Tuesday 30 July 2013

சயின்ஸ் கபாலி இன்னா சொல்லுறாருன்னா 30/07/13


இதை படிச்சா வியந்து தான் போவீர்கள்! ! ! !

•வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது.

• குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.

• புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாகஉள்ளது என அர்த்தம்.

• கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

• சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

• இயர் (ear) போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்தினால், வெடிக்கும்.

• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறுவிதமாக இருக்கும்.

• 40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

• சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.ஒவ்வொரு வருடமும் மீண்டும் கட்டப்படும்.

• பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம்வலது, இடது என நடக்கும்.

• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

• பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.

• லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.

• 15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

• குழந்தைகள் பிறக்கும் போதுமூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

• வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

• சூயிங்கத்தை முழுங்கினால்,வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

• கண்களை கசக்கும் போது தோன்றும்நட்சத்திரம் மற்றும் கலர்கள்,"பாஸ்பீன்ஸ்" எனப்படும்..


கொய்யா - அடங்கொய்யா;

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை பார்க்க தேவையில்லை என்று கூறுவார்கள். ஆனால் ஆப்பிளை விட கொய்யாவில் அதிக சத்துகள் இருப்பதாக தெரிவிக்கபடுகிறது.

நன்றாக பழுத்த கொய்யாவுடன், மிளகு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் நீங்கி சோர்வு இருந்த இடம் தெரியாமல் போய் விடுமாம்.

கொய்யா பழத்துடன் சப்போட்டா பழம் தேன் கலந்து சாப்பிட்டால் நன்றாக செரிமானம் ஆவதுடன் மலசிக்கல் தீரும் வயிற்று புண்ணும் குணமாகும்.

அதோடு வயிற்றுபோக்கு, மூட்டுவலி,அரிப்பு,மூல நோய், தொண்டை புண் போன்ற பாதிப்புகளும் அகலும் என்று கூறுகிறார்கள்.

கொய்யா பழத்திலும் அதன் கொட்டைகளிலும் புரதம்,கொழுப்பு சத்து, மாவு சத்துகள் சிறிதளவே இருக்கும் வேளையில் நார்ச்த்து, கால்சியம் ,இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

பழுக்காத கொய்யா காய் வயிற்று கடுப்பையும் வயிற்றோடத்தையும் தடுக்கும்.

கொய்யா மரத்தில் பட்டையும் வேர் ஆகியவற்றை கொண்டு தயாரித்த கசாயம் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வாயிற்று போக்கை தடுக்கும்.

படித்தீர்களா கொய்யாவின் மகத்துவத்தை.

Sunday 28 July 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - அடக்கி வாசிக்கும் ஷாருக்


தமிழில் ர‌ஜினி, அ‌ஜித் இருவரும் தங்கள் படங்களின் ப்ரமோஷனில் கலந்து கொள்வதில்லை. விஜய், படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வார், நான்கைந்து பேட்டிகள் தருவார். மற்ற நடிகர்களும் அப்படியே.

ஆனால் இந்தியில் படத்துக்கு உழைத்த அளவுக்கு ப்ரமோஷனுக்கு மெனக்கெட வேண்டும். ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சி நடத்துவார்கள், பேட்டி தருவார்கள், நடனம் ஆடுவார்கள். தேவைப்பட்டால் குட்டிக்கரணம்கூட அடிப்பார்கள். அவ்வளவும் செய்தால்தான் நூறு இருநூறு கோடிகள் கிடைக்கும்.

ரா.ஒன் படத்தின் ப்ரமோஷனுக்காக பத்து கோடிகள் செலவளித்தார் ஷாருக். ப்ரமோஷன் ஓவர் டோஸாகி, பில்டப்புக்கு ஏற்ற சரக்கு இல்லையே என ப்ரமோஷன் பேக் ஃபயரானது. அந்த தவறை சென்னை எக்ஸ்பிரஸில் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஷாருக்.

சென்னை எக்ஸ்பிரஸின் ப்ரமோஷன் இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லையே என்ற கேள்விக்கு ஷாருக் தரப்பில் தரப்பட்டிருக்கும் விளக்கம்தான் இது. மேலும், ரா.ஒன் சயின்ஸ் பிக்சன். ரசிகர்கள் படம் பார்க்கும் முன் நிறைய சொல்லவும், விளக்கவும் வேண்டியிருந்தது.


சென்னை எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை ரோஹித் ஷெட்டி இயக்கம் என்றாலே படம் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெ‌ரிந்துவிடும், ப்ரமோஷனே தேவையில்லை என்கிறார்கள்.

இவ்வளவு சொன்னாலும் சில பிரமாண்ட அறிமுக நிகழ்ச்சிகள், பேட்டிகள் படத்தின் ‌ரிலீஸையொட்டி நடக்கயிருக்கிறது.


படத்தில் தீபிகா படுகோனுடன், மனோரமா உள்ளிட்ட பல தென்னிந்திய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 9 படம் திரைக்கு வருகிறது.

Saturday 27 July 2013

பட்டத்துயானை - மலைகோட்டை பார்ட் 2




ரொம்ப நாள் ஆச்சு படம் வெளி ஆகும் அன்னைக்கே அந்த படத்த பார்த்து விமர்சனம் எழுதி அதனால இந்த படத்துக்கு முதல் நாளே கிளம்பிட்டேன்.

