Thursday 30 May 2013

அஜித் ஒரு ஆச்சரியக்குறி !


நான் பள்ளி படிக்கும் நாட்களில் எனக்கு பிடிக்காத நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது அஜித் குமார் தான். ஏன் என்றால் நான் ஒரு விஜய் ரசிகன் என்ற காரணத்தினால் அவரை எனக்கு அறவே பிடிக்காது. அவரின் படங்களையும் நான் தியேட்டருக்கு சென்று பார்க்கவும் மாட்டேன். அந்த அளவு அவரை நான் வெறுத்து இருந்தேன்.

நான் மட்டும் அல்ல என்னுடன் எனது பெஞ்சில் அமர்ந்து இருந்த எனது நண்பர்கள் நான்கு பேரும் விஜய் ரசிகர்கள் தான். சிறிது நாட்களில் எங்களின் நண்பனில் ஒருவன் அஜித் ரசிகனாய் வேறு மாறி விட்டான். அவனுடன் நாங்கள் அதற்காக சண்டை கூட போட்டு விட்டோம். அந்த அளவு எனக்கு அவரை பிடிக்காமல் போக என்ன காரணம் என்று நண்பன் கேட்டான்.

ஆமா அந்த ஆளு ரொம்ப ஆடம்பரம் எதாவது விழாவிற்கு போகும் போது பாரேன் கோட் சூட் போட்டு தான் போவான். தெனாவட்டா எல்லாரையும் பேசுறது அவன கண்டாலே பிடிகலப்பா என கூறுவேன்.

விஜய் அஜித் படங்கள் ஒரே தினத்தில் போட்டி போட்டு கொண்டு வரும் பொழுது அந்த நடிகர்களை விட எங்களுக்கு தான் பக்பக்ன்னு இருக்கும் படம் எப்படி இருக்கோ நம்ம தலைவர் படம் அவன் படத்த விட நல்லா ஓடணுமே என்றெல்லாம் நினைப்போம்.

உன்னை கொடு என்னை தருவேன் என்ற அஜித் படத்துடன் போட்டியாக குஷி என்ற விஜய் படம் வெளியானது. அஜித்தின் படம் அட்டர் பிளாப் விஜய் படமோ செம்ம ஹிட் அப்போ நாங்க பட்ட சந்தோசம் இருக்கே. அனேகமாக போட்டியாக படம் வெளி இடும் போதெல்லாம் விஜய் படங்களே அதிக வெற்றி பெற்றேன.

அஜித் படம் பிளாப் ஆனா அப்படி ஒரு சந்தோசம் இதெல்லாம் எது வரை என்றால் திருப்பாச்சி படம் வர வரைக்கும் அட்டகாசம் படத்தில் விஜய்யை தாக்கி அஜித் பாட்டு வைத்த பொழுது தலைவர் அதுக்கு பதிலா இந்த படத்துல்ல பதில் சொல்வாரு என நினைச்சு போன எங்களுக்கு ஏமாற்றம் தான். நீயும் நானும் அண்ணன் தம்பிடா ன்னு பாட்டு வச்சு சண்டைய முடிவுக்கு கொண்டு வந்து இருபாங்க. இந்த பனி போரை நிறைவு செய்து வைத்தவர் நம்ம பேரரசு தான்.

அதன் பின்பு அஜித்தின் திருப்தி படத்திற்கு விஜய் குத்துவிளக்கு ஏற்ற இருவரும் நண்பர்களாக நாங்களும் அஜித்தின் மேல் கொண்ட வெறுப்பு குறைந்தது. அஜித்தின் படம் என்று தியேட்டரில் சென்று நான் நான் பார்த்த படம் என்றால் அது வரலாறு படம் தான்.

அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல ஒரு தந்தை ஆகா மாறிய பிறகு அவரின் நடவடிக்கைகள் மென்மேலும் மாறியது. ஒரு நடிகனாக எனக்கு பிடிக்காத அஜித் அவரின் பொது வாழ்கையில் ஒரு மனிதனாக என்னை மட்டும் அல்ல அனைத்து மக்களையும் கவர்ந்தார்.

