆனதும் என்ன கல்யாணம் தானே. ஜெய் நிவேதா இருவருக்கும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் செய்வதாக நிச்சயம் ஆகிறது. ஜெய் தன் நண்பர்கள் நான்கு பேருக்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுக்க பாங்காங் செல்கிறார். அங்க தான் நம்ம சிவபெருமான் என்ன பண்ணுறாருன்னா ஹாலிவுட் படமான ப்ளூ லாகூன் பார்த்துட்டு அந்த படத்தில் வருவது போலவே இந்த நால்வரையும் ஒரு தீவில் சிக்க வைக்கிறார்.

அந்த சிக்கலில் இருந்து மீண்டு நால்வரும் ஊர் திரும்பி சென்றார்களா. ஜெய்யின் திருமணம் நடைபெற்றதா என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இந்த நவீன சரஸ்வதி சபதம்.


இரண்டாம் உலகம் பார்த்து வெறுத்து போய் இருந்த எனக்கு இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. ஜெய் வழக்கம் போல கலகல நடிப்பு அவரது அறிமுக கதை செம்ம காமெடி. இந்த ரூட்டில் பயணம் செய்தாலே போதும் ஜெய் சூப்பர் கலக்குங்க.

அடுத்து கதாநாயகி நிவேதா அழகு அவங்க வேலை என்னவோ அதை செய்து இருகாங்க.

படத்தில் ரொம்ப கவர்வது நம்ம கணேஷ் தான் அவரது கரகர குரலாகட்டும் பேச்சாகட்டும் செம்ம சிரிப்பு. அப்பறம் நம்ம சத்யன்,பஜ்ஜி எல்லாம் ஓகே குறை சொல்ல முடியல.

படத்தில் குறையே இல்லையா இருக்கு இடைவேளைக்கு பின்பு அந்த தீவில் இந்த நால்வரையே பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையா இருக்கு ப்ளூ லாகூன் ஆங்கில படத்தில் கெல்லி ப்ரொக் அந்த தீவில் ரொம்ப ப்ரீயா இருப்பாங்க பார்க்க கிளுகிளுப்பா இருந்துச்சு ஒரு பிட் கூட படத்தில் சேர்த்து இருப்பாங்க அந்த சீனுக்காகவே படம் நல்ல இருந்துச்சு எனக்கு. அது இந்த படத்தில் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் சென்சார்ல அவனுங்க பார்த்துட்டு கட் பண்ணிருவானுங்க பொறமை பிடிச்சவனுங்க.

படம் மொக்கைலாம் இல்ல கண்டிப்பா ஒரு தடவ பார்க்கலாம் நான் மறுபடி ஒரு தடவ பார்க்கணும். சுமாரான கூட்டம் படத்திற்கு 80 ரூபாய் தான் டிக்கெட். 

நவீன சரஸ்வதி சபதம் - மொக்கை இல்லை 


Thursday 28 November 2013

பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி?


1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்!
(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)

2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்!
(தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது)

3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்!
(பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல)

4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்!
(சிலசமயம் செத்துபோன பாட்டியக் கூட கிண்டல் பண்ணுவானுங்க)

5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்!
(இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது)

6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்!
(ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க)

ஆனா பொண்ணுங்களா இருந்தா கஸ்டமே இல்ல..
சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்!
(ஹீ ஹீ நானும் தான் லைக் போடுறேன்)

Friday 22 November 2013

இரண்டாம் உலகம் - ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சவால்


ஹாலிவுட்ல அவதார்ன்னு ஒரு படம் ஜேம்ஸ் கேமருன்னு ஒரு வெள்ளைக்கார இயக்குனரின் கைவண்ணத்தில் வந்து சக்கை போடு போட்டுசுல்ல. அந்த படத்த படம் மாதிரி தமிழ்ல நம்ம இயகுனர்களினால் எடுக்க முடியாதா என நாம் நினைக்கும் போது முடியும்னு நம்ம செல்வராகவன் களத்துல இறங்கி எடுத்து இருக்காரு.

இதுல சோகம் என்னன்னா அங்க உள்ள பட்ஜெட்டிற்கு டெக்னாலஜிக்கு அப்படி ஒரு படம் பண்ண ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சாத்தியம் ஆச்சு. ஆனா அது இங்க முடியுமா இந்த மாதிரி சொதபல்லா எடுத்ததற்கே 60 கோடி ஸ்வாக இந்த பணமே இப்போ தயாரிப்பாளருக்கு கிடைக்குமான்னு தெரியல ஐயோ பாவம்.
 
இந்த படத்தொட கதைய பத்தி எப்டி சொல்றதுன்னே எனக்கு தெரியல. படம் பார்த்த எனக்கே இந்த படத்த புரிஞ்சுகுறதுகுள்ள எ செல்வராகவன் பிலிம்ன்னு போட்டுடாங்க என்ன கொடுமை சார் இது. எனக்கு புரிஞ்ச வரைக்கும் சொல்றேன் மக்களே கேட்டுகங்க.