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் விஷாலை கட்டி அனைத்து பூபதி பாண்டியன் அழுதார் என செய்திகள் வந்தது அது ஏன் என்று இப்போது தான் புரிகிறது. இப்படி பட்ட மொக்கை படத்துல்ல நீங்க நடிக்கிரின்களே உங்க மனசு யாருக்கு வரும் தம்பின்னு நினச்சு அழுதுஇருப்பாரோ? சரி இனி இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அழுவாரு. {கருப்பு எம்.ஜி.ஆர் சந்தோசமா இருப்பாரு}



கதை;

வழக்கமான விஷால் படம் தான். சண்டகோழி படத்தில் இருந்தே விஷாலின் எல்லா படங்களிலும் விஷால்  இருக்குற ஊருக்கு வில்லன்கள் அவரை தேடி வந்து அடி வாங்கி செல்வதே வாடிக்கை. அதே கதை தான் இங்கயும் மலைகோட்டை படத்துல்ல மிச்சம் மீதி வைத்த வில்லன்களை எல்லாம் மீண்டும் திருச்சிக்கு சென்று மிதி மிதி என மிதித்து, புரட்டி புரட்டி அடித்து, நம் உயிரையும், பாக்கெட்டில் இருந்து பணத்தையும் எடுப்பதே இந்த படம்.

நீங்க மலைகோட்டை படம் பார்த்திங்களாஅதே கதை தான் பெருசா மாற்றம் ஒன்னும் இல்லை.

1. அந்த படத்தில் ப்ரியாமணியை கல்லூரிக்கு பாதுகாப்பாக தேர்வு எழுத அழைத்து செல்வார் அதே போல இங்கு ஐஸ்வர்யாவை ஸ்கூல் தேர்விற்கு அழைத்து செல்கிறார்.

2. அந்த படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் பட்டுகோட்டையில்இருந்து திருச்சி வருவாரு. இந்த படத்துல்லசரவணன் என பெயர் மாற்றி மதுரையில் இருந்து வருகிறார்.

3. அந்த படத்தில் ரௌடி அண்ணன் தம்பியை கொல்லுவார். இந்த படத்தில் மாமா,மைத்துனர்.

4. அந்த படத்தில் ஒத்தை ஆளாக வருவார். இந்த படத்தில் 5 அல்லகைகள் பத்தாததுக்கு கையில் சானக்கரண்டி உடன் திருச்சியில் அலைகிறார். கேட்டால் சமையல் செய்பவராம் சமைக்கிரத தவிர மத்த எல்லாம் பன்றானுங்க.

5. அந்த படத்தின் பாடலாவது தேவலாம் இங்கே அதும் சுத்த வேஸ்ட்.
   

விஷால் நீங்க நடிச்ச சண்டகோழி படம் மட்டுமே எங்களுக்கு போதும் அதையே நாங்க திரும்ப திரும்ப பார்த்துக்குறோம். நீங்க மேற்கொண்டு நடிச்சு எங்கள சாவ அடிக்காதிங்க. நீங்களும் உங்க அண்ணனை போல கல்யாணம் செய்து கொண்டு வேற எதாவது பொலப்ப பார்கலாம்.



ஐஸ்வர்யா அர்ஜுன் இந்த பாப்பலாம் நடிக்க வரலைன்னு யாரு அழுத? அதான் ஆக்சன் கிங் நிறைய சம்பாதிச்சு துட்டு சேர்த்து வச்சு இருக்காருல்ல பேசாம கல்யாணத்த பண்ணிட்டு போங்க. தமிழ் சினிமால தான் இந்த மாதிரி கூத்துலாம் நடக்கும் சிங்கம 2 ல ஹன்சிகா பள்ளி கூடம் போவாங்களாம், இந்த படத்துல்ல இந்த பாப்பா பள்ளிக்கு போகுது விட்டா இவனுங்க பரவை முனியம்மாவயே ஸ்கூல்லிற்கு அனுப்புவாங்க. அதையும் நாம பார்த்து தொலையனும் என்ன கருமம்டா.



இந்த படத்துல வர ஒரே ஆறுதல் நம்ம சந்தானம் தான். கௌரவம் என்ற கதாபத்திரத்தில் நம்ம சிரிக்க வைக்கிறாரு. அவரும் இல்லேன்னா நான் பாதி படத்தில் இருந்தே ஓடி வந்து இருப்பேன். அவரோட காமெடியும் ரொம்ப சூப்பராலாம் இல்ல ஏதோ இந்த மொக்கை படத்த பார்க்குறதுக்கு அது தேவலைன்னு தோணுது.

இசை தமன் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரிலாம் இல்ல.



இயக்குனர் பூபதி பாண்டியன் இவரது திருவிளையாடல் ஆரம்பம், காதல் சொல்ல வந்தேன் என்னை ரொம்ப கவர்ந்த படங்கள் இவரு அதே போல மென்மையான நகைச்சுவை கலந்த காதல் படங்கள் எடுப்பதோட நிறுத்திக்கலாம். வராதத எதுக்கு போயி எடுத்து அசிங்க படனும் இந்த மாதிரி மசலா படமெல்லாம் நம்ம ஹரி பார்த்துகுவாறு.

தஞ்சை விஜயாவில் படம் பார்த்தேன் 100 ரூபாய் கட்டணம் இந்த படம் பார்க்குறதுக்கு பார்காமலே இருந்துறலாம் காசாவது மிச்சம்.

மொத்தத்தில் பட்டதுயானை நம்மல துரத்தி மிதிக்க வருது எல்லாம் தப்பிச்சு ஓடிருங்க.  


Thursday 25 July 2013

கோச்சடையான் கதை முழு விவரம்


ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் இந்த வருடம் இறுதியில் ரிலீசாகிறது. பின்னணி இசை சேர்ப்பு, எடிட்டிங், மிக்சிங் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கிராபிக்ஸ் போன்ற பணிகள் சென்னை, மும்பை ஸ்டூடியோக்களில் முழுவீச்சில் நடக்கிறது.

‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் அனிமேஷன் படங்கள் போன்று முதல் இந்திய அனிமேஷன் படமாக ‘கோச்சடையான்’ வருகிறது. ரூ.120 கோடி செலவில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி தந்தை மகன் என இரு வேடங்களில் வருகிறார். தந்தை ஜோடியாக ஷோபனாவும், மகன் ஜோடியாக தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ருக்மணி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோரும் உள்ளனர்.

இந்த படத்துக்கான கதையை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ராஜீவ்மேனன் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவும் செய்துள்ளனர்.


சரித்திரகால பாணியில் தயாராகியுள்ளதாக கதை பற்றிய விவரம் கசிந்துள்ளது. தந்தை ரஜினி ஒரு நாட்டை ஆட்சி செய்கிறார். மக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பதே அவர் குறிக்கோள். இதற்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றுகிறார். செல்வத்தை மக்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார். பொற்கால ஆட்சி நடத்துவதாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

அப்போது மண்ணன் ரஜினிக்கு எதிராக சதித் திட்டங்கள் அரங்கேறுகின்றன. நெருக்கமான நண்பனாக இருக்கும் ஒருவன் தளபதிகளை கையில் போட்டுக் கொண்டு நாட்டை அபகரிக்கிறான். ரஜினியை நாட்டை விட்டே துரத்துகிறான். அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைதான் இன்னொரு ரஜினி.

வீர தீர சாகச சண்டைகளில் மகன் ரஜினி தந்தையை மிஞ்சுகிறார். காட்டுக்குள் சிறு படையை உருவாக்குகிறார். அங்கிருந்து நாட்டுக்குள் ஊடுருவி சண்டையிடுவதும் நாட்டை மீட்பதுமே கதை. சுறா மீனுடன் ரஜினி மோதும் காட்சி ஹாலிவுட்டுக்கு இணையாக எடுக்கப்பட்டு உள்ளதாம்.


இப்படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்து பாராட்டியதாக டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

கோச்சடையான் படம் பிரமாதமாக வந்துள்ளது. சர்வதேச தரத்தில் இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. ரஜினியும் நானும் படத்தை பார்த்தோம். படம் முடிந்ததும் சிறப்பாக இருப்பதாக ரஜினி பாராட்டினார். சவுந்தர்யா அனிமேஷன் படிப்பு படித்துள்ளார். கிராபிக்ஸ் வேலைகளும் தெரியும் எனவேதான் இவரிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. திறமையாக படத்தை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்தின் 53வது படத்தின் பெயர் வெளியானது



கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த படத்துக்கு 'ஆரம்பம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் சுய விளம்பரம் செய்யும் வகையில் வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்ககூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குனரிடமும் கோரிக்கை வைக்க கதையின் கருவுக்கு ஏற்றவாறு தற்போது 'ஆரம்பம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


படம் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு அனுப்பும் நிலையில் உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே விஷ்ணுவர்தன்-அஜீத் கூட்டணியில் வெளிவந்த ‘பில்லா’ பெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நன்றி ; சினிமா செய்திகள் 

Wednesday 24 July 2013

என்ன வாழ்க்கைடா இது ?


திருமணம் ஆன உடன்
===================

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.


சிறிது ஆண்டுகள் கழித்து
===================

1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.


பல ஆண்டுகள் கழித்து
=================

1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

ஹா ஹா என்ன வாழ்க்கைடா இது.

நன்றி!

Saturday 20 July 2013

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!


“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.

சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.

ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.

ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.

போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.

அவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.

இந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.

இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

பின் குறிப்பு: 

காலத்தால் அழியாத அந்த கலைஞன் மரணமடைந்த 40வது நினைவு நாள் இன்று. தனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.

குங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற தற்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.

எண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி-வெப் துனியா

Thursday 18 July 2013

ம‌ரியானை பார்க்க போகும் முன் இதை தெ‌ரிஞ்சுக்கோங்க?


பரத்பாலா இயக்கியிருக்கும் ம‌ரியான் வரும் வெள்ளிக்கிழமை - ஜூலை 19 - திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தமிழில் சர்வதேச பிரச்சனைகளின் பின்னணியில் படங்கள் வருவதில்லை. விஸ்வரூபம் விதிவிலக்கு. ம‌ரியானில் சூடானில் உள்ள எண்ணைய் எடுக்கும் தொழிற்சாலையில் பணிபு‌ரிகிறவராக தனுஷ் நடித்திருக்கிறார். அவரையும் உடன் பணிபு‌ரிகிற சிலரையும் தீவிரவாதிகள் (கொள்ளைக்காரர்கள்?) கடத்துகிறார்கள். அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். நமிபியா போன்ற ஆப்பி‌ரிக்க நாடுகளில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


சோமாலியா கடற்கொள்ளைக்காரர்களைப் பற்றி செய்திகளில் படித்திருப்போம். அவர்களைப் போன்றவர்கள் எப்படி இருப்பார்கள், எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பதை ம‌ரியானை பார்த்து தெ‌ரிந்து கொள்ளலாம். படத்தில் அண்டர் வாட்டர் காட்சிகள் வருகின்றன. அதனை அந்தமானில் படமாக்கியிருக்கின்றனர். தனுஷ் தண்ணீருக்கு அடியில் நடித்திருக்கிறார்.