1.மனதில் பட்டதை வெளியில் சொல்லும் மனிதனாக 

2.சக நடிகர்களை மதிக்கும் நடிகனாக

3.பிறரின் துன்பத்தில் தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் ஒரு நல்லெண்ணம் உடையவராக

4.தலைக்கணம் அற்றவராக 

5.சக மனிதர்கள் மேல் அன்பு செலுத்துபவராக 

6.ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்தாதவனாக

 இது போன்ற காரணத்தினால் அவரை எனக்கு ஒரு நடிகனாக இல்லாமல் ஒரு நல்ல மனிதனாக பிடித்தது. நாலு பேரு சேர்ந்தாலே அலப்பரை பண்ணும் மனிதர்களுக்கு மத்தியில் ரசிகர்களை சுயநலனுக்காக பயன்படுத்தாத அஜித் எனக்கு ஒரு ஆச்சரியக்குறி தான்.








Saturday 25 May 2013

மலேசியாவில் நானும் என் காதலும்

(மலேசிய இரட்டை கோபுரம்)
எங்க ஊர்ல அதிகமான நபர்கள் வெளி நாட்டில் தான் வேலை செய்கின்றனர். எனது தந்தையும் பதினெட்டு வருடங்கள் வெளிநாட்டில் தான் இருந்தார். அதனால என்னவோ நான் படிக்கும் காலத்தில் இருந்தே என்னத்த படிச்சு என்ன செய்ய போறோம். வெளிநாட்டுல தானே வேலை நமக்கு என்ற எண்ணம் சிறு வயதிலேயே வந்துவிட்டது. இப்போ அது மாதிரியான எண்ணம் தற்போது வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் இல்லை அனைவரும் நன்றாக படிகிறார்கள் ரொம்ப சந்தோசமா இருக்கு. அதனால ஒழுங்காபடிக்காம ஊர சுத்திக்கிட்டு ஜாலியா இருந்தேன்.

(மலேசிய பீச் பினாங்) 
எங்க அம்மாவும் எவ்ளோவோ போராடி என்னை கல்லூரி வரையில் கொண்டு வந்து விட்டார்கள். என்ன இருந்தாலும் சனி நம்மள விடலையே நானும் எப்பவும் போல சினிமா பார்க் கேம்ஸ் ன்னு ஜாலி தான். இந்த லட்சனதுள்ள காதல் வேற வந்து தொலைச்சுருச்சு. அப்பறம் என்ன கல்யாணம் பண்ணனும் நாம எப்ப படிச்சு முடிச்சு சம்பாதிக்கிறது. அதுக்குள்ள நம்ம காதலிய வேற யாருக்காச்சும் கட்டி கொடுத்துட்டா என்ன பண்றது அப்படிங்குற ஒரு அலுப்பதனமான சிந்தனை வந்துருச்சு.

(மலேசிய தேசிய நெடுஞ்சாலை)
இதுக்கு ஒரே வழி சம்பாதிக்க வேண்டும் அதற்கு வெளிநாடு செல்ல வேண்டும். உடனே அதற்கான வேலையில் இறங்கினேன் வீட்டில் படிக்க விருப்பம் இல்லை நான் வெளிநாடு போறேன் என்று கூறி பாஸ்போர்ட் விசா எல்லாம் ரெடி பண்ணி மலேசியா கிளம்பினேன்.

(மலேசிய தேசிய உணவு)

நம்ம நெனைப்பு எல்லாம் ஏதோ வெளிநாடு வந்துட்டா சும்மா அள்ளிகிட்டு வந்துரலாம் என்று எண்ணம். வந்த பின்பு தானே தெரிகிறது அவனவன் ஊர விட்டு உறவுகளை விட்டு தாய் தந்தையரை பிரிந்து மனைவி மக்களை பிரிந்து வந்து என்ன மாதிரி கஷ்ட படுகிறார்கள் இந்த பாழ போன காசை சம்பாதிக்க. அப்போது தான் எண்ணினேன் நாங்க சந்தோசமா இருக்க என் தந்தை எவ்ளோ கஷ்ட பட்டு இருப்பார் என்று.

