Wednesday 25 December 2013

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள் !!!

1.காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேக்ஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.

2.காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..

3.காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..

4.உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..

5.காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..

6.முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..

7.ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..

8.உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..

9.உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..

10. கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..

#நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..!

Monday 23 December 2013

முயன்றால் உங்களால் முடியும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.

வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.

”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்...

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.

உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்...

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =

வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...

“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.

தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.

என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.
                           
துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.

தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும். “படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...

இது ஒரு மீள் பதிவு..

Friday 20 December 2013

2013 - சூப்பர் பொழுது போக்கு படங்கள்

இந்த வருடம் வெளியாகி நல்ல படம் & சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியலில் என்னை கவர்ந்த டாப் டென் படங்களை பார்ப்போம்.


10.மூடர் கூடம்;

இந்த படம் கொரியன் படத்தின் காப்பி என்று விமர்சகர்கள் கூறினாலும் கொரியன் படமெல்லாம் பார்த்திராத {பார்த்தாலும் எனக்கு புரியாது} என்னை போன்ற சிலருக்கு இந்த படம் ரொம்பவே பிடித்தமான ஒன்றாகி போனது. வெறும் அடிதடி சண்டை என பார்த்து வெறுத்து போன ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. கோடி கணக்கில் கொள்ளை அடிக்கும் அரசியல் வியாதிகளையே மன்னித்து விடும் நாம் இந்த படத்தின் இயக்குனர் நவீனை மன்னித்து விட்டு விடுவோம். இந்த படம் காப்பி இல்லாமல் இருந்தால் முதல் இடம் கொடுத்து இருப்பேன். அடுத்த படமாவது ஒரிஜினல்லா  கொடுங்க மிஸ்டர் நவீன்.


9.கண்ணா லட்டு தின்ன ஆசையா;

நம்ம சந்தானம் நகைச்சுவை நடிகரில் இருந்து தயாரிப்பாளர் ஆக உயர்ந்து அதில் வெற்றியும் பெற்ற படம். இந்த படம் வெற்றி அடைய பெரிய காரணம் வேற என்ன நம்ம பவர் ஸ்டார் தான். குறைந்த முதலிட்டில் பெரிய லாபம் பெற்ற படம். மேல சொன்ன படமாவது கொரியன் படத்தை சுட்டு எடுத்தாங்க ஆனா நம்மாளு சந்தானம் இயக்குனர் பாக்யராஜ் படத்தையே சுட்டுட்டார் என்ன நான் சொல்றது.


8.வருத்தபடதா வாலிபர் சங்கம்;

இந்த படம் எதுக்கு இப்படி ஒடுசுன்னே தெரியல படமும் அவ்ளோ பெரிய காமெடி எல்லாம் இல்ல பாடல்கள் வேணும்னா கேக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. ஹரிதாஸ் மாதிரி நல்ல படமெல்லாம் நம்ம இந்திய ரூபாய்
மாதிரி தள்ளாடும் போது இந்த மாதிரி படங்கள் நல்லா கல்லா கட்டும் போது வருத்தமாகவே உள்ளது.



7.உதயம் NH 4;

சித்தார்த் நடிப்பில் வெளிவந்த படம் இந்த படத்தின் கதையை ஆரம்பம் முதல் சுவாரசியமாக கொண்டு சென்று இருந்தார்கள். இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருந்த கே.கே.மேனன் என்னை மிக கவர்ந்தார். இந்த படமும் முதலுக்கு மோசம் இல்லை.


6.எதிர் நீச்சல்;

நடிகர் தனுஷ் தயாரிப்பில் வெளி வந்து சக்கை போடு போட்ட படம். சிவா இந்த படத்தில் இருந்தே முழு வெற்றி பட நாயகனனார். பாடல்கள் எல்லாம் செம்மையா இருந்துச்சு. படம் முன் பாதி செம்ம காமெடி இடைவேளை பின்பு சுமார தான் இருந்துச்சு. ஆனா படம் வெற்றி படமே அதுல சந்தேகம் இல்லை.


5.ராஜா ராணி;

அறிமுக இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் ஹிட் அடித்த ஒரு லவ் ஸ்டோரி. இந்த படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் எல்லோரையும் ஓரம் கட்டி விட்டார் நம்ம ஜெய். சந்தானம் காமெடியும் நல்லா தான் இருந்துச்சு. ஆர்யா,நயன்தாரா,நஸ்ரியா என அனைவரும் நன்றாக தங்கள் வேலையை செய்து இருந்தனர். இந்த வெற்றியை அடுத்த படத்திலும் தொடர்வார இயக்குனர் அட்லி பொருத்து இருந்து பார்ப்போம்.


4.பாண்டிய நாடு;

ரொம்ப நாளா வெற்றி படமே கொடுக்க முடியாமல் இருந்த விஷாலை நடிகராக வெற்றி பெற வைத்தது மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வைத்த ஒரு படம். படம் எந்த இடத்திலும் போரடிக்காமல் அழகாக விறு விறுப்பாக கொண்டு சென்று இருந்தார் இயக்குனர் சுசிந்திரன்.


3.சூது கவ்வும்;

விஜய் சேதுபதி யின் வித்தியாசமான முயற்சிகளில் மிக பெரிய வெற்றி பெற்ற படம். குறும் பட இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் சக்கை போடு போட்டது. குறும்பட நடிகர்கள் அனைவரும் கலக்கி இருந்தார்கள் பாடல்கள் பின்னணி இசை என எல்லாம் கலகலாக அமைந்து வசூலும் கலக்கல். இந்த வருடத்தின் மிக பெரிய ஹிட்களில் இதும் ஓன்று.


2.சிங்கம் 2;

சூர்யாவின் தொடர் தோல்விகளுக்கு பின்பு வெளிவந்து அவரை நிமிர்ந்து உட்கார வைத்த படம். சும்மா சொல்ல கூடாது படம் ஆரம்பித்ததில் இருந்து செம்ம ஸ்பீட். அதும் சண்டைகள் எல்லாம் சும்மா ஜிவ்ன்னு இருந்துச்சு.
ஹரி சும்மா பரபர ன்னு இயக்கி இருந்தார். ஆனா இந்த வருஷம் வித்தியாசமான முயற்சிகள் செய்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இந்த படத்தின் வெற்றியை வைத்து மீண்டும் தமிழ் சினிமாவை மசாலாவில் இழுத்து விட்டு விடுவார்களோ என்ற பயம் வேறு உள்ளது.


1.விஸ்வரூபம்;

படம் வெளி ஆக விடாமல் எவ்வளவு போராட்டம் அதை வெளி கொண்டு வர எம்புட்டு கஷ்டம் நம்ம உலக நாயகனுக்கு. மிக பெரும் எதிர்ப்பை சமாளித்து மிக பெரிய வசூலை வாரி குவித்த படம். இன்றும் நடிப்பில் கமலை மிஞ்ச ஆள் இல்லை அந்த முதல் பாடலிலேயே ஒரு பெண்ணுக்கு உரிய நளினமான அசைவுகளை கண் முன் நிறுத்தி ஆடி இருப்பார். ஆனா இந்த படம் பார்க்க என் கூட வந்த என் சித்தப்பா தூங்கி விட்டார். எல்லோருக்கும் பிடித்த படமா என தெரியவில்லை. எனக்கு பிடித்து இருந்தது.

இது தவிர கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதலால் காதல் செய்வீர், சென்னையில் ஒரு நாள், ஹரிதாஸ், ஆரம்பம், நேரம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஒநாயும் ஆட்டுக்குட்டியும், என சுமாரான படங்களும் வெற்றி படங்களே... 

Wednesday 18 December 2013

கபாலி இன்னா சொல்றாருன்னா ?


அறிந்துகொள்வோம்;

வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள்.

உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்

மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம்.

வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும்

பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.

உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும்.


வீட்டில் எலி தொல்லையா...?

வீட்டை என்னதான் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருந்தாலும், பலரது வீட்டில் எலித் தொல்லையால் பெரும் பிரச்சனை ஏற்படுவதுண்டு.