தனுஷுக்கு நீச்சல் தெ‌ரியாது. தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடைத்தபடி நீந்துவதில் சுத்தமாக அனுபவமில்லை. அதனால் பயிற்சியாளர் ஒருவரை வைத்து நீச்சல் கற்று, குறிப்பிட்ட காட்சியில் நடித்தார். பார்க்க அற்புதமாக இருக்கும். படத்தில் இதேபோல் வரும் நல்ல காட்சிகளில் எல்லாம் மிகுந்த சிரமத்துக்குள்ளானார் தனுஷ் என்று பரத்பாலா குறிப்பிடுகிறார்.


ஹீரோயின் பார்வதி. ரொமான்டிக் காட்சிகளில் பூ பார்வதியா என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார். ஆம்பளத்தனமான காதல். ஆதாமின்ட மகன் அபு படத்துக்காக தனுஷுடன் தேசிய விருதை பகிர்ந்து கொண்ட மலையாள நடிகர் சலீம் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற அப்புக்குட்டியும் உண்டு.


இன்னொருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தனது வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர் என்பதால் கதைகூட கேட்காமல் பரத்பாலாவின் படத்துக்கு இசையமைக்க சம்மதித்தார் ரஹ்மான். ஏழு பாடல்கள். ஏழுவிதமான உணர்வுகளை தரக்கூடியது. முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா ரஹ்மானின் இசையில் பாடியிருக்கிறார். தனுஷ் பாடல் எழுதியிருக்கிறார்.

சிறுபத்தி‌ரிகை, குறும் படங்கள், ஆவணப்படங்கள் என இயங்கி வரும், முலைகள், பூனையைப் போல அலையும் வெளிச்சம் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்ட குட்டி ரேவதி முதல்முறையாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் (கடைசியாகவும் இருக்கக்கடவது). வாலி, கபிலன் ஆகியோரும் பாடல் புனைந்துள்ளனர்.

Mark Koninckx என்ற பிரெஞ்ச் கேமராமேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தயா‌ரிப்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

ஒருமுறை பார்க்கத் தகுந்த கச்சாப் பொருட்களுடன் வெளியாகிறது ம‌ரியான். பலமுறை பார்க்கிற மாதி‌ரி பரத்பாலா எடுத்திருக்கிறாரா என்பது  இன்றைக்கு தெ‌ரிந்துவிடும் மக்களே.

அப்புறம் என்ன வாங்க போகலாம் மரியானுக்கு.

அடுத்த பதிவு- கோ 

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!

Wednesday 17 July 2013

கோச்சடையான் ட்ராப் - படம் வெளிவரப்போவதில்லை?


ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் ட்ராப் என்றால் எப்படி இருக்கும்?

பணம் போட்ட தயாhpப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள்... எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.

ஆனால்,

படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோச்சடையான் பிரமாண்டமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.


சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். படத்தின் ஆரம்ப விறுவிறுப்பை பார்த்த ரஜினி, தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகும் என்றார் ஆனால் எதுவும் நடக்கவில்லை. அடுத்த தீபாவளியும் வரப்போகிறது. ரஜினி டப்பிங் பேசினார், கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.

இந்த வருட தொடக்கத்தில்...

கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட். அவர் எதிர்பார்த்த குவாலிட்டியுடன் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.

இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் ட்ராப் செய்யப்பட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.

கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம். கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் நாம் உள்ளிட்ட அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
                                                                                                                                                       

சென்னையில் செப்டம்பர் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு திருவிழா நடைபெறுகிறது. அதில் அனைத்து பதிவர்களும் முடிந்தவரை கலந்து கொண்டு மாநாடு சிறப்பாக நடைபெற உதவுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
மதுமதி – kavimadhumathi@gmail.com
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
சிவக்குமார் – madrasminnal@gmail.com
ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.

சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.

மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.

நன்றி

அடுத்த பதிவு;

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!


Sunday 14 July 2013

'சிங்கம் 2' மூன்று நாளில் 50 கோடி வசூல் சாத்தியமா?


சிங்கம் 2 சக்சஸ் மீட்டிங்கில் பேசிய தயாரிப்பாளர் மூன்று தினங்களில் 50 கோடியை படம் வசூலித்ததாக தெரிவித்தார். தமிழ் சினிமாவுக்கு இதுவொரு நற்செய்தி. அதிரடியாக வசூல் செய்யும் படங்களால்தான் சினிமாதுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்தவொரு படமாக இருந்தாலும் அது வெளியானவுடன் நேர்மறையாகவே அப்படம் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சு இருக்கும். தோல்விப் படமான கந்தசாமி ஒரு வாரத்தில் 45 கோடிகள் வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை இந்த நேரத்தில் நினைவு கொள்வது பொருத்தமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான எந்த உள்கட்டமைப்பும் இங்கு இல்லை.

எண்பதுகளில் ஒரு படம் ஆரம்பிக்கும் போதே விநியோகஸ்தர்கள் அப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் தருவதுண்டு. ஒவ்வொரு ஷெட்யூல்ட் முடியும் போதும் பணம் வந்து கொண்டிருக்கும். ஒரு படத்தின் மொத்த சுமையும் தயாரிப்பாளரை அழுத்தாமல் அது காத்தது. உற்பத்தியில் பங்கு கொண்டவர் என்ற வகையில் விநியோகஸ்தர்களுக்கு அந்தப் படம் தரப்படும். லாப, நஷ்டத்தை பகிர்ந்து கொள்வது எளிதாக இருந்தது.