(மலேசிய தேசிய விலங்கு)
நல்ல வேலை இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் நமக்கு கடவுள் கொடுக்கவில்லை. எனது உடன் பிறப்பு அங்கு இருத்த காரணத்தினால் சொந்தமாக தொழில் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.அதனால நானே ராஜா நானே மந்திரி யாருக்கும் அடிமை இல்லை.நெனச்சா விடுமுறை நினைத்த நேரம் சினிமா என்று ஜாலியா போச்சு.

(மலேசிய தேசிய பழம்) 
இதுமாதிரி ஒரு ஐந்து வருடங்கள் ஓடின. ஊர் பாசம் வந்து விட்டது ஊருக்கு திரும்பலாம் என முடிவு செய்தேன்.எதற்காக வெளிநாடு வந்தேன் காதலியை கை பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக போன் செய்து வீட்டில் கூறினேன் ஏற்பாடு செய்யப்பட்டது இந்தியா வந்து இறங்கினேன்.வந்த நோக்கம் நிறைவேறியதா? பின்னே நான் வேறொரு பெண்ணுடனும் அவள் வேறொரு ஆணுடனும் இனிதாய் திருமணம் நிறைவேறியது.


நீதி; காதல் எப்போது வேண்டுமானாலும் பண்ணிக்கலாம்  ஆனா படிப்பு படிக்கிற வயசுல்ல படிச்சுரனும். அதனால நல்லா படிங்க சந்தோசமா இருங்க.

நானும் அனுபவ பதிவு போடனும்ல அதான் சரி அனுபவ பதிவு போட்டாச்சு. அடுத்து உள் குத்து பதிவு போட்ட தான் பதிவராவே ஏத்துக்குவாங்கலாம் அதான் யாரபத்தி போடலான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் தம்பிக்கு யோசனை சொல்லி உதவி செய்ய கூடதா.

Tuesday 21 May 2013

வாழ்க்கை சிறப்பாக அமைய?



ஐபிஎல்;

இந்த வருஷம் நான் ரொம்ப எதிர்பார்த்த அணி ராயல் சேலன்ன்ஜர்ஸ். இறுதியல் பல்பு வாங்கிருச்சு இனி கெயில்,ஏ பி டி அதிரடி ஆட்டங்களை அடுத்த வருடங்களில் தான் காண முடியும். நான் எதிர்பார்கவே இல்ல சன் ரைசெர்ஸ் டாப் 4 வரும் என்று என்ன தான் நாம அய்யாவின் குடும்பத்தை வாரி கொண்டு இருந்தாலும் அவர்கள் கால் பதிக்கும் துறைகளில் வெற்றி பெற்று கொண்டே வருகிறார்கள் இது அவர்களில் குடும்ப ராசி போல.


ஜாதி வெறி;

கால நேரம் நம் மக்களை எவளவோ மாற்றி இருந்தாலும் ஒரு சில மக்கள் இன்னும் மாறவே இல்ல. இன்றைய செய்தி தாளில் ஜாதி மாற்றி காதல் திருமணம் புரிந்து கொண்ட தன் தங்கையை நண்பர்களின் உதவியுடன் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் கைது. இத்தனைக்கும் தன் அண்ணன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் பாசமாக கரி விருந்து எல்லாம் சமைத்து கொடுத்து இருக்கிறார். அதை சாப்பிட்டு விட்டு சென்று விட்டு மது அருந்தி விட்டு வந்து இந்த செயலை அரங்கேற்றி இருக்கிறார் அந்த அண்ணன்.


இளைய தளபதி அறவிப்பு;

இந்த அரசியல்வாதிகளுக்கே உரிய குணம் என்னவென்ரால் சாதாரணமா தான் பேசுவாங்க ஆனா தன் முன்னே மிக பெரிய கூட்டம் நிற்பதை கண்டு விட்டால் எங்க இருந்து தான் வருமோ அப்படியே அருவி போல கொட்டும் பேச்சு. அதும் அவங்க ஆட்சியா இருந்துச்சுன்னா அள்ளி விடுவானுங்க பாருங்க உங்களுக்கா நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஆனா உருப்புடிய  ஒரு ஆணியும் புடுங்க மாட்டங்க. அதே போல மக்கள் கூட்டதை பார்க்கவும் நம்ம இளைய தளபதியும் நடிக்கிரத விட்டுட்டு உங்களுக்கு சேவை செய்யலாம் என தோன்றுகிறது என அள்ளி விட்டார் உடனே நம்ம மக்களுக்கு அவ்வளவு சந்தோசம் பாருங்க கண்டிப்பா மார்க்கெட் போனதும் வருவாரு போல.