எலிகளின் மீது ஒரு விதமான வெறுப்பு ஏற்படுவதற்கு காரணமே, அவை வீடு மற்றும் தோட்டத்தை நொடி‌ப் பொழுதில் அசிங்கமாக்கிவிடுவதுதான். எலிப் பிரச்சனையின்றி வீடு மற்றும் தோட்டத்தை வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எலிகளுக்கு புதினாவின் வாசனை சுத்தமாக பிடிக்காது. வீட்டில் எலி நடமாடும் பகுதிகளில் புதினா இலைகள் அல்லது புதினாவின் வாசனை உடைய திரவியம் ஆகியவற்றை வைத்தால் எலி தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

குப்பைகளை கொட்டியப்பிறகு குப்பைத்தொட்டிகளை சுத்தமாக கழுவி வையுங்கள். முக்கியமாக, ஈரமாக இருக்கும் குப்பைகளை போடும் போது, மறக்காமல் அதனை மூடி வைக்க வேண்டும்.

தோட்டத்தின் கழிவுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டில் ஏதேனும் ஓட்டை இருந்தால், அதனை உடனடியாக சிமென்ட் அல்லது மண் வைத்து அடைத்து விடுங்கள்.

இப்போது விற்கப்படும் எலிகளுக்கான விஷ மருந்துகளை உண்டப்பின் எலிகள் வீட்டுக்குள்ளேயே இறந்துபோவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இவ்வகை மருந்துகளை உபயோகிக்கும் போது கவனம் தேவை.


இவை அனைத்தயும் விட எளிமையானது. வீட்டில் ஆங்காங்கே நாஃப்தலின் (ரசக‌ற்பூர‌ம்) பால்ஸ் வைப்பதுதான். நாஃப்தலின் பால்ஸ் இருப்பது தெரிந்தா‌ல் எலிகள் அப்பக்கமே வராது.


Monday 16 December 2013

2013 - ஆக சிறந்த மொக்கை படங்கள்

2013 ம் வருடம் தரமான படங்களை தவிர அதிகம் மொக்கை படங்களே வந்துள்ளன அவற்றில் நாம் ரொம்ப எதிர்பார்த்த இயக்குனர்கள்&நடிகர்கள் படம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளபட்டு உள்ளன அவை இதோ.

10.அன்னக்கொடி;

அலைகள் ஓய்வதில்லை என்று ஒரு படம் எடுத்து நம்ம தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் என்ற துடிப்பான ஹீரோவையும் ராதா என்ற அழகான ஹீரோயினையும் கொடுத்தவர் நம்ம இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அதே போல தன் மகளுக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் தன்  மகளான கார்த்திகாவை நடிக்க வைத்தார் ராதா. ஆனா இந்த படத்தோடு மும்பைக்கு கார்த்திகா மூட்டை கட்டுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.


9.கடல்;

மணிரத்னத்தால் ரொம்ப பில்டப் பண்ணபட்ட படம். பாடல்களை தவிர படத்தில் வேற ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. இன்னும் எவ்ளோ நாள் தான் இந்த ஆளு இப்படி இருட்டுளையும்,புரியாத வசனத்தையும் வச்சு படம் எடுப்பாருன்னு தெரியலையே.


8.ஆதி பகவான்;

அமீர் இவரு அடுத்த பில்டப் மேன். வருஷக் கணக்கா இந்த படத்த எடுத்தார்யா இந்த மனுஷன். அப்படி இந்த படத்தில் என்ன இருக்குன்னு இத்தனை வருஷமா இழு இழு ன்னு போட்டு எடுத்தார் இந்த ஆளு. ஒரு வேலை பாங்காங்ல இந்த பட ஹீரோயின் நீது சந்திராவோடு பல்லாங்குழி விளையாடி இருப்பாரோ.


7.கௌரவம்;

என்னா டைரக்டர்யா இவருன்னு நினைத்த ஒருத்தர் திரு.ராதாமோகன். அவரோடைய முந்தைய படங்கள் அந்த மாதிரி. அவரோட முதல் படமான அழகிய தீயே என்னோட பேவரிட் படம். அவரோட அனேக படமான பொன்னியின் செல்வன், மொழி, அபியும் நானும், பயணம் என அனைத்துமே என்னால் ரசிக்கப்பட்ட படம். ஆனா இவரிடம் இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவே இல்லை. கருத்தான படம் தான் ஆனா மக்களிடம் எடுபடவில்லை.


6.மூன்று பேர் மூன்று காதல்;

இந்த வருஷம் நாம ரொம்ப எதிர்பார்க்கும் இயக்குனர்கள் எல்லாம் மண்ணை கவ்விட்டாங்க அதுல இவரும் ஒருத்தர் திரு.வசந்த். இவரு படத்தில் பாடல்களாவது தேறும் இந்த படத்தில் இரண்டு பாடல்களை தவிர சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்லை.


5.இரண்டாம் உலகம்;

இயக்குனர் செல்வராகவனின் கனவு படம். ஆனா இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் தூக்கம் தொலைந்து போய் விட்டதாக கூறுகிறார்கள். இனிமேலாவது செல்வராகவன் கனவு காண்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.


4.பட்டது யானை;

ஏற்கனவே விஷாலை வைத்து மலைகோட்டை என்று படம் எடுத்துட்டு அதே விஷாலை வைத்து அதே கதையை பெயரை மற்றும் மாற்றி மறுபடி ரீமேக் பண்ணி இருக்கார் நம்ம இயக்குனர் திரு.பூபதிபாண்டியன்
ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் துணிச்சல்.


3.தலைவா;

இந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் என்றதுமே எனக்கு தெரிந்து விட்டது எப்படியும் இது தளபதிக்கு பட்டை தான் என்று என் நினைப்பு பொய் ஆகவில்லை. நன்றி இயக்குனர் விஜய் அவர்களுக்கு. தமிழகத்தை ஆளும் கனவில் இருந்து விடுபட்டு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் தளபதி ஆட்சி தான்.


2.நையாண்டி;

தேசிய விருது பெற்ற இயக்குனர்&நடிகர் இணைந்து செய்த படம் ஆனா இப்படி படம் பார்க்க சென்ற மக்களை நையப்புடைப்பார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. இதில் படத்திற்கு மட்டமான விளம்பரம் வேற போங்கடா டேய்.


1.அலெக்ஸ் பாண்டியன்&அழகுராஜா;

இந்த வருடம் கார்த்திக்கு சிறப்பானதாக அமையவில்லை பாவம் மனுஷன் ஹிட் மேல ஹிட் கொடுத்து இப்போ பிளாப் மேல பிளாப் பா கொடுத்து கொண்டு இருக்கிறார். அதுக்கு தான் ஓவரா பேச கூடாது இனிமே பேச்சை குறைத்து கொண்டு கொஞ்சம் நடிங்க பாஸ்.

இதை தவிர பாலாவின் பரதேசி, ராமின் தங்க மீன்கள், மொக்க சிவா நடித்த யாயா&சொன்னா புரியாது&தில்லு முல்லு, தனுஷின் மரியான், விக்ரமின் டேவிட் என நீண்ட பட்டியலே இருக்கிறது. மொத்தத்தில் 2013 ம் ஆண்டு பல மொக்கைகளை கொண்டு உள்ளது.

Wednesday 11 December 2013

எல்லா புகழும் இறைவனுக்கே !!!!!


சுமந்தது நீ அல்லவா!!!
பிறகு சுமப்பவன் நான் அல்லவா!!

பெற்றது நீ அல்லவா!!
பேணி காப்பவன் நான் அல்லவா!!!

வலியால் துடிப்பது நீ அல்லவா!!
மனத்தால் துடிப்பவன் நான் அல்லவா!!

இத்தனையும் எதற்காக?
என்று தோன்றும் முன்னர்...
"குவா குவா..." சதம் கேட்டு
அத்தனையும் மறந்துபோக...

ஓடிச்சென்று கையில் எடுக்க...
வாரி அணைத்து முத்தம் கொடுக்க...
உற்ற துணையை உற்று நோக்க...
நீர் மல்க என்னை கண்ணால் அழைக்க...

வேண்டி நின்ற வரம் இன்று...
வந்ததென அவள் உரைக்க...
நாடி வந்து என் தோளில்...
ஆறுதலாய் முகம் புதைக்க...