கதை;

ஏதோ ஒரு உலகம் அங்க தமிழ் பேசுற வெள்ளைகாரங்கள இருகாங்க. அந்த நாட்டை  ஒரு வெள்ளைகார ராஜா ஆளுகிறார். ராஜா இருந்த தளபதி இருக்கணும்ல அப்படி ஒரு தளபதி அவரு மகன் தான் நம்ம ஆர்யா. அந்த உலகத்துல ஒரு அனாதை வீரமிகு பெண்ணாக அனுஷ்காவும் இருகாங்க. இந்த உலகத்துல உள்ளவங்க யாருக்குமே காதல்ன்ன என்னானே தெரியல. ஆர்யாக்கு மட்டும் அனுஷ்கவ பார்க்கும் போது ஒரு இது இருக்கு. ஆனா ஆர்யாவ பார்க்கும் அனுஷ்காவிற்கு அது வரல.

இப்படி போற கதைல நம்ம வாழுற உலகத்தையும் காட்றாங்க. அதுல நம்ம அனுஷ்கா ஒரு டாக்டர் அங்க சேவை மனப்பான்மை உள்ள ஆர்யாவ பார்த்து காதல் வயப்பட்டு அவர்ட போயி காதல சொல்லும் போது ஆர்யா நோ சொல்லிருறாரு. அப்பறம் நிறைய யோசிச்சு கல்யாணம் பண்ணிகலான்னு அவரு போயி கேட்கும் போது அனுஷ்கா நோ சொல்றாங்க.

இப்படி இரண்டு உலகத்துலயும் நடக்குற கதைய மாத்தி மாத்தி நமக்கு காட்றாங்க.



ஒருவழியா நம்ம உலகத்துல இருக்குற ஆர்யா அனுஷ்கவா காதலிக்க வைக்கிறார். அப்போ திடிர்ன்னு ஒரு ட்விஸ்ட் கால் தடுக்கி விழும் அனுஷ்கா கல்லின் மேல விழுந்து மண்டை சிதறி மர்கயா ஆயிருரங்க. அப்பறம் என்ன வழக்கம் போல செல்வராகவன் படத்தில் வர மெண்டல் ஆகுறாரு ஆர்யா.

இப்போ இன்னொரு உலகம் இருக்குள்ள அங்க உள்ள மக்களால் கடவுளாக மதிக்கப்படும் ஒரு பெண் தனது மாந்திரிக சக்தியால் தன் உலகத்தில் உள்ள ஆர்யாவை அனுப்பி நம்ம மெண்டல் ஆர்யாவ உலகம் விட்டு உலகம் வர வைக்கிறார். நம்ம மெண்டல் இங்க வந்து காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்திற்கு காதலை புரிய வைத்து அந்த ஜோடியை சேர்த்து வைத்து பின்பு மூன்றாம் உலகத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பம் செய்வதே கதை.

என்ன மக்களே தலைய சுத்துதா..

இந்த படத்தில் பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அனிருத் தாம்.

1.கனிமொழியே பாடல்
2.தனுஷ் படிய பாடல்
இவை இரண்டும் நல்லா இருக்கு.

பின்னணி இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல இந்த படத்துக்கு இது போதும்ன்னு நினைச்சார இல்ல தம்பிட அவ்ளோ தான் சரக்க்கான்னு தெரியல. ஆண்டிரியா வாயில் மட்டும் வாசிச்சா பத்தாது தம்பி நீங்க இன்னும் கத்துக்கணும்.



சிஜே வொர்க் அதிகம் உள்ள படம் ஆனா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பார்த்த மாதிரி இருக்கு. ஆர்யா சிங்கத்தை வேட்டை ஆடும் இடம் செம்ம காமெடி அத பார்க்க சிங்கம் மாதிரியே இல்ல ஏன் இந்த தேவ இல்லாத வேலை.

நம்ம செல்வராகவன் சார் நினைபெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரி எடுக்க ஆசைப்பட்டு இறங்கி நொந்து நுடுல்ஸ் ஆகி எப்டியாவது படத்த எடுத்தா போதும்ன்னு நினைச்சு இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த படத்திற்கு ஆயிரத்தில் ஒருவனே தேவலாம் போல. செல்வராகவன் சார் போதும் விட்ருங்க. இந்த படத்திற்கு அப்புறம் படம் இயக்க மாட்டேன்னு ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு பார்ப்போம்.

மொத்தத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் செலவில் ஜார்ஜியா நாட்டை நன்றாக சுத்தி பார்த்து விட்டு பொட்லுரிக்கு பொட்டு வைத்து விட்டார் நம்ம செல்வராகவன்.

 இரண்டாம் உலகம் - உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ சாமிய்ய்ய்ய்






  

Wednesday 20 November 2013

மீண்டும் சிம்பு ஜோடியானார் நயன்தாரா


உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதலர்களாகிறார்கள். இந்தமுறை திரையில் மட்டும்.

பாண்டிரா‌ஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று அவரை அணுகி கதை சொல்லியிருக்கிறார் பாண்டிரா‌ஜ். கதையை கேட்ட நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்புவைப் பொறுத்தவரை கரும்பு தின்ன கூலியா கதைதான். அவருக்கும் ஓகே.