புது கவிதை;

பள்ளியில் படிக்கும் நாட்களில் வாரம் வாரம் வரும் குடும்ப மலரில் வெளி வரும் புது கவிதை பகுதியில் வெளி வரும் கவிதைகளில் பிடித்த கவிதைகளை எழுதி வைத்து கொண்டு பொண்ணுகள்ட்ட கூட படிக்கும் பெண்களிடம் நான் எழுதுனதா காட்டி பந்தா பன்றது உண்டு. பின்பு அந்த மாதிரி எழுதி வைக்கும் பழக்கம் போயிருச்சு இப்பலாம் கவிதை படிகிரதோட சரி சமிபத்தில் நான் ரசித்த கவிதை
முதிர்கன்னி
அப்பாவுக்கு கேட்குமா.. 
அடுத்த தெருவில் வரும்.. 

கல்யாண மேளம்?

எழுதியவர்;ராமன்-சென்னை 



பழ மொழிகள்;

மேல படத்தில் உள்ள அனைத்தையும் நம் வாழ்கையில் கொண்டு வருவோமே ஆனால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.


சிந்தனை செய் மனமே;

நல்லதை எடுத்து காட்டுவதே விமர்ச்சனத்தின் நியாயமான குறிக்கோள் ஆகும்.

நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்கு செய்யும் சேவை ஆகும்.

விரும்பியதை செய்வது சுதந்திரம்,செய்வதை விரும்புவது சந்தோசம்.

நூறு சதவித ஈடு பாட்டுடன் செய்யும் எந்த காரியமும் வீணாவதில்லை.

நன்றி.


Friday 17 May 2013

நேரம்-திரைவிமர்சனம்


ஒரு படம் நல்லா எடுத்தா மட்டும் போதாது அந்த படத்த மக்களிடம் அழகாக கொண்டு வந்து சேர்க்கணும் அப்போது தான் அந்த படம் வெற்றியடையும். நிறைய நல்ல படங்கள் இது போல சரியாக விளம்பர படுத்தாமல் வந்ததே தெரியாமல் தியேட்டரை விட்டு காணாமல் போயி இருக்கிறது. உதரணமாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற படமான ஆரண்ய காண்டம் இந்த படம் பலத்த பாராட்டை பெற்றாலும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்காததால் தோல்வி அடைந்தது. சில மட்டமான படம் மிக பெரிய விளம்பரத்தால் ஒரு வாரத்திலேயே நல்ல லாபம் அடைவதும் உண்டு.

நேரம் இப்படி ஒரு படம் தயாரானதே ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை பல பேருக்கு தெரியாது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின்னின் ரெட் ஜெயெண்ட் மூவிஸ் கைப்பற்றி வெளியிடுகிறது என்ற உடனே படத்திற்கு ஒரு வித எதிர்பார்ப்பு வந்துவிட்டது.

கதை;

 வேலை இல்லாத ஒரு பட்டதாரி வாலிபன் நிவின் தன் தங்கையின் திருமணத்திற்காக ஒரு மோசமான கந்து வட்டிகாரன் சிம்ஹாவிடம் கடன் பெற்று தன் தங்கையின் திருமணத்தை நடத்தி வைக்கிறான். இதனுடன் அவனிற்கு தன் சிறு வயதில் இருந்தே இவனுடன் சேர்ந்து படித்த பெண் நஸ்ரியாவின் மேல் காதல் வருகிறது. தன் காதலை அவளிடம் வெளிபடுத்த அவளும் ஏற்று கொள்கிறாள். இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தகப்பன் தம்பி ராமையாவிற்கு தெரிய வர அவரும் முதலில் ஒத்து கொள்கிறார். பின் நிவின்ற்கு வேலை போனது தெரிந்தும் தன் மகளிற்கு வேறு இடத்தில மாப்பிளை பார்க்கிறார்.