என்ன தவம் செய்தேனென்று மனம் நினைக்க...
என் கணங்களில் இருந்து நீர் வழிந்தோடியது!!!

ஆனந்தக்கண்ணீர்!!! - முதன்முறையாக!!!

கவிதையை எழுதியவர்- மலர்விழி (A) Malar

இப்போ எதுக்கு இந்த கவிதைன்னு கேக்குறிங்களா? ஆமாங்க நேற்று தான் நான் அப்பா ஆனேன். இனி இந்த உலகத்தில் எங்களுக்கு என்று ஒரு சொந்தம் மலர்ந்து விட்டது.

பிரசவ அறையில் வழியில் துடித்தது என்னவோ என் மனைவி தான். ஆனால் வெளியில் நின்ற எனக்கு? அந்த நிலையை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.

எல்லாம் இனிதாய் முடிந்து அந்த பெண் மருத்துவர் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று என் குழந்தையை என் கைகளில் கொடுத்த பொழுது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர். இதற்கு பெயர் தான் ஆனந்த கண்ணீரோ? சத்தியமா இதுக்கு முன்னாடி நான் அழுததே இல்லைங்க.

தாயையும்&மகளையும் எந்த குறையும் இல்லாது என்னிடம் சேர்த்த அந்த இறைவனுக்கு என் நன்றியை செலுத்துகிறேன். இறைவனின் நாட்டத்தை செயல்படுத்திய அந்த பெண் மருத்துவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

எனது சந்தோசத்தை என் பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே...

Monday 9 December 2013

“எனக்கு சினிமா இயக்குவது செக்ஸ் வைத்துக்கொள்வது போல...”


எட்டு ஆண்டுகள் ஆயிற்று ஒரு படம் இயக்கி... மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 'தலைமுறைகள்’ என்ற படத்தோடு களம் காண இருக்கிறார் பாலுமகேந்திரா. படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார்.

ஒருபுறம் புத்தகங்கள், மறுபுறம் உலக சினிமா டி.வி.டி.கள். பின்னணியில் 'ஓம்’ ரீங்காரம் ஒலிக்க இருவரிடமும் உரையாடியதில் இருந்து...

'' 'உங்களைச் சந்திக்கணுமே சசி’னு சார்கிட்ட இருந்து ஒருநாள் போன் வந்தது. 'நானே வர்றேன் சார்’னு சொன்னேன். 'இல்ல நான் வர்றதுதான் முறை’னு சொன்னவர், கொஞ்ச நேரத்தில் என் அலுவலகம் வந்தார். அப்ப சார் என்னிடம் சொன்ன கதைதான், இந்தத் 'தலைமுறைகள்’. கதை பிடிச்சிருந்தது... 'நானே தயாரிக்கிறேன் சார்’னு சொன்னேன். ரொம்பக் குறைவான பட்ஜெட்ல அழகா பண்ணித் தந்திருக்கிறார். இதுதான் இன்னைக்குத் தேவையான சினிமா!'' என்று உரையாடலைத் தொடங்கிவைக்கிறார் சசி.

''இந்தப் படத்துல சார் நடிச்சிருக்கார். ஆனா, அந்தக் கேரக்டர்ல அவர்தான் நடிக்கப்போறார்னு எனக்குத் தெரியாது. கதை சொல்லி முடிச்ச பிறகு, 'உங்களுக்கு ஒரு விஷயம் காட்டுறேன்’னு சொல்லி ஒரு தாத்தாவின் போட்டோ காட்டினார். 'யார் சார் இவர்? கண்ணு பவர்ஃபுல்லா இருக்கே. உங்களுக்கு இன்னொரு சொக்கலிங்க பாகவதர் கிடைச்சிட்டாரு’னு சொன்னேன். 'நான்தான் இது. அந்தக் கேரக்டர்ல நான்தான் நடிக்கப்போறேன்’னு  சார் சொன்னார்!'' என்று சசிகுமார் முடித்த இடத்தில் இருந்து தொடங்குகிறார் பாலுமகேந்திரா.

''நம் குடும்பங்களின் அடிப்படை உறவுகள்தான் படத்தின் கரு. நம் குடும்பங்களைத் தூக்கிச் சுமந்து கரைசேர்ப்பது நம் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய கதை. பெண்கள் மீது எனக்குள்ள ஆராதனை கலந்த மரியாதையும் மதிப்பும் படத்தில் வெளிப்படும்!''

''நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்குகிறீர்கள். ஏதேனும் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?''

''திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்... இந்த நாலு பேரும்தான் படத்தின் முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள். இந்தப் படத்தில் அந்த நாலுமே நான்தான். அதனால், எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. என் படத்தை நானே எழுதி, நானே ஒளிப்பதிவு பண்ணி, நானே இயக்கி, நானே எடிட் செய்தால்தான் எனக்குத் திருப்தி. ஒரு படம் எடுப்பது என்பது, எனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணோட செக்ஸ் வெச்சுக்கிற மாதிரி. 'நீ பாதி பண்ணு, நான் பாதி பண்றேன்’னு அதை என்னால் யார்கிட்டயும் பிரிச்சுக் கொடுக்க முடியாது.

ஓர் எழுத்தாளன், 'இது என் சிறுகதை’னு சொல்றான். ஓர் ஓவியன், 'இது என் ஓவியம்’னு சொல்றான். ஆனா, ஒரு சினிமாக்காரன், 'இது என் படம்’னு சொல்ல முடியலை. காரணம், சினிமா இங்கே ஒரு கூட்டுத் தயாரிப்பு. ஆனா, சரியோ தப்போ என் படத்துக்கு நான்தான் பொறுப்பு. 'எ ஃபிலிம் பை பாலுமகேந்திரா’னு போட்டேன்னா, அதை ஒரு திமிரோடதான் போடுவேன்!''

''சினிமா 100 விழாவைப் புறக்கணித்து உங்கள் ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தீர்கள். அந்த நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருப்பதாக நினைக்கிறீர்களா?''

''கலந்துக்கலைனுதான் சொன்னேனே தவிர, என் ஆதங்கத்தை எங்கேயும் நான் வெளிப்படுத்தலை. அதைப் பத்தி ஏன் என்கிட்ட கேக்குறீங்க? இப்படி சிண்டு முடிந்துவிட்டு கலைஞர்களை சிக்கலில் மாட்டிவிடும் வேலை வேண்டாமே?''

''இது சிண்டு முடிவதற்கான கேள்வி அல்ல. அரசு, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 10 கோடி ரூபாயை அந்த நிகழ்வுக்கு அளித்திருக்கிறது. அது சினிமாவுக்கு ஆக்கபூர்வமான நன்மைகளை விளைவித்திருக்கிறதா என்று ஒரு சினிமா படைப்பாளியான உங்களிடம் கேட்கிறேன்!''

''அரசைக் கேளுங்கள். அல்லது இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். ஆனால், ஒரு விஷயம் சொல்கிறேன். தமிழ் சினிமாவின் பொக்கிஷம்னா, அது பழைய படங்கள்தான். அதோட நெகட்டிவ்களைக் காப்பாத்த, பாதுகாக்க ஒரு காப்பகம் தமிழ்நாட்டுக்கு அவசியம் தேவை. இதை மூணு வருஷமா சொல்லிச் சொல்லி தலப்பாடா அடிச்சுட்டு இருக்கேன். ஆனா, அதை யாரும் கண்டுக்கவே இல்லை!''

''இதை ஏன் அரசாங்கம் செய்யணும்னு நினைக்கிறீங்க? சினிமாத் துறையினரே சேர்ந்து செய்யலாமே!''

