Thursday 30 October 2014

கத்தி - என்னையா பண்ணுனான் என் கட்சிக்காரன் ?


வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பதிவு எழுதி பத்து மாதங்களுக்கு மேல  ஆகிறது. முன்னலாம்  படம் ரிலிஸ் ஆன உடனே படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனாதான் தூக்கமே வரும் ஆனா இந்த ஆன்ராயிட் மொபைல் வந்ததும் சிஸ்டத்தில் உட்காருவதே இல்லை பிற பதிவர்கள் தளத்தில் பதிவுகள் படிப்பதோடு  சரி. இப்போ கத்தி படத்தை பத்தி எல்லோரும் பதிவு எழுதிட்டாங்க சரி நாமலும் நம்ம பங்குக்கு எழுதுவோம்ன்னு உக்காந்தாச்சு. சரி கத்தி படம் எப்படி?

இந்த படத்தோட கதை எல்லாமே ஆல்ரெடி படிச்சு முடிச்சு இருப்பிங்க. பாதி பேரு படத்தையே பார்த்து முடிச்சு இருபிங்க அதனால கதை எல்லாம் வேணாம். அப்பறம் என்னத்துக்கு இந்த பதிவு எனக்கு ஒன்னு மட்டும் தாங்க புரியவே மாட்டேங்குது. அது என்ன நம்ம விஜய் எது பண்ணுனாலும் ஒரு கூட்டம் மட்டும் அவர குறை சொல்லியே காலத்த ஓட்றாங்க.
.
நம்ம தல அஜித் நடிப்பில் ஆரம்பம் ன்னு ஒரு படம் வந்துச்சு அந்த படத்துல புல்லட் ஜாக்கெட் வாங்குனதுல ஊழல் அதை வெளிக்கொணரும் நாயகன் அதான் படத்தோட கதை. இதையே விஷ்ணுவர்த்தன் ஜவ்வு மாதிரி படத்த போட்டு இழு இழுன்னு  இழுத்து இருப்பாரு. க்ளைமேக்ஸ்ல மட்டும் ஊழல பத்தி தல பேசி இருப்பாரு. அந்த படத்த எல்லாம் ஆகா ஒக்கோன்னு புகழ்ந்தாங்க. இதை சொன்னா நீ விஜய் ரசிகன் அப்படின்னு சொல்ல்வாங்க நான் விஜய் ரசிகன் தான் சுறா படம் பார்க்கும் வரை.இப்போ ஒரு சினிமா விரும்பி மட்டுமே.

ஆரம்பம் படத்தை விட வீரம் படம் எனக்கு பிடித்து இருந்தது. வீரம் படம் பிடித்த அளவு ஜில்லா எனக்கு பிடிக்கவில்லை.

படம் முதல் ஐம்பது நிமிடம் போர்...?
ஆரம்பம் படம் முழுசாவே போர் அதை பார்த்த நாம இதை பார்க்க மாட்டோமா?

 பாட்டு நல்லாவே இல்ல,..?
ஒரு பாட்ட தவிர மற்ற அணைத்து பாட்டும் நல்லாத்தான்  இருக்கு.

சவுண்ட் காத கிழிக்குது, 
அனிருத் பண்ணுன படத்திலேயே இந்த படத்தில் தன ரீ ரெக்கார்டிங் சூப்பர்.

விஜய் முகத்துல ரியாக்சனே இல்ல,..
இந்த படத்தில விவசயிகள கொன்னு அவங்க கை ரேகைய பார்த்துட்டு அழுவாரு பாருங்க பக்கத்துல ஒரு அம்மா அழுதுட்டாங்க.

சமந்தா பெரிய ஸ்கோப் இல்ல,..
நீ அஞ்சான் படம் நினப்புலயே போயி படத்த பார்த்தா எப்புடி? 166 நிமிடத்துல அவ்ளோன்  முடியும் ராசா..

திருட்டு கதை,..
தமிழ் சினிமாவே இப்போ அப்படி தான்  இருக்கு.

கார் பெரெட் கம்பெனிட காச வாங்கிட்டு அவங்களையே குறை சொல்றாங்க,
சொல்லிட்டு போறான் அவனே கவலை படல உனக்கு ஏன்?

விளம்பரத்துல நடிச்சுட்டு இவரு அதை சொல்லலாமா,.
ஆமா அவரு சொல்லறத எல்லாம் நீ கேக்குற மாதிரி பெத்தவங்க சொன்னாலே கேக்க மாட்டோம்..

இன்னும் குறைய அள்ளி தெளிக்குறாங்க.

இந்த படத்த பார்த்துட்டு இண்டர்வெல்ல போயி கோக் வாங்கி குடிச்சுகிட்டு படம் சூப்பர்ல அப்படின்னு சொல்லும் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தை பார்த்துட்டு கோக் குடிக்காம போகும் ரசிகர்கள் இருந்தாங்க  பாருங்க அதுல தான் முருகதாஸ் ஜெயித்துவிட்டார்.

கத்தி-தெறி தெறி தெறி