இன்று விநியோகஸ்தர்கள் படம் தயாரிப்பில் இருக்கும் போது பணம் தருவதில்லை. படம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்து ஒரு தொகையை நிர்ணயிக்கிறார்கள். அது பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ரஜினி, விஜய் போன்ற சில நடிகர்களின் படங்கள் மட்டுமே மினிமம் கியாரண்டி என்ற முறையில் வாங்கப்படுகின்றன. மற்ற படங்களின் கதி இன்றளவும் சொல்லும்படி இல்லை. நேரடியாக படத்தை திரையரங்குகளுக்கு கொடுப்பதும் சிக்கலானது. அரங்கு நிறைந்தாலும் கூட்டம் வரவில்லை என தயாரிப்பாளர் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு. விநியோகஸ்தர்களில் பலரும் இதேபோன்றே நடந்து கொள்கின்றனர். உற்பத்தியில் பங்கு பெறாத ஒருசாரர் உற்பத்தி பொருள் மீது ஆதிக்கம் செலுத்துவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். இந்த சீரழிவு காரணமாக ஏவிஎம் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டன.

ஒரு படத்தின் உண்மையான வசூலை தெரிந்து கொள்ள முடியாமலிருப்பதற்கு இதுபோன்று பல காரணங்கள் உள்ளன. இப்படியொரு சூழலில் தயாரிப்பாளர் சொல்லும் நம்பர்களை நாம் நம்ப வேண்டியதை தவிர வேறு வழியில்லை. துரதிர்ஷ்டவசமாக அவை பல நேரங்களில் உண்மையாக இருப்பதில்லை.

சிங்கம் 2 மூன்று நாளில் 50 கோடியை வசூலித்திருக்குமா என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் சேர்த்து 8.15 கோடிகள் என செய்தி வெளியானது. சனி, ஞாயிறுகளில் கணிசமான அளவு வசூல் அதிகரித்தாலும் முப்பது கோடிகளை தாண்ட வழியில்லை. படத்தின் வெளிநாட்டு வசூலை சேர்த்தாலும் ஐம்பது கோடி என்பது எட்ட முடியாத வசூல். யுஎஸ், யுகே இரண்டும் சேர்த்து 2.1 கோடி மட்டுமே 3 நாட்களில் படம் வசூலித்திருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை வைத்து 3 நாளில் 50 கோடி என்பது கற்பனையான பேச்சு என்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஹே ஜவானி ஹைய் திவானி; மூவாயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. இந்தியாவில் சிங்கம் 2வை விட இரண்டு மடங்கு அதிக திரையரங்குகள். முதல் மூன்று தினங்களில் 95 முதல் 100 சதவீத கலெக்ஷன். அப்படத்தின் முதல்நாள் வசூல் 19.45 கோடிகள். மூன்று தினங்களில் 62.11 கோடிகள். சிங்கத்தின் முதல் நாள் வசூல் 8.15 கோடிகள். மூன்று தினங்களில் 50 கோடிகள். சந்தேகம் கிளம்ப இந்த ஒப்பீடும் ஒரு காரணம்.

சிங்கம் 2வைப் போன்ற ஒரு வெற்றிப் படம் ஓபனிங் மூன்று தினங்களில் செய்யும் வசூலைப் போல் மூன்று மடங்கு வசூலை பெறும் என்பது நிபுணர்களின் கருத்து. அதாவது மூன்று தினங்களில் பத்து கோடியை வசூலித்தால் அப்படம் மொத்தமாக முப்பது கோடி அளவுக்கு வசூல் செய்யும். இது மக்களின் பேராதரவை பெற்ற படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹே ஜவானி ஹைய் திவானி இதுவரை 190 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. அதாவது ஒபனிங்கைப் போல் மூன்று மடங்கு. சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் 50 கோடி என்றால் மொத்தமாக 150 கோடிகளை வசூலிக்க வேண்டும். மூன்று தினங்களில் முப்பது கோடிக்கு மேல் வசூலித்த துப்பாக்கி, நூறு கோடியை எட்டியது. சென்னையில் துப்பாக்கியின் முதல் ஆறு நாள் வசூல் சுமார் 4.8 கோடிகள். மொத்தமாக 14 கோடி அளவுக்கு சென்னையில் வசூலித்தது. அதாவது (சுமாராக) மும்மடங்கு. சிங்கம் 2 வின் முதல் மூன்று நாள் வசூல் 2.7 கோடி. பத்து கோடியை அனாயாசமாக தாண்டும். எனில் தயாரிப்பாளரின் கணக்குப்படி மொத்தமாக 150 கோடியை படம் தொட வேண்டும். அது சாத்தியமா?

ஒரு படம் 50 கோடியை மூன்று தினங்களில் வசூலிப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் சினிமாவின் பொருளாதார தூண்களை வலுப்படுத்தக் கூடியது. தயாரிப்பாளர்கள் சொல்லும் வசூல் கணக்கு எப்படி இருந்தால் என்ன, யாரை பாதிக்கப் போகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. வசூலை அதிகப்படுத்தி சொல்லும் போது சம்பந்தப்பட்ட ஹீரோவின் சந்தை மதிப்பும் போலியாக உயர்த்தப்படுகிறது. பத்து கோடி வாங்குகிறவர் அடுத்தப் படத்தில் பதினைந்தாக சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்.

சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தரப்போகும் வெற்றிப் படம். அதனை ஏற்கனவே படம் நிரூபித்துவிட்டது.

நன்றி;வெப் துனியா

Saturday 13 July 2013

தோரணம் - 12/07/13


இந்த வார கவிதை;


ஏக்கம்;

கை நிறைய பூக்கள்...

மல்லிகை செடியில்

மலர்கள் பறிக்கிறாள்..!

மடியில் ரோஜாக்கள்

கடவுளுக்கு மாலை தொடுக்கிறாள்..!

தலையில் பூ கூடை வைத்து

கூவி கூவி விற்கிறாள்..!