''செய்யணும்தான்! அதுக்கான முறையையும் சொன்னேன். கேளிக்கை வரி மூலம் அரசாங்கம் வருமானம் ஈட்டுவதால், பாதி பணத்தை அரசாங்கம் போடட்டும். சினிமாத் துறையினர் மீதியைச் செலவழிக்கட்டும். மேற்கொண்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, சினிமாவில் ஆர்வமுள்ள ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் சில சிப்பந்திகள் மட்டுமே போதும். இப்படியான ஒரு காப்பகம் இல்லாமல் நிறைய தமிழ்ப் படங்கள் அழிஞ்சிருக்கு. 'அழியாத கோலங்கள்’, 'வீடு’, 'சந்தியா ராகம்’, 'மூன்றாம் பிறை’, 'மறுபடியும்’ போன்ற என் படங்களின் நெகடிவ்கள் இப்போது இல்லை. அவையெல்லாம் 50 வருடங்களுக்கு முன் வந்த படங்கள் இல்லை. வெறும் 20 வருடங்களுக்குள் வந்த படங்கள். சினிமாவைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், இந்தப் புள்ளியிலிருந்து தங்கள் பணிகளைத் தொடங்கலாம்!''

நன்றி;விகடன்

Friday 6 December 2013

வெங்காயத்தின் மகிமை


வெங்காயத்தின் காரத் தன்மைக்குக் காரணம் அதில் உள்ள “அலைல் புரோப்பைல் டை சல்பைடு” என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

முருங்கைக்காயை விட அதிக பாலுணர்வு தரக்கூடியது. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும், வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலின் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களை விட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும், வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செ‌லினியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சனை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும் தேவையான செலினியச் சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள் செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

Friday 29 November 2013

நவீன சரஸ்வதி சபதம் - கடவுளின் மங்காத்தா


எங்கேயும் எப்போதும், ராஜாராணி படத்தில் ஜெய்யின் கலக்கலான நடிப்பு ரொம்ப பிடித்து இருந்ததால் இந்த படம் ஜெய்க்காக  பார்க்க வேண்டும் என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். தஞ்சை ஜி.வி காம்ப்ளெக்ஸ்ஸில் படம் நான் செல்வதற்குள் படம் 2.30 மணிக்கே தொடங்கி விட்டது. 10 நிமிடம் தாமதம் சரி ஜன்னல் ஓரம் 3.00 மணிக்கு அங்கு செல்வோம் என சென்றால். மாலை 6 மணி காட்சிக்கு தான் படம் திரையிட படுவதாக அறிவித்தார்கள். சரி மீண்டும் ஜி.வி காம்ப்ளெக்ஸ் சென்று 20 நிமிட தாமதமாக படம் பார்க்க அமர்ந்தேன்.

ரொம்ப நாள் ஆச்சு சாமி படம் பார்த்து சிறு வயதில் சிவாஜி கணேசன் சிவனாக நடித்து டி வியில் பார்த்ததுண்டு அது போல இந்த படமும் சிவபெருமானின் திருவிளையாடலே.

படம் டைட்டிலே நவீன சரஸ்வதி சபதம் என்று இருந்ததால் இது சாமி படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. கடவுள் நாரதர் பார்வையில் திரைக்கதை அமைத்து கதை சொன்ன விதமே எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. சிவபெருமானாக சுப்பு பஞ்சு நாரதராக மனோபாலா. சாமி படம் என்றதும் பூஜை,நாட்டியம் அப்படி நினைச்சுறாதிங்க. இவரு ஹைடெக்கான சிவபெருமான் சிஸ்டம்,ஆப்பிள் போன், ஐ பேட் என கலக்கலா இருக்காரு.


கதை;

சிவபெருமானான சுப்பு நாரதரான மனோபாலாவிடம் இந்த உலகில் தான் விளையாண்டு ரொம்ப நாள் ஆகுது அதுனால ஒரு நான்கு பேர தேர்ந்து எடு அவர்களோடு நாம் ஒரு திருவிளையாடல் விளையாடுவோம் என கூறுகிறார். மனோபாலாவால் தேர்ந்து எடுக்கப்படும் அந்த நால்வர் நம்ம ஜெய், வி.டி.வி கணேஷ், சத்யன், அப்பறம் நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் படத்தில் பஜ்ஜி கதாபாத்திரத்தில் நடித்தவர். 

முதல் பாதி முழுவதும் இந்த நால்வரின் அறிமுகம் அவர்களை பற்றிய முன் கதை என நல்லா ஜாலி யா நகைச்சுவையா போகுது. அதிலும் ஜெய் கதாநாயகி நிவேதா தாமஸ் மேல் கொள்ளும் காதல் அத பார்க்க ரொம்ப நல்லா இருக்கு சூப்பர். நிவேதா பார்க்கவும் நல்ல அழகா இருகாங்க. ஒரு ஜாடையில் பார்க்கும் போது கண்ணா லட்டு திண்ண ஆசையா விசாகா மாதிரி இருக்கு. படம் இடைவேளை வரை தான் நிவேதாவிற்கு வேலை அதுக்கு அப்பறம் படத்தின் இறுதியில்தான் வாய்ப்பு.  எல்லா தமிழ் சினிமாவிலும் வருவது போல.

காதல் செட் ஆனதும் என்ன கல்யாணம் தானே. ஜெய் நிவேதா இருவருக்கும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் செய்வதாக நிச்சயம் ஆகிறது. ஜெய் தன் நண்பர்கள் நான்கு பேருக்கும் பேச்சுலர் பார்ட்டி கொடுக்க பாங்காங் செல்கிறார். அங்க தான் நம்ம சிவபெருமான் என்ன பண்ணுறாருன்னா ஹாலிவுட் படமான ப்ளூ லாகூன் பார்த்துட்டு அந்த படத்தில் வருவது போலவே இந்த நால்வரையும் ஒரு தீவில் சிக்க வைக்கிறார்.

அந்த சிக்கலில் இருந்து மீண்டு நால்வரும் ஊர் திரும்பி சென்றார்களா. ஜெய்யின் திருமணம் நடைபெற்றதா என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருப்பதே இந்த நவீன சரஸ்வதி சபதம்.


இரண்டாம் உலகம் பார்த்து வெறுத்து போய் இருந்த எனக்கு இந்த படம் ரொம்பவே பிடித்து இருந்தது. ஜெய் வழக்கம் போல கலகல நடிப்பு அவரது அறிமுக கதை செம்ம காமெடி. இந்த ரூட்டில் பயணம் செய்தாலே போதும் ஜெய் சூப்பர் கலக்குங்க.

அடுத்து கதாநாயகி நிவேதா அழகு அவங்க வேலை என்னவோ அதை செய்து இருகாங்க.

படத்தில் ரொம்ப கவர்வது நம்ம கணேஷ் தான் அவரது கரகர குரலாகட்டும் பேச்சாகட்டும் செம்ம சிரிப்பு. அப்பறம் நம்ம சத்யன்,பஜ்ஜி எல்லாம் ஓகே குறை சொல்ல முடியல.

படத்தில் குறையே இல்லையா இருக்கு இடைவேளைக்கு பின்பு அந்த தீவில் இந்த நால்வரையே பார்க்கும் போது கொஞ்சம் மொக்கையா இருக்கு ப்ளூ லாகூன் ஆங்கில படத்தில் கெல்லி ப்ரொக் அந்த தீவில் ரொம்ப ப்ரீயா இருப்பாங்க பார்க்க கிளுகிளுப்பா இருந்துச்சு ஒரு பிட் கூட படத்தில் சேர்த்து இருப்பாங்க அந்த சீனுக்காகவே படம் நல்ல இருந்துச்சு எனக்கு. அது இந்த படத்தில் இல்லாதது எனக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் சென்சார்ல அவனுங்க பார்த்துட்டு கட் பண்ணிருவானுங்க பொறமை பிடிச்சவனுங்க.

படம் மொக்கைலாம் இல்ல கண்டிப்பா ஒரு தடவ பார்க்கலாம் நான் மறுபடி ஒரு தடவ பார்க்கணும். சுமாரான கூட்டம் படத்திற்கு 80 ரூபாய் தான் டிக்கெட். 

நவீன சரஸ்வதி சபதம் - மொக்கை இல்லை 


Thursday 28 November 2013

பேஸ்புக் பிரபலம் ஆவது எப்படி?