ஒரு நாள் சிம்ஹா  இன்று மாலை 5 மணிக்குள் தனது கணக்கை முடிக்க வேண்டும் என கூறுகிறான். அதே நேரம் தன்னுடைய காதலி நஸ்ரியா அவளின் அப்பன் தம்பி ராமையா தனக்கு வேறு மாப்பிளை பார்பதாகவும் அதனால் தான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் போன் பண்ணி கூருகிறாள். இதனிடையே நிவின் மச்சான் இன்று மாலை 5 மணிக்குள் தனக்கு சேர வேண்டிய டௌரி பணத்தை கொண்டு வருமாறு கேட்கிறார். தனது மகளை கடத்தியதாக தம்பி ராமையா போலிசிடம் புகார் தருகிறார். போலீஸ் நிவினிற்கு போன் செய்து 5 மணிக்குள் நஸ்ரியாவை  ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறபிக்கிறது.

இத்தனை பிரச்சனைகளையும் ஒரே நாளில் எதிர்கொள்ளும் நிவின் தனது நண்பனிடம் பணத்தை கடனாக பெற்று கொண்டு சிம்ஹாவிடம் கொடுபதற்காக வரும் பொழுது அவரிடம் இருந்து பணத்தை ஒருவன் திருடி கொண்டு ஓடுகிறான். இதனிடையே நஸ்ரியாவை தவறுதலாக சிம்ஹா கடத்த நிவின் இத்தனை பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை படம் காலையில் துவங்கி மாலையில் முடிகிறது.

 நடிகர்,நடிகைகள்;

அறிமுக நடிகர் நிவின் நன்றாக இயல்பாக நடித்துள்ளார் தமிழில் பெரிய ரவுண்டு வருவரா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அறிமுக நடிகை நஸ்ரியா ஆளு பார்க்க சொக்க கீது இப்பவே பாப்பாக்கு நிறைய வாய்ப்பு வராத கேள்வி பட்டேன் தனுஷ் கூட ஒரு படம் பன்றாங்க
கண்டிப்பா நல்ல எதிர்காலம் இருக்கு.

சூது கவ்வும் படத்தில் தூள் கிளப்பிய பகலவன் கதாபத்திரத்தில் நடித்த சிம்ஹா இதில் கந்து வட்டிகரனாக வருகிறார். அந்த படத்தில் இவரை காமெடி யா பார்தனளவோ என்னவோ இவர பெரிய வில்லனாலம் ஏத்துக்க முடியல்ல ஆனா இதுலயும் நல்லா பண்ணி இருகார்.

 தம்பி ராமையா வழக்கம் போல அருமை. ரொம்ப நாட்களுக்கு பிறகு சார்லி நடிச்சு இருக்கிறார். நண்பர்களாகவும், திருடர்களாகவும் நடித்து இருக்கும் அனைவரும் நன்றாக செய்து இருக்கிறார்கள்.

சிறிது நேரமே வந்தாலும் நாசரின் நடிப்பு கலக்கல்.



இசை;

அறிமுக இசை அமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளது. கதை ஓட்டத்துடன் வரும் சோமாரி என்ற கானா பாடல் ஆட்டம் போட வைக்கிறது பின்னணி இசை படத்திற்கு ஏற்றவாறு அமைந்து உள்ளது.

இயக்கம் அறிமுக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். புதியவர்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு ஆரோக்யமானதாக அமைந்து உள்ளது. இவர்களின் அடுத்த அடுத்த படைப்புகள் நாம் ஆவலுடன் எதிர்பார்க்க தூண்டுகிறது.  

படத்தின் முதல் பகுதி மெதுவாக செல்கிறது. இடைவேளை பின்பு தான் படமே வேகம் எடுக்கிறது. இந்த படத்தின் வெளியிட்டாளர்  உதயநிதி படத்த மூன்று தடவை பார்த்தாராம். அந்த அளவு நமக்கு பொறுமை இல்லைங்க உங்களுக்கு டைம் இருந்தா போயி படத்த பாருங்க ஒரு தடவ பார்க்கலாம். 