கௌதம், சிம்பு நடிக்கும் படம் தொடங்கும் முன்பே திட்டமிட்டபடி முதல் ஷெட்யூலை பாண்டிரா‌ஜ் முடித்திருக்கிறார். சிம்பு, நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. டிசம்ப‌ரில் திட்டமிட்டிருக்கிறார்கள்.

முன்னாள் காதலர்கள் ரன்பீர் கபூரும், கத்‌ரினா கபூரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த ஹே ஜவானி ஹே திவானி சூப்பர்ஹிட்டானது. பட ‌ரிலீஸுக்குப் பிறகு இருவரும் வெளிநாடு டூர் சென்றதோடு பிரைவெட் பீச்சில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது. அதேகதைதான் இங்கேயும். சிம்பு, நயன்தாரா இணைகிறார்கள் என்பதே படம் பாதி ஹிட்டான மாதி‌ரிதான்.

மீதி பாதி... டிசம்பர் வரட்டும் பா‌ர்ப்போம். 

Thursday 14 November 2013

திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்)


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக்  கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

Wednesday 6 November 2013

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ?


ஐந்து முதலமைச்சர்களை தமிழ் சினிமா தந்த பிறகும் சினிமா என்பது வெறும் பொழுதுப்போக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. நம்முடைய பிரச்சனை அரசியல் பார்வை இல்லாதது. அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ‌ரிலையன்ஸ் போன்ற கடைகளில் காய்கறி வாங்காமல் கடைத்தெருவில் இருக்கும் கிழவியிடம் வாங்கினால் அதுவும் ஒரு அரசியல் செயல்பாடே.

தனியார் தொலைக்காட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லூ‌ரி மாணவி குறித்து மாணவிகள் பேசினர். ஒவ்வொருவ‌ரின் பேச்சிலும் ஆவேசம் பொங்கியது. எங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள், முடியாது என்றால் கேவலமாக பேசி டார்ச்சர் செய்கிறார்கள் என ஆவேசப்பட்டனர். உண்மை. அவர்களின் ஆவேசம் நியாயமானது. அப்படியே சினிமா பக்கம் வருவோம்.

இன்றைய முன்னணி நாயகர்கள் அனைவரும் நாயகியிடம் வம்பு செய்கிறவர்களாகதான் படத்தில் வருகிறார்கள். ஏண்டி நான் உன்னை லவ் பண்றேண்டி என்று வலுக்கட்டாயமாக ஹீரோயினை காதலிக்க வைப்பவர்கள்தான். ஆனால் இந்த வன்முறையை நாம் திரையில் ரசிக்கிறோம். அட, இதைத்தானே ரசிக்கிறார்கள் என்று படம் பார்க்கிற விடலைகளும், நான் உன்னை லவ் பண்றேண்டி என்று தெருவில் பார்க்கிற பெண்களையெல்லாம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகன் வேலை வெட்டி இல்லாதவன். பெண்கள் பின்னால் சுற்றுகிறவன். அதுவும் எல்லா பெண்கள் பின்னாலும். படிக்கிற மாணவியின் கையில் லவ் லட்டர் தந்து அவளின் டீச்சருக்கு தரச் சொல்கிறவன். திரையில், சும்மா பொழுதுபோக்குதானே என்று பல்லை காட்டி சி‌ரிக்கிறோம். அதுவே நிஜமாக நடந்தால்? அந்த கதாபாத்திரத்ததைதான் ஜனங்கள் திரையில் விரும்புகிறார்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவன்தான் தமிழக இளைஞர்களின் ரோல் மாடல்.

எனில் படம் பார்க்கிற பதின்ம வயசு பசங்களும் அவன் செய்த அதே செயலைத்தானே செய்வார்கள். அதுதானே நடக்கிறது. ஒருபுறம் தூண்டிவிட்டு மறுபுறம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தொலைக்காட்சியில் ஆவேசப்பட்ட பெண்களில் ஒருவராவது திரையில் நாயகியை டீஸ் செய்யும் நாயக கதாபாத்திரத்தை விமர்சித்தது உண்டா? காமெடி என்ற பெய‌ரில் திரையில் கொட்டும் குப்பைகளுக்கு பல்லை காட்டாமல் கொஞ்சம் அரசியல்பூர்வமாக நாம் சிந்திக்க பழக வேண்டும்.

ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்.

Friday 1 November 2013

தித்திக்கும் தீபாவளி


குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல் தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.

அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி, குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.

அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.

அபராதமும் விதிக்கப்படும்.

இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.

ஹேப்பி தீபாவளி!
 (வீர சாகசம் வேணாம்)

பட்டாசு வெடிக்கிறீங்களா?

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிக ஒலி உடைய பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*  பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்க கூடாது.

* உடைந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வழக்கத்தை விட அதிக ஒலி ஏற்படும்.

* வீட்டின் பால்கனியில் நின்று பட்டாசு வெடிக்க கூடாது. அருகே உள்ள ஜன்னல், அலமாரியில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.


*  மது அருந்திவிட்டு பட்டாசு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*