1. பிரெண்ட்ஸ் லிஸ்ட்ல அதிக பேர சேர்த்துக்கனும்!
(5000 பிரென்ஸ் இருத்தா 100ல ஒருத்தர் லைக் பன்னாலும் 50 லைக் கிடைக்குமே)

2. ஸ்டேட்டஸ் சிரிக்கற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கனும்!
(தத்துவம் ஒருநாளைக்கு ஒன்றிரண்டு தடவதான் போடனும். அடிக்கடி இம்ச படுத்தபடாது)

3. பிரபலமா இருக்கனும்னா அடிக்கடி யார்கூடயாவது வம்பிழுக்கனும்! அப்பதான் பேமஸ் ஆகமுடியும்!
(பல்லு ஒடஞ்சி ரத்தம் வந்தா நிர்வாகம் பொறுப்பல்ல)

4. மத்தவங்க எவ்வளவு கலாய்சாலும் வலிக்காத மாதிரியே இருக்கனும்!
(சிலசமயம் செத்துபோன பாட்டியக் கூட கிண்டல் பண்ணுவானுங்க)

5. உங்க ஸ்டேட்ஸ்கு பொண்ணுங்க லைக்போட்டா, கைய வெச்சிகிட்டு சும்மா இருக்கனும்!
(இன்பாக்ஸ்கு போயி ஊத்த கூடாது)

6. பதிலுக்கு நீங்களும் அப்பப்ப லைக் போடனும்!
(ஏங்க.. இத எனக்காக சொல்லலங்க)

ஆனா பொண்ணுங்களா இருந்தா கஸ்டமே இல்ல..
சும்மா hi friends.. அப்டினு போட்டா போதும்.. ஈஸியா 100 லைக் 50 காமென்ட் விழும்!
(ஹீ ஹீ நானும் தான் லைக் போடுறேன்)

Friday 22 November 2013

இரண்டாம் உலகம் - ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சவால்


ஹாலிவுட்ல அவதார்ன்னு ஒரு படம் ஜேம்ஸ் கேமருன்னு ஒரு வெள்ளைக்கார இயக்குனரின் கைவண்ணத்தில் வந்து சக்கை போடு போட்டுசுல்ல. அந்த படத்த படம் மாதிரி தமிழ்ல நம்ம இயகுனர்களினால் எடுக்க முடியாதா என நாம் நினைக்கும் போது முடியும்னு நம்ம செல்வராகவன் களத்துல இறங்கி எடுத்து இருக்காரு.

இதுல சோகம் என்னன்னா அங்க உள்ள பட்ஜெட்டிற்கு டெக்னாலஜிக்கு அப்படி ஒரு படம் பண்ண ஜேம்ஸ் கேமரூன்னிற்கு சாத்தியம் ஆச்சு. ஆனா அது இங்க முடியுமா இந்த மாதிரி சொதபல்லா எடுத்ததற்கே 60 கோடி ஸ்வாக இந்த பணமே இப்போ தயாரிப்பாளருக்கு கிடைக்குமான்னு தெரியல ஐயோ பாவம்.
 
இந்த படத்தொட கதைய பத்தி எப்டி சொல்றதுன்னே எனக்கு தெரியல. படம் பார்த்த எனக்கே இந்த படத்த புரிஞ்சுகுறதுகுள்ள எ செல்வராகவன் பிலிம்ன்னு போட்டுடாங்க என்ன கொடுமை சார் இது. எனக்கு புரிஞ்ச வரைக்கும் சொல்றேன் மக்களே கேட்டுகங்க.

கதை;

ஏதோ ஒரு உலகம் அங்க தமிழ் பேசுற வெள்ளைகாரங்கள இருகாங்க. அந்த நாட்டை  ஒரு வெள்ளைகார ராஜா ஆளுகிறார். ராஜா இருந்த தளபதி இருக்கணும்ல அப்படி ஒரு தளபதி அவரு மகன் தான் நம்ம ஆர்யா. அந்த உலகத்துல ஒரு அனாதை வீரமிகு பெண்ணாக அனுஷ்காவும் இருகாங்க. இந்த உலகத்துல உள்ளவங்க யாருக்குமே காதல்ன்ன என்னானே தெரியல. ஆர்யாக்கு மட்டும் அனுஷ்கவ பார்க்கும் போது ஒரு இது இருக்கு. ஆனா ஆர்யாவ பார்க்கும் அனுஷ்காவிற்கு அது வரல.

இப்படி போற கதைல நம்ம வாழுற உலகத்தையும் காட்றாங்க. அதுல நம்ம அனுஷ்கா ஒரு டாக்டர் அங்க சேவை மனப்பான்மை உள்ள ஆர்யாவ பார்த்து காதல் வயப்பட்டு அவர்ட போயி காதல சொல்லும் போது ஆர்யா நோ சொல்லிருறாரு. அப்பறம் நிறைய யோசிச்சு கல்யாணம் பண்ணிகலான்னு அவரு போயி கேட்கும் போது அனுஷ்கா நோ சொல்றாங்க.

இப்படி இரண்டு உலகத்துலயும் நடக்குற கதைய மாத்தி மாத்தி நமக்கு காட்றாங்க.



ஒருவழியா நம்ம உலகத்துல இருக்குற ஆர்யா அனுஷ்கவா காதலிக்க வைக்கிறார். அப்போ திடிர்ன்னு ஒரு ட்விஸ்ட் கால் தடுக்கி விழும் அனுஷ்கா கல்லின் மேல விழுந்து மண்டை சிதறி மர்கயா ஆயிருரங்க. அப்பறம் என்ன வழக்கம் போல செல்வராகவன் படத்தில் வர மெண்டல் ஆகுறாரு ஆர்யா.

இப்போ இன்னொரு உலகம் இருக்குள்ள அங்க உள்ள மக்களால் கடவுளாக மதிக்கப்படும் ஒரு பெண் தனது மாந்திரிக சக்தியால் தன் உலகத்தில் உள்ள ஆர்யாவை அனுப்பி நம்ம மெண்டல் ஆர்யாவ உலகம் விட்டு உலகம் வர வைக்கிறார். நம்ம மெண்டல் இங்க வந்து காதல் என்றால் என்னவென்று தெரியாத உலகத்திற்கு காதலை புரிய வைத்து அந்த ஜோடியை சேர்த்து வைத்து பின்பு மூன்றாம் உலகத்திற்கு சென்று தனது வேலையை ஆரம்பம் செய்வதே கதை.

என்ன மக்களே தலைய சுத்துதா..

இந்த படத்தில் பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அனிருத் தாம்.

1.கனிமொழியே பாடல்
2.தனுஷ் படிய பாடல்
இவை இரண்டும் நல்லா இருக்கு.

பின்னணி இசை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல இந்த படத்துக்கு இது போதும்ன்னு நினைச்சார இல்ல தம்பிட அவ்ளோ தான் சரக்க்கான்னு தெரியல. ஆண்டிரியா வாயில் மட்டும் வாசிச்சா பத்தாது தம்பி நீங்க இன்னும் கத்துக்கணும்.



சிஜே வொர்க் அதிகம் உள்ள படம் ஆனா கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் பார்த்த மாதிரி இருக்கு. ஆர்யா சிங்கத்தை வேட்டை ஆடும் இடம் செம்ம காமெடி அத பார்க்க சிங்கம் மாதிரியே இல்ல ஏன் இந்த தேவ இல்லாத வேலை.

நம்ம செல்வராகவன் சார் நினைபெல்லாம் ஹாலிவுட் படம் மாதிரி எடுக்க ஆசைப்பட்டு இறங்கி நொந்து நுடுல்ஸ் ஆகி எப்டியாவது படத்த எடுத்தா போதும்ன்னு நினைச்சு இருப்பது பார்க்கும் போதே தெரிகிறது.

இந்த படத்திற்கு ஆயிரத்தில் ஒருவனே தேவலாம் போல. செல்வராகவன் சார் போதும் விட்ருங்க. இந்த படத்திற்கு அப்புறம் படம் இயக்க மாட்டேன்னு ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு பார்ப்போம்.

மொத்தத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் செலவில் ஜார்ஜியா நாட்டை நன்றாக சுத்தி பார்த்து விட்டு பொட்லுரிக்கு பொட்டு வைத்து விட்டார் நம்ம செல்வராகவன்.