தஞ்சை ஜி வி ஸ்டுடியோல பார்த்தேன் 60 ரூபாய் டிக்கெட் விலை கூட்டம் சுமாரா இருந்துச்சு.

நேரம்- நல்ல நேரம் தமிழ் சினிமாவிற்கு 

Thursday 16 May 2013

விஜய் டாப் 10 மொக்கை படங்கள்

நான் கடந்த முறை இளைய தளபதியின் டாப் டென் படங்களை பதிவிட்டு இருந்தேன் அந்த பதிவை படிக்காதவர்கள் கிழே உள்ள லிங்கில் சென்று படித்து கொள்ளவும்.


இந்த பதிவை படித்த எனது நண்பர் திருப்பூர் கோபி முக புத்தகத்தில் அப்படியே டாப் மொக்கை படங்களை  வரிசை படுத்தி இருக்காலான்னு சொன்னாரு ஆஹா அடுத்த பதிவுக்கு தலைப்பு ரெடி என்று உருவானது தான் இந்த பதிவு.

விஜய் பூவே உனக்காக படத்தில் நடித்த பின்னர் தான் அவரை நடிகராக தமிழகம் ஏற்று கொண்டது அதுவரை அவர் பிட்டு பட நடிகராகவே சோப்பு போடவும் கபடி விளையாடவும் சங்கவியுடன் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தார். பூவே உனக்காக படத்தை பார்த்த பின்பு தான்  எனக்கு தளபதியை பிடிக்க ஆரம்பித்தது அதன் பின் அவர் நடித்த படங்கள் மட்டுமே என் கணக்கில் எடுத்து கொள்ள பட்டது.
10.மாண்புமிகு மாணவன்

எப்பவுமே விஜய்யை வைத்து அவரது தந்தை இயக்கி இருந்த ஒன்ஸ்மோர் தவிர  படமெல்லாம் மொக்கையாகவே இருக்கும். அந்த வரிசையில் இதுவும் ஒரு மொக்கை படமே.

9.நிலாவே வா

இந்த படத்தில் சிலுவை என்னும் கதாபத்திரத்தில் நடித்து இருப்பார். பாடல்கள் நன்றாக இருத்தாலும் படம் படு கேவலமா இருக்கும். இந்த படத்தின் கடைசி காட்சியில் அனைவரும் கடலில் நின்று கொண்டு சிலுவை சிலுவை ன்னு கத்துவாங்க கதறுவாங்க. தியேட்டர்ல இருந்து மக்களும் கதரிக்கிட்டே வெளிய ஓடிட்டாங்க.

8.என்றேன்றும்  காதல்

இந்த படத்துல்ல தயாரிப்பாளர் காசுல்ல நல்லா வெளிநாட்ட சுத்தி பார்த்துட்டு வந்துருபாங்க. விஜய் படம்னா பாட்டாவது நல்லா இருக்கும் இந்த படத்துல்ல அது கூட நல்லா இல்லை.

7.நெஞ்சினிலே

இதும் அவரது தந்தையின் இயக்கத்தில் வந்த செம்ம மொக்கை. இந்த படத்துல்ல இருந்து தான் ரசிகர்கள் இவர புகழுர மாதிரியும் பதிலுக்கு இவர் ரசிகர்களை புகழ்வது போல பாடல் இடம் பெற ஆரம்பித்தது. நான் இந்த பாட்ட கேட்டு மெய் மறந்து போனேன் அந்த கால கட்டத்தில் தலைவர் என்னம்மா நம்ம மேல பாசம் வச்சு இருக்கிறார் என்று.

6.மின்சார கண்ணா

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்திலேயே மிக மட்டமான படம்னா அது இது தான் அந்த காரணத்தினால் தான் இந்த படத்துக்கு அப்புறம் இரண்டு பேரும் சேரவே இல்லை. இவரு யாரு புறாவுக்கே பெல் அடிச்சவருள்ளே என்று தேவை இல்லாத பில்ட் அப் கொடுத்தனால படம் படுத்து கொண்டது.