கட்டிய பூவை,,

தலையில் சுமந்த மலரை,,

கூந்தலில் சூட முடியாத பெண்

சமூகத்தில் விதவை.

ஆர்.சத்யசேகர்  - சாமிதோப்பு


திருடா திருடா;

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒரு குற்றவியல் ஆய்வில் தெரிய வந்த தகவல்..

* லண்டனில் ஒவ்வொரு 4.5 வினாடிக்கு ஒருமுறை ஒருவர் தன் பொருட்களை திருடர்களிடம் பரி கொடுக்கிறார். அதாவது லண்டன் நகரில் திருட்டு பயம் அதிகமாம்.

* பெரும்பாலான வழிப்பறி கொள்ளைகள் பகலில் தான் நடைபெறுகிறது.

* உலகம் முழுவதும் அடையாளம் காணப்படும் திருடர்களில் சராசரியாக 700 பேருக்கு ஒருவர் தான் போலீசாரிடம் பிடிபடுகின்றனர். மற்றவர் சுதந்திரமாக வெளியே நடமாடிக் கொண்டு தான் இருகின்றனர்.

* வீடுகளில் நடக்கும் திருட்டுகளில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வேலைக்காரர்களே ஈடுபடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

எனவே உஷாரா இருந்துகோங்க.


இந்த வார நகைச்சுவை;

முதலாளி தனது நண்பருடன் தொழிற்சாலைக்குள் சுற்றிவந்தார். வழியில் ஒரு எந்திரத்தின் முன் நின்றுகொண்டிருந்த தொழிலாளியை நெருங்கி ஏதோ சொன்னவர் மறுபடியும் நண்பருடன் இணைந்து நடக்கலானார்.
“அந்தத் தொழிலாளிகிட்ட என்ன சொன்னாய்?” கேட்டார் நண்பர்.

“வேலையை வேகமா செய்யணும்னு சொன்னேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்கு எவ்வளவு சம்பளம் தர்ற?” கேட்டார் நண்பர்.

“மாசம் ஆறாயிரம் ரூபாய் தர்றேன்.” சொன்னார் முதலாளி.

“அவருக்குக் கொடுக்கிற சம்பளப்பணம் உனக்கு எப்படிக் கிடைக்குது?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை விற்பதால் கிடைக்குது.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சு கொடுக்கிறது யாரு?” கேட்டார் நண்பர்.

“அந்தத் தொழிலாளிதான்.” சொன்னார் முதலாளி.

“அவரு ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு பொருள்கள் செஞ்சு கொடுப்பாரு?” கேட்டார் நண்பர்.

“ஆயிரம் ரூபாய் இருக்கும்...” சொன்னார் முதலாளி.

“அப்படின்னா மாசம் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை அவரு செஞ்சுகொடுக்கிறாரு. ஆனா அவரு செய்ற வேலைக்கு நீ அவருக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறதுக்கு பதிலா, ‘வேகமா வேலை செய்யணும்’-னு நீ தினமும் சொல்றதுக்காக அவருதான் உனக்கு மாசம் இருபத்து நாலாயிரம் ரூபாய் கொடுக்கிறாரு, இல்லையா?” கேட்டார் நண்பர்.

“ம்...” என்று சொன்ன முதலாளி உடனே சுதாரித்துக்கொண்டு, ”ஆனா இந்த மெஷின்லாம் என்னோடதாச்சே,” என்றார்.

“இந்த மெஷின்களை நீ எப்படி வாங்கின?” கேட்டார் நண்பர்.

“பொருள்களை வித்து அதிலே கிடைச்ச பணத்திலேதான் வாங்கினேன்.” சொன்னார் முதலாளி.

“அந்தப் பொருள்களைச் செஞ்சது யாரு?” கேட்டார் நண்பர்.

இப்போது முதலாளி சொன்ன பதில்: “வாயை மூடிட்டு வா... அவன் காதிலே விழப்போவுது...”


இந்த வார விழிப்புணர்வு தகவல்; 

ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது.

ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

>எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)
என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக
PDS 01 BE014
என்ற தகவலை

9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும்.

உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும்.
இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


எங்கும் தமிழ் எதிலும் தமிழ்;

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார் அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்?

நான், அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!


சிங்கம் 2 - கர் புர் கிர்;

வர வர தமிழ் நாட்டு ஜன தொகைய விட தமிழ் சினிமா பைடேர்ஸ் தொகை அதிகமாயிருச்சு போல. சிங்கம் 2 படத்துல்ல எம்புட்டு பேர கொலையா கொன்னு எடுக்குறாரு அம்மாடியோவ். ஓங்கி அடிச்சா ஒண்ணுக்கு போற வெய்ட்ல சீ ஒன்னற டென் வெய்ட்ல, நாடுவிட்டு நாடு காண்டம் விட்டு காண்டம் சாரி சாரி கண்டம் கண்டம் பறந்து தாக்குற எவுகனைடா அப்படின்னு அவரு ஓங்கி ஓங்கி அடிக்கும் போது அந்த புள்ளைங்க எல்லாத்தையும் பார்க்கும் போது ரொம்ப பாவமா இருக்கு இந்த காசுக்காக எம்புட்டு அடி வாங்குறாங்க.

சூர்யா நல்ல அடிக்கிறாப்ல, பறந்து பறந்து பந்தாடுறாரு, பயங்கரமா பஞ்ச் அடிகிறாரு எனக்கு ஒரு சந்தேகம் இதெல்லாம் விஜய் பண்ணுனா நம்ம ஆளுங்க விட்டு கிழிக்கிறாங்க அத இந்த ஆள அவரு தம்பியலாம் லைட்டா களாய்சிட்டு விட்டுடுறாங்க அது ஏன். அய்யா சூர்யா சிங்கம் 1ல சென்னைல உள்ள ரௌடிய காலி பண்ணிடிங்க சிங்கம்2 ல வெளிநாட்டுக்காரன்ன போயி புடிச்சுட்டு வந்திங்க. சிங்கம் 3 ல செவ்வாய் கிரகம் போவிங்களா.