 இரண்டாம் உலகம் - உஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆ சாமிய்ய்ய்ய்






  

Wednesday 20 November 2013

மீண்டும் சிம்பு ஜோடியானார் நயன்தாரா


உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதலர்களாகிறார்கள். இந்தமுறை திரையில் மட்டும்.

பாண்டிரா‌ஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று அவரை அணுகி கதை சொல்லியிருக்கிறார் பாண்டிரா‌ஜ். கதையை கேட்ட நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்புவைப் பொறுத்தவரை கரும்பு தின்ன கூலியா கதைதான். அவருக்கும் ஓகே.

கௌதம், சிம்பு நடிக்கும் படம் தொடங்கும் முன்பே திட்டமிட்டபடி முதல் ஷெட்யூலை பாண்டிரா‌ஜ் முடித்திருக்கிறார். சிம்பு, நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. டிசம்ப‌ரில் திட்டமிட்டிருக்கிறார்கள்.

முன்னாள் காதலர்கள் ரன்பீர் கபூரும், கத்‌ரினா கபூரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த ஹே ஜவானி ஹே திவானி சூப்பர்ஹிட்டானது. பட ‌ரிலீஸுக்குப் பிறகு இருவரும் வெளிநாடு டூர் சென்றதோடு பிரைவெட் பீச்சில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது. அதேகதைதான் இங்கேயும். சிம்பு, நயன்தாரா இணைகிறார்கள் என்பதே படம் பாதி ஹிட்டான மாதி‌ரிதான்.

மீதி பாதி... டிசம்பர் வரட்டும் பா‌ர்ப்போம். 

Thursday 14 November 2013

திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்)


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக்  கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

Wednesday 6 November 2013

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ?


ஐந்து முதலமைச்சர்களை தமிழ் சினிமா தந்த பிறகும் சினிமா என்பது வெறும் பொழுதுப்போக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. நம்முடைய பிரச்சனை அரசியல் பார்வை இல்லாதது. அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ‌ரிலையன்ஸ் போன்ற கடைகளில் காய்கறி வாங்காமல் கடைத்தெருவில் இருக்கும் கிழவியிடம் வாங்கினால் அதுவும் ஒரு அரசியல் செயல்பாடே.

தனியார் தொலைக்காட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லூ‌ரி மாணவி குறித்து மாணவிகள் பேசினர். ஒவ்வொருவ‌ரின் பேச்சிலும் ஆவேசம் பொங்கியது. எங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள், முடியாது என்றால் கேவலமாக பேசி டார்ச்சர் செய்கிறார்கள் என ஆவேசப்பட்டனர். உண்மை. அவர்களின் ஆவேசம் நியாயமானது. அப்படியே சினிமா பக்கம் வருவோம்.

இன்றைய முன்னணி நாயகர்கள் அனைவரும் நாயகியிடம் வம்பு செய்கிறவர்களாகதான் படத்தில் வருகிறார்கள். ஏண்டி நான் உன்னை லவ் பண்றேண்டி என்று வலுக்கட்டாயமாக ஹீரோயினை காதலிக்க வைப்பவர்கள்தான். ஆனால் இந்த வன்முறையை நாம் திரையில் ரசிக்கிறோம். அட, இதைத்தானே ரசிக்கிறார்கள் என்று படம் பார்க்கிற விடலைகளும், நான் உன்னை லவ் பண்றேண்டி என்று தெருவில் பார்க்கிற பெண்களையெல்லாம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகன் வேலை வெட்டி இல்லாதவன். பெண்கள் பின்னால் சுற்றுகிறவன். அதுவும் எல்லா பெண்கள் பின்னாலும். படிக்கிற மாணவியின் கையில் லவ் லட்டர் தந்து அவளின் டீச்சருக்கு தரச் சொல்கிறவன். திரையில், சும்மா பொழுதுபோக்குதானே என்று பல்லை காட்டி சி‌ரிக்கிறோம். அதுவே நிஜமாக நடந்தால்? அந்த கதாபாத்திரத்ததைதான் ஜனங்கள் திரையில் விரும்புகிறார்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவன்தான் தமிழக இளைஞர்களின் ரோல் மாடல்.

எனில் படம் பார்க்கிற பதின்ம வயசு பசங்களும் அவன் செய்த அதே செயலைத்தானே செய்வார்கள். அதுதானே நடக்கிறது. ஒருபுறம் தூண்டிவிட்டு மறுபுறம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தொலைக்காட்சியில் ஆவேசப்பட்ட பெண்களில் ஒருவராவது திரையில் நாயகியை டீஸ் செய்யும் நாயக கதாபாத்திரத்தை விமர்சித்தது உண்டா? காமெடி என்ற பெய‌ரில் திரையில் கொட்டும் குப்பைகளுக்கு பல்லை காட்டாமல் கொஞ்சம் அரசியல்பூர்வமாக நாம் சிந்திக்க பழக வேண்டும்.

ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்.

Friday 1 November 2013

தித்திக்கும் தீபாவளி


குட்டீஸ்களை பொறுத்தவரையில் தீபாவளி என்றாலே பட்டாசுதான். கலர் கலர் மத்தாப்பு, புஸ்வானம், நட்சத்திரங்களின் அழகை மிஞ்சம் பேன்ஷி
ராக்கெட்டுகள், சரவெடி, காதை பஞ்சராக்கும் அணுகுண்டு உள்ளிட்ட வெடிகளை வெடிப்பதில்தான் அலாதி ஆனந்தம்.

தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே சமயத்தில் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் அட்வைஸ் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். வெடி வெடிக்கும் போது அருகில்
ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள்.

உடையில் தீ பட்டாலோ, தீக்காயம் பட்டாலோ உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்கலாம்.

மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்த பின் அவற்றை தெருவில் வீசி எறியாமல் தண்ணீரில் அணைத்தபிறகு குப்பை தொட்டியில் போடுங்கள்’ என்கின்றனர் டாக்டர்கள்.

அதே சமயத்தில் அதிக ஒலியுடைய பட்டாசுகளை தவிர்ப்பது நல்லது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அதிக ஒலியுடைய பட்டாசுகளை இரவு 10 வரை மட்டுமே வெடிக்க வேண்டும்.

இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி ஏற்படுத்தும் சரவெடி, அணுகுண்டு, லட்சுமி, குருவி வெடி போன்ற பட்டாசுகளை வெடிப்பது சட்டப்படி தவறாகும்.

அந்த நேரத்தில் ராக்கெட், சங்குசக்கரம், புஸ்வானம், மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடிக்கலாம்.இதை மீறினால் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். ‘இரவு 10 மணிக்கு பிறகு அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பவர்கள் பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும்.

அபராதமும் விதிக்கப்படும்.

இதுவே தண்டனை’ என்கின்றனர் போலீஸ் உயர் அதிகாரிகள். எனவே, இந்தாண்டு தீபாவளியை ஹேப்பியாகவும், பாதுகாக்கவும் கொண்டாடுங்கள்.

ஹேப்பி தீபாவளி!
 (வீர சாகசம் வேணாம்)

பட்டாசு வெடிக்கிறீங்களா?

பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

* குடியிருப்புகள் அதிகம் உள்ள தெருக்களில் அதிக ஒலி உடைய பட்டாசுகளை வெடிக்க கூடாது.

*  பட்டாசுகளை சட்டை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருக்க கூடாது.

* உடைந்த பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வழக்கத்தை விட அதிக ஒலி ஏற்படும்.

* வீட்டின் பால்கனியில் நின்று பட்டாசு வெடிக்க கூடாது. அருகே உள்ள ஜன்னல், அலமாரியில் தீப்பற்ற வாய்ப்புள்ளது.


*  மது அருந்திவிட்டு பட்டாசு போடுவதை தவிர்க்க வேண்டும்.

*வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

Wednesday 30 October 2013

ஆரம்பம் - ஒரு முன்னோட்டம்


சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு. அ‌‌‌ஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பர் ட்ரெய்லர்.

பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவ‌ரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒருசோறு பதமாக வந்திருக்கிறது ஆரம்பம் படத்தின் ட்ரெய்லர்.