5.கண்ணுக்குள் நிலவு

காதலுக்க்கு மரியாதை என்னும் மிக பெரிய வெற்றியை தந்த அதே கூட்டணி ஆனா இந்த தடவ அதே வெற்றியை பெற முடியவில்லை. விஜய்யின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதாய் எடுபடவில்லை. ஆனா இசை மிகவும் பேசப்பட்டது பாடல்கள் மிகவும் அருமை.

4.தமிழன்

இந்த படத்தில் நம்ம இந்திய நாட்டு கடன்களை எல்லாம் அடைத்து அவருக்கு தபால் தலை வெளியிடும் அளவிற்கு சாதனை புரிந்த இளைஞராக தளபதி நடித்து இருப்பார் இந்தியாவின் கடனை அடைத்த இந்த படம் தயாரிப்பாளரின் கடனை அடைக்க முடியாமல் போயி விட்டது.

3.புதிய கீதை

இந்த படத்தில் திறமையான மாணவராக நடித்து இருப்பார். இந்த படத்தில் இருந்து தான் அஜித்தை வம்புக்கு இழுத்து படத்தில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி வசனம் வைக்கும் முறை ஆரம்பம் ஆனது. வழக்கம் போல பாடல்கள் அருமை ஆனால் படம் பப்படம்.

2.உதயா

இந்த படத்தில் தான் விஜய்யும் இசை அமைப்பாளர் ரஹ்மானும் முதன் முதலாக ஓன்று சேர்த்தனர். பொருளாதார சிக்கலில் சிக்கிய  இந்த படதின் தயாரிப்பாளர் நடராஜன்  பல வருசமா படத்தை கிடப்பில் போட்டு விட்டார். ரொம்ப நாள் கழித்து இந்த படத்தை வெளியிட்டார். உடனே எடுத்து ரிலிஸ் பண்ணுனாலே படம் ஓடுறது கஷ்டம் அதுல இது வேறயா படம் ஊஊ.

1.சுறா   

நான் விஜய் ரசிகனாக இருந்தும் விஜய் நடிபிற்காக மேல கூறிய அவரது அனைத்து  மொக்கை படங்களையும் ரசித்ததுண்டு. ஆனால் என்னையும் வெறுப்பேற்றிய  படம் என்றால் அது இதுவே எனவே இதற்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

டாப் டென் என்று சொல்லிவிட்டதால் அழகிய தமிழ்மகன், குருவி,வில்லு, ஆகிய படங்கள் இடம்பெற வில்லை.

Tuesday 14 May 2013

வீரர்களின் குணத்தை மாற்றுகிறதா - ஐபிஎல்?

(கோவப்படும் கல்லிஸ்) 
கடந்த வெள்ளிகிழமை புனே வாரியர்ஸ் அணி கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி எடுத்த 152 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடியது. உத்தப்பாவும், ஆரோன் ஃபின்சும் ஆடி வந்தனர்.

ஆட்டத்தின் 3வது ஓவரை வீச வருகிறார் காலிஸ், உத்தப்பா நேராக அடிக்க பந்து காலிஸ் காலில் பட்டு வந்தது போல் தெரிந்தது, நேராக ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்கியது. ஃபின்ச் மிகவும் வெளியே இருந்தார் என்பதில் ஐயமில்லை. எனவே பந்து காலிஸின் ஷூவில் பட்டு ஸ்டம்பை தாக்கியதா என்பதை அறிய 3வது நடுவர் அழைக்கப்பட்டார்.

ஏகப்பட்ட ரீப்ளேக்கள் காண்பிக்கப்பட்டும் காலிஸ் ஷூவை பந்து தொட்டு விட்டு வந்ததற்கான சாட்சியங்கள் இல்லை. ஆனால் காலிஸ் தீவிரமாக தன் காலில் பட்டுத்தான் பந்து ஸ்டம்பில் பட்டது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் நாட் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தார்.

கடுப்பானார் காலிஸ், "நான் என்ன ஏமாற்றுக்காரனா?" என்று கடும் கோபமாக நடுவர் சுதிரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எப்போதும் மூக்கை நுழைக்கும் கம்பீர் இந்த முறை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடுவரிடம் காலிஸ் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பானது. ஆனால் அதே ஓவரில் பின்ச் விக்கெட்டை பவுல்டு மூலம் வீழ்த்திவிட்டு நடுவர் சுதீரை ஒரு பார்வை பார்த்தாரே காலிஸ், அதில் அவரது அனைத்துக் கோபங்களும் வெளிப்படையாக தெரிந்தது.கடைசி பந்தை வீசி முடித்த பிறகும் நடுவரிடம் பேசியபடியேதான் இருந்தார் காலிஸ்.