இசையை பத்தி சொல்லணுமே காது சவ்வு அருந்துருசுல. மொத்ததுல்ல படம் பார்த்துட்டு வெளிய வந்து சாரிடான் மாத்திரை வங்கி போட்டது தான் மிச்சம்ல. படம் பார்த்த தலை வலி வரும்ன்னு நான் ஜோக்கா தான் படிச்சு இருக்கேன் அத நேற்று தான் அனுபவிச்சேன்ல. 


மதம்;

நான் பொதுவா மத விசயங்களை பதிவாக எழுதுவதில்லை. இன்னைக்கு மெட்ராஸ் பவன்ல சிவகுமார் மோடியின் பேட்டியை பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தாரு அத படிச்சதுக்கு அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும் போல இருக்கு.

எந்த மதமும் பிறர் உயிரை எடுக்க வேண்டும் என்று  சொல்லவில்லை. எல்லா மதங்களும் நல்லதையே போதிகின்றன. அதை பின்பற்ற வேண்டிய ஐந்து அறிவு மனிதனே தவறு செய்கிறான். தவறு செய்யாதவர்கள் எந்த மதத்திலும் இல்லை அவ்வாறு செய்பவன் மனிதனே இல்லை.

நன்றி!

Tuesday 9 July 2013

எந்த வேலை செய்வது?

       
"பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் கிடைத்த வேலையே போதும் என்று நமக்கு அதிகம் பிடிக்காத வேலையில் இருந்து விடுகின்றோம்.

இந்த மனப்பான்மையால், செய்யும் வேலையில் ஆர்வம் இழந்து
 விடுகின்றோம் படிக்கும் காலத்தில் வாழ்வில் எந்த உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்பினோமோ, அதை மறந்து செயல்பட்டுக் கொண்டிருப்போம்!

சாதாரண அலுவலக வேலையிலிருந்து விடுபட்டு, நீங்கள் உண்மையிலேயே விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க 10 சிறந்த வழிகள்.
1. வாழ்வின் முக்கியதுவம் : 

நம்மில் பலர் வயதான பிறகு நாம் ஏன் பலரைச் சந்தித்திருக்கக் கூடாது அல்லது அதிகக் கடினமாக உழைத்திருக்கக் கூடாது என்று யோசிப்பதுண்டு. சாதாரண அலுவலக வாழ்க்கையின் கட்டாயத்தை விட்டு நம் எதிர்காலத்தில் அடைய வேண்டிய குறிக்கோளுக்காக பாடுபடுவதில் தவறில்லை.

2. வாழ்க்கை ஒரு பாடம் : 

எதை நாம் விரும்புவதில்லையோ அதைப்பற்றி ( குறிப்பாக அர்த்தமற்ற வேலைகள், அலுவக அரசியல் போன்றவை ) எண்ணாமல், நாம் செய்ய விரும்பும் நம்பிக்கையுடன் வேலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

3. உறுதியான சிந்தனை : 

தொழிலில் செயல்படுபவர்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசிக்கிறார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

4. நம் நோக்கத்தில் உறுதி : 

உள்ளத்திலே ஏற்படும் பயத்தை உதரித்தள்ளி நாம் காணும் கனவை அடைய தைரியமாக முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அவற்றிலே நம் முழு கவனத்தையும் செலுத்துவது சிறந்தது.

5. உண்மை நிலை : 

"உங்கள் வீட்டிலே உட்கார்ந்தப்படி மாதம் ரூ 10,000/- சம்பாதிக்க வேண்டுமா, இதோ ஒரு எளிய வேலை" என்ற விளம்பரங்களை விட்டுத் தள்ள வேண்டும். நம் சொந்த முயற்சியில் தொழில் தொடங்குவதற்கு காலமும் கடின உழைப்பும் அதிகமாக தேவைப்படும்.

6. தகவல்களை திரட்டுவது :

 நாம் ஆரம்பிக்க விரும்பும் தொழில் பற்றிய பல தகவல்களை, நூலகங்களிலிருந்தும் அறிந்து அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட கூட்டமைப்புகளிலிருந்தும் சேகரித்து நம்மை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

7. கனவை நனவாக்குவது : 

நம் கனவுத் தொழிலைத் தொடங்க ஒரு கால நிர்ணயம் செய்துக் கொண்டு அந்த காலக் கட்டத்துக்குள் தொடங்க எல்லா முயற்சியையும் மேற் கொள்ள வேண்டும்.

8. மற்றவர்களுடைய ஆதரவு : 

உற்சாகம் என்பது தொற்று நோய் போல பரவும். ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களின் ஆதரவை தேடிப் பெறவேண்டும்.

9. வேலையை தொடங்குவது : 

"ஒரு மலையை நகர்த்த வேண்டுமா? முதலில் ஒரு கல்லை நகர்த்துங்கள்" என்கிறது சீனப் பழமொழி. நம் மொத்த கனவுத் தொழிலைத் தொடங்க முதலில் அவற்றை சிறு சிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்குவது நல்லது.

10. நன்றி உணர்வு : 

நம் எதிர்காலக் கனவை நினைவாக்க, இப்போது நாம் எவ்வளவு வேலைகளை செய்ய முடிகிறது என்பதை நன்றியுடன் நினைவு கொள்வது நல்லது.