ட்ரெய்ல‌ரில் அ‌‌‌ஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

அ‌‌‌ஜீத்தின் பலவீனம் என்றால் அவ‌ரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். இதுவொரு கறுப்பு ச‌ரித்திரம் என்று (சிட்டிசனில்) நிறுத்தி நிதானித்து பேசுகையில், ச‌ரிதான் எப்போது பேசி முடிப்பார் என்றிருக்கும். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

முக்கியமான அம்சம் யுவனின் இசை. பில்லாவை ஞாபகப்படுத்தும் அந்த தீம் மியூஸிக் அட்டகாசம். ட்ரெய்ல‌ரிலேயே நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

நயன்தாரா, ராணா, அ‌‌‌ஜீத் என்று அனைவருமே துப்பாக்கியால் சரமா‌ரியாக சுடுகிறார்கள். ராணாவுக்கு கமாண்டோ மாதி‌ரியான பொறுப்பு போலிருக்கிறது. என்னப்பா... ஆ ஊன்னா கன்னை தூக்கிடுறீங்க என்கிற ஆர்யாவும் பெ‌ரிய சைஸ் துப்பாக்கியால் சுடுகிறார்.

ட்ரெய்ல‌ரின் இறுதியில் வரும், இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் த பிகினிங் என்ற அ‌‌‌ஜீத்தின் பன்சும், வால் கிளாக்கின் டிக் டிக் ஒலியெழுப்பியபடி அவர் நடந்து செல்வதும் கிளாஸ் என்டிங். இந்த காஸ்டிங், ஒளிப்பதிவு, இசை, ஆக்சன் இவற்றுடன் கொஞ்சமாக கதை இருந்தாலே படம் பட்டைய கிளப்பும் என்பது உறுதி.

Saturday 26 October 2013

சுட்ட கதை - திரை விமர்சனம்


ரொம்ப நாட்களாக எதிர் பார்த்த படம் காரணம் அந்த படத்தோட தலைப்பு. தலைவா படத்தின் வெளியிடு காரணமாக தள்ளி போயி பின்பு வேந்தர் மூவிஸால் கைவிடப்பட்ட படம். இந்த படத்தை வெளி கொண்டு வருவதற்குள் இந்த படத்தின் தயாரிப்பாளர் நொந்து நூலா ஆயிருப்பார்.

இது வழக்கமா வர போலீஸ் படம் இல்லை. ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் டா அப்படி பஞ்ச் வசனமெல்லாம் இல்லை. அதுக்காகவே இந்த படத்த எடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

படத்தின் கதை என்ன? கோரமலை என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமம். அங்கு இருக்கும் காவல் நிலையத்தில் புதிதாக வேலைக்கு சேரும்  இரண்டு கான்ஸ்டபில் போலீஸ் அதிகாரிகள் பாலாஜி&வெங்கி.

அந்த கிராமத்தின் மலைவாழ் மக்கள் தலைவரான m.s பாஸ்கர் சுட்டு கொல்லப்பட அவரை சுட்டது யார் என கண்டறிவதே இந்த சுட்ட கதை.

படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் உயர் அதிகாரியாக நாசர், சயின்டிஸ்டாக ஜெயபிரகாஷ், ஜமினாக லட்சுமி ராமகிருஷ்ணன், டிவி தொகுப்பாளர் பாலாஜி அறிமுக நடிகர் வெங்கி என  எல்லாம் இருந்தும் திரைக்கதை அவ்ளோ சுவாரசியமாக இல்லாததால் படம் சப் என இருக்கிறது.

படமே ஒன்னே முக்கால் மணி நேரம் தான் அதை இன்னும் சிறப்பாக சொல்லி இருக்கலாம். படத்தின் ட்ரைலர் பார்த்த போது செம்ம காமெடியா
இருக்கும்ன்னு நினைத்தேன் ஆனா அங்கங்க மட்டுமே சிரிப்பு வருகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சூப்பர் அந்த மலை பிரதேசமெல்லாம் பார்க்க அவ்ளோ அழகா இருக்கு. இசை மேட்லி ப்ருஸ் பின்னணி இசை நல்ல இருக்கு m.s விஸ்வநாதன் குரலில் ஒரு பாடல் சூப்பர்.

படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயகுனர் சுபு. எல்லாம் நல்ல இருக்கு படத்தின் திரைக்கதை இன்னும் நல்ல பண்ணி இருந்தா படம் சூப்பர் ன்னு சொல்லலாம் என்ன பன்றது. அடுத்த தடவ இன்னும் பேட்டர ட்ரை பண்ணுங்க சுபு. 

தஞ்சை ஜூபிடரில் படம் பார்த்தேன் மொத்தமே 15 பேர் தான். டிக்கெட் விலை 60 மட்டுமே. 

சுட்ட கதை - வெடிக்கவில்லை 
 

Tuesday 22 October 2013

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை 18+


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

மூலிகைகள்

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.

உணவு முறைகள்

நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.

ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.

கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.

மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றினால் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு என்ற நோய்களுக்கே இடமின்றி வாழலாம்.

டாக்டர் எம்.சபாபதி

Sunday 13 October 2013

சாப்ளின் என்ற கோமாளி


சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது மனதை உற்சாகப்படுத்தும் நிகழ்வாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அந்த நாடோடி நம்முடைய வாழ்வை காலங்கள் கடந்தும் புனரமைப்பது ஆச்சரியமான நிகழ்வு.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு வேடத்தை எப்படி கமல் திரையில் கொண்டு வந்தார் என்பதை விளக்கியிருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் - குறிப்பாக குள்ள அப்புவை பேசும் போது சார்லி சாப்ளினின் த சர்க்கஸ் திரைப்படம்தான் நினைவுக்கு வரும்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் வீடு, சொந்தபந்தம் எதுவுமில்லாத நாடோடி சாப்ளின். தெருவோர கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்iயில், பிக்பாக்கெட்காரன் தப்பிப்பதற்காக தான் அடித்த பர்ஸை சாப்ளினின் பாக்கெட்டில் வைக்க, பிரச்சனை ஆரம்பமாகும். சாப்ளினின் பாக்கெட்டில் தான் வைத்த பர்ஸை அவன் எடுக்க முனைகையில் போலீஸில் மாட்டிக் கொள்வான். பர்ஸின் திடீர் சொந்தக்காரர் ஆவார் சாப்ளின். இப்போது பர்ஸின் நிஜ சொந்தக்காரர் வர சாப்ளின் திருடனாகிவிடுவார். அதன் பிறகு போலீசுக்கும், சாப்ளினுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் சேஸிங் அவரை கொண்டு சேர்ப்பது ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு.

எதிர்பாராத நிகழ்வுகள் ஒரு கதையின் தொடக்கமாக மாறும் விசித்திரத்தை சாப்ளினின் படங்களில் காணலாம். பிக்பாக்கெட்காரன் இயல்பாக செய்யும் திருட்டுத்தனம் சாப்ளினை சர்க்கஸ் கூடாரத்துக்கு அழைத்து வந்து அவரையொரு சர்க்கஸ் கோமாளியாக மாற்றி, ஒரு பெண்ணை காதலிக்கவும் வைக்கும். சிட்டி லைட்ஸ் படத்தை எடுத்துக் கொண்டால், போலீஸுக்கு பயந்து நிற்கின்ற காரில் ஏறி காரின் அந்தப்பக்கம் உள்ள பிளாட்பாரத்தில் இறங்குவார் சாப்ளின். கார் கதவு திறக்கப்படும் சத்தத்தை வைத்து கண் தெரியாத பூ விற்கும் இளம் பெண் அவரை ஒரு பணக்காரர் என்று தவறாக புரிந்து கொள்வாள். இந்த புரிதல்தான் படத்தை முன்னகர்த்தி செல்லும். இதுபோல் பல உதாரணங்கள்.


படத்தின் ஆரம்பம் மட்டுமின்றி கதை நகரும் ஒவ்வொரு பகுதியைம் இப்படியான அசந்தர்ப்பமான சூழல்களை வைத்தே சாப்ளின் பின்னுகிறார். சாப்ளின் தப்பிக்க நுழையும் சர்க்கசானது திவாலாகும் நிலையில் உள்ளது. கோமாளிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடிவதில்லை. எதிர்பாராமல் உள்ளே நுழையும் சாப்ளின் போலீஸிடமிருந்து தப்பிக்க செய்யும் சேஷ்டைகள் அவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அந்த சர்க்கஸின் கோமாளியாக அவர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். அவரால் சர்க்கஸ் களைகட்டுகிறது.