இதில் நடுவரின் தவறென்ன இருக்கிறது? சந்தேகமிருந்தால் 3வது நடுவரை அழைக்கவேண்டியதுதான்! ஆனால் 3வது நடுவர் போதிய சாட்சியங்கள் இல்லாததால் நாட் அவுட் என்றார். ஆனால் தன் ஷூவில் பட்டது பவுலருக்குத்தானே தெரியும்? நாட் அவுட் என்றவுடன் கோபம் வந்தது காலிசுக்கு 'நான் என்ன ஏமாற்றுக்காரனா? என்று கடுப்படித்தார்.

(மோதலில் கம்பீர் கோக்லி)

ஐபிஎல். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட பணம் புரள்கிறது. வீரர்கள் ஏகப்பட்ட தொகைகளுக்கு ஏலம் எடுக்கப்படுகின்றனர். இது தவிர ஒவ்வொரு போட்டிகளுக்கும் கடுமையாக செலவழிக்கப்படுகிறது.

இவையனைத்தும் வீரர்களின் மனோநிலையில் பிரதிபலிக்கிறது. உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உள்ளவர்களையும் இந்த ஐபிஎல் மிக மோசமான மனிதராக, வீரராக மாற்றிவிடுவதுதான் நடந்தேறி வருகிறது.

இந்த முறை காலிஸ், உலகிலேயே மிகவும் சாந்தமான வீரர் என்று இவரை கூறலாம். பாருங்கள் அவரே, ஒரு ரன் அவுட் மறுக்கப்பட்டதை ஏதோ தன்னை ஏமாற்றுக்காரன் என்று அது பறைசாற்றுவதகா நினைத்து நடுவரை கடுப்படிக்கிறார்.
(கோவத்தில் பட்டேல்)

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் ஆட்டம் என்பதை தகர்க்கும் மிகப்பெரிய ஒரு சீரழிவை ஏற்படுத்துவதைத் தவிர ஐபிஎல் கிரிக்கெட் வேறு என்னதான் செய்து விட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால் நாட்டுக்காக ஆடும்போது இந்த உத்வேகத்தில் பாதியைக் கூட காணும்.! இங்கிலாந்திலும் ஆஸ்ட்ரேலியாவிலும் மீண்டும் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராகவும் கடும் உதைகளை இந்தியா சந்தித்தபோது ஒரு வீரர் முகத்திலாவது ஒரு வெறுப்புணர்வோ, அல்லது ஏமாற்றவுணர்வோ, குற்றவுணர்வோ ஏற்படவில்லையே ஏன்?

நடுவர் தவறாக அவுட் கொடுத்ததற்கு சச்சினே ஒரு முறை நடப்பு ஐபிஎல் தொடரில் மூஞ்சியை காண்பித்துச் சென்றார். சச்சின் போன்ற அமைதியின் உருவத்தையே பணம் குணத்தை மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கூறுங்களேன்.

நன்றி;வெப்துனியா 

Sunday 12 May 2013

படம் பார்த்து அறிந்து கொள்வோம்

1.ஒரு செல் உயிரினம் அமீபா
2.இரண்டு தலைநகர் கொண்டது காஷ்மீர்
3.மூன்று வயிறுள்ள விலங்கு ஒட்டகம்
4.நான்கு வேதங்கள் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்.
5.ஐந்து விட்டமின்கள் அடங்கிய பழம் வாழைபழம்
6.ஆறு கால்கள் கொண்டவை பூச்சியினம்
7.ஏழு குன்றுகளின் நகரம் என படுவது ரோம்
8.எட்டு நூல்கலின் தொகுப்பு எட்டுத்தொகை

9.ஒன்பது உணர்வுகளே நவரசம் எனபடுகிறது
10.பத்து கட்டளைகளை அடிப்படையாக கொண்டது பைபிள்