ஆனாலும், குறைந்த சம்பளத்தில் அடிமட்ட வேலைக்காரராக அவர் நடத்தப்படுகிறார். இந்த சர்க்கஸே அவரால்தான் களைகட்டுகிறது என்று சர்க்கஸ் முதலாளியின் (வளர்ப்பு) மகள் அவருக்கு புரிய வைக்கிறாள். அவள் மீது சாப்ளினுக்கு காதல் வருகிறது. அவளுக்கு பரிசளிக்க மோதிரம் வாங்குகிறார். இந்நிலையில் சர்க்கஸுக்கு புதிதாக வரும் கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரரின் மீது சர்க்கஸ் முதலாளியின் மகளுக்கு காதல் வருகிறது. பொறாமையில் சாப்ளினும் கயிறு மேல் நடக்கும் வித்தையை முயற்சி செய்கிறார். ஒருமுறை அந்த சாகஸக்காரன் காணாமல் போகையில் கயிறு மேல் நடக்கிற வித்தையை செய்யும் சந்தர்ப்பம் சாப்ளினுக்கு கிடைக்கிறது. இந்தப் பகுதியை சாப்ளினின் அதியற்புத திறமையின் உதாரணமாகச் சொல்லலாம்.

கயிறு வித்தையின் தொடர்ச்சி சர்க்கஸ் முதலாளியுடனான கைகலப்பில் முடிய, சர்க்கஸிலிருந்து சாப்ளின் வெளியேற்றப்படுகிறார்.


தனது வளர்ப்பு தந்தையின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் சாப்ளினின் ஒருதலை காதலியும் உடன் வருகிறாள். இறுதியில் அவளுக்கும், அவள் காதலித்த அந்த சாகஸக்காரனுக்கும் சாப்ளின் திருமணம் செய்து வைக்கிறார். புது ஜோடியுடன் சர்க்கஸ் வேறு இடத்துக்கு கிளம்புகிறது. சாப்ளின் முதல் காட்சியில் தோன்றிய அதே நாடோடியாக சர்க்கஸ் செல்லும் திசைக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

அபூர்வ சகோதரர்களுக்கு முன்பே கமல்ஹாசன் த சர்க்கஸை பார்த்திருப்பார். என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒரே படம் சாப்ளினுடையது என்று அவர் முன்பு சொன்னதாக ஞாபகம். சாப்ளினால் இன்ஸ்பயர் ஆகாமலிருந்தால்தான் ஆச்சரியம். சாப்ளினேகூட த சர்க்கஸ் திரைப்படத்தை அவரின் விருப்பத்துக்குரிய பிரெஞ்ச் நகைச்சவை நடிகர் மேக்ஸ் லிண்டரின் த கிங் ஆஃப் த சர்க்கஸ் திரைப்படத்தின் பாதிப்பில் எடுத்ததாக கூறுகிறார்கள்.

த சர்க்கஸில் மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் சாப்ளினின் டைமிங். அவர் மட்டுமில்லை, படத்தில் வரும் சிங்கம், குரங்குகள், குதிரை என்று விலங்குகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. போலீஸுக்குப் பயந்து தெருவோர கலைநிகழ்ச்சிக்குள் சாப்ளின் காட்டும் வித்தைகள் சிரிப்பை வரவழைப்பவை. முக்கியமாக கண்ணாடிகளால் சூழ்ந்த அரங்கத்துக்குள் எப்படி கேமரா தெரியாமல் படமாக்கினார்கள்? த சர்க்கஸ் வெளியானது 1928 ல் என்பதை இங்கு நினைவுகூர்வது சாலப்பொருத்தம்.

சிங்கத்தின் கூண்டுக்குள் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் போது நடக்கும் சம்பவங்களை இன்றைய தொழில்நுட்ப யுகத்தில்கூட எடுக்க முடியுமா? கயிறு மேல் சாப்ளின் நடக்கையில் குரங்குகள் அவர் உடையை அவிழ்த்து, மூக்கை கடித்து, வாயில் வாலைவிட்டு... அத்தனை குரங்கு குறும்புக்கு நடுவிலும் சாப்ளின் கயிற்றில் தள்ளாடிக் கொண்டே பேலன்ஸ் செய்வது... சாப்ளினால் மட்டுமே ஆகக்கூடிய சாகஸங்கள்.


படங்கள் பேச ஆரம்பித்த பிறகும் சாப்ளின் மௌனப் படங்கள் எடுப்பதையே விரும்பினார். வசனம் படத்தின் கற்பனையை, பன்முகத்தன்மையை அழித்து ஒருபடித்தானதாக்கிவிடும் என்று அவர் நம்பினார். அவரின் படங்களில் எழுத்துக்களில் விளக்கம் முக்கியமான தருணங்களில் மட்டுமே வரும். பெரும்பாலும் தத்துவ தெறிப்பாக அல்லது சூழலை விளக்கும்விதமாக அவை இருக்கும். சர்க்கஸ் முதலாளி, சாப்ளினால்தான் சர்க்கஸ் களைகட்டுகிறது என்ற விவரம் சாப்ளினுக்கு தெரிய கூடாது என்பதில் குறியாக இருப்பார். அது தெரியாத அளவுக்கு அவரிடம் அதிகமாக வேலை வாங்கு என்று தனது ஆளிடமும் அறிவுறுத்துவார். பண்ணையார் யுகத்திலிருந்து ஐடி யுகம்வரை இதுதான் நடக்கிறது. தனக்கு கீழ் உள்ளவர்களை அடக்கி ஆள மேலிருப்பவர்கள் செய்யும் தந்திரம் இது. அவர்களால் எதுவுமே நடக்கவில்லை, முதலாளிகள்தான் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு வேலை தருகிறார்கள் என்ற தோற்றம் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரத்துக்கும் தேவைப்படுகிறது.

கலை என்பது ஆற்றொழுக்காக மேலெழுவது. அசந்தர்ப்பங்களால் கட்டமைக்கப்பட்டது. திட்டமிட்ட வழியில் அதனை சாத்தியமாக்குவது இயலாத காரியம். தொழில்முறை சர்க்கஸ் கோமாளிகளின் திட்டமிட்ட வித்தைகளை சாப்ளினால் கற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருமுறையும் தவறிவிடுகிறார். ஆனால் அந்த சட்டகத்தை தாண்டி அவர் செய்யும் கோமாளித்தனங்கள்தான் பார்வையாளர்களை கவர்கிறது. அவர்களை தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது. கலை குறித்த இந்த நுண்ணுணர்வு படத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.

படத்தின் கதையை எழுதி சாப்ளினே இயக்கி, இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு எப்படி இசையமைப்பது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம். சாப்ளின் தனது படங்களில் நகைச்சுவையின் நடுவே வாழ்வின் சாராம்சத்தை, அதன் வலியை, மகத்துவத்தை, கொண்டாட்டத்தை பொதிந்து தருகிறார். நாம் அந்த சாராம்சத்தை விடுத்து கோமாளித்தனத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். சாப்ளினை இன்றும் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பெரும்பாலானவர்களின் மனதில் தங்கிப் போனது காலக்கொடுமை.

சாப்ளின் கோமாளிதான், சாகஸக்காரர்தான். அதேநேரம் அந்த கோமாளி தோற்றத்தில் அவர் சுட்டிக் காட்டுவது - த சர்க்கஸ் படத்தின் இறுதிக் காட்சியைப் போல் - எப்போதும் கோமாளித்தனத்துக்கு எதிர்திசையைதான். அதனை புரிந்து கொள்ளாமல் சாப்ளினின் படத்தைப் பார்ப்பது, குருடன் யானையை தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது.

Wednesday 9 October 2013

எறும்பின் தன்னம்பிக்கை

                                   

தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர்கள். இது உங்களுக்கானது முழுவதையும் படியுங்கள்.

இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.

கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.



பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.

இது ஒரு மீள் பதிவு..

Sunday 6 October 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்! 18+


டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.