நமது  நண்பர்கள் ஒரு சிறு கதை போட்டி வைத்து உள்ளனர். நம்ம பதிவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.

 விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
(see attached 'Marks Calculation Sample')
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

போட்டிக்கான நடுவர்கள்:

Mynthan Shiva (மைந்தன் சிவா)  
Parisalkaaran Krishna Kumar (பரிசல்காரன்) 
Pichaikaaran Sgl (பிச்சைக்காரன்)  
Raja Rajendran (ராஜா ராஜேந்திரன்) 
Val Paiyan (வால் பையன்)  


சந்தேகங்கள் எதுவும் இருந்தால் பின்னுட்டத்தில் கேட்கவும்.


Saturday 6 July 2013

சயின்ஸ் கபாலி இன்னா சொல்றாருன்னா? 06.07.2013


புதினாவின் மகத்துவம் ;

நறுமணமும், நற்சுவையும், மூலிகை தன்மையும் புதினாவின் புகழுக்கு காரணம். இதில் அடங்கி உள்ள சத்துக்களை இந்த வாரம் பட்டியல் போடுவோம்.

* புதினா ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட மூலிகைத் தாவரம்.தற்போது உலகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. நிழல் மிகுந்த பகுதிகளில் இது நன்கு வளரும்.

* புதினாவில் தாவரங்களில் காணப்படும் சிறப்பு ரசாயன மூலகூறுகல் பல உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியம் வழங்கும் பொருட்களாகும்.

* புதினாவின் நோய் எதிர்ப்பு தன்மையை அளவிட்ட ஆய்வாளர்கள், 100 கிராம் புதினா 13 ஆயிரத்து    978 மைக்ரோ முலக்கூறு டி.இ. அளவு நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது என கூறுகிறார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரி-ரேடிக்கல்களை விரட்டும் அளவை கொண்டு, நோய் எதிர்ப்பு அளவு கணக்கிடப்படுகிறது.

* கெட்ட கொழுப்புகள் எதுவும் புதினாவில் இல்லை. உடலுக்கு அவசியமான எண்ணெய்ப் பொருட்கள், ஏராளம் உள்ளன.

* மென்த்தால், மென்த்தோன்,மென்த்தால் அசிடேட் போன்ற எண்ணெய் பொருட்கள் இதில் உள்ளன. இவை எளிதில் ஆவியாகக் கூடியது.
தோல் தொண்டை, வாயிப் பகுதிக்கு நன்மை அளிக்கக் கூடியது.உடலில் காணப்படும் துளைகள் சரியாகச் செயல்பட இவை துணை நிற்கும். அவற்றில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கும்.

*மென்த்தால் சிறந்த வலி நிவாரணியாக பயன் பெறுகிறது. மயக்கமூட்டும் பொருளாகவும்,எரிச்சலை குறைக்கும் பொருளாகவும் இதனை பயன்படுத்துகிறார்கள்.

* ஐ.பி.எஸ் மற்றும் கொலிக் பெய்ன் டிஸ்ஸாடர் போன்ற வியாதி பாதித்தவர்களுக்கு புதினா திரவம் உடலில் பூசப்படுகிறது. இது நோயின் திடீர் தீவிரத்தை கட்டுப்படுத்தும்.

* பொட்டாசியம் ,கால்சியம் ,இரும்பு ,மக்னிசியம் ,போன்ற  அத்தியவாசிய  தாது உப்புகள் புதினாவில் உள்ளது. 100 கிராம் புதினாவில் 569 மில்லிகிராம் பொட்டசியம் உள்ளது. இது உடல் வளவளப்பு தன்மையுடன் இருக்க அவசியமாகும். இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துவதில் பொட்டசியம் பங்கு வகிக்கிறது.

*மாங்கனிசு மற்றும் தாமிரம் போன்றவை நோய் எதிர்ப்பு நொதிகள் போன்றவை சிற்பக செயல்பட துணைக்கரணியாக விளங்கும்.

*சிறந்த நோய் எதிர்ப்பு வைட்டமினான வைட்டமின் ஏ புதினாவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற வைட்டமின்களும் நிறைந்து உள்ளன. பி குழும வைட்டமின்கலான போலேட், ரிபோப்லேவின், பைரிடச்சின் மற்றும் வைட்டமின் கே ஆகியவை குறிபிட்ட தக்க அளவில் உள்ளது.

இப்போ சொல்லுங்க புதினா மகத்துவமானது தானே.


சாப்பிட்டவுடனே செய்யக்கூடாதவை:

1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

3. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும்.

8. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

9. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.


இரத்தத்தைச் சுத்திகரிக்கும் காளான்;

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

கொட்டாவி;

ஓரிடத்தில் ஒருவர் கொட்டாவி விட்டால் அவரை பார்த்த மற்றவருக்கும் கொட்டாவி வரும் என்பது பரவலாக நம்பபடுகிறது. இது ஒரு பொய்யான நம்பிக்கை தான்.

கொட்டாவி ஒரு வகை அனிச்சை செயலாகும்.மூளைக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு குறையும் பொழுது, மூளை செல்கள் களைப்படையும் போது நுரையீரல் செயலியலைத் துரிதபடுத்தவும் கொட்டாவி நிகழ்வு ஏற்படுகிறது.

ஒரே சுழலில் வேலை பார்க்கும் பலருக்கும் பணித் தன்மையால் ஒரே மாதிரி சோர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொட்டாவி விடலாம். ஒருவரை பார்த்து ஒருவருக்கு கொட்டாவி வர வாய்ப்பில்லை.{ஆனா நமக்கு வருதே பா}

காற்றை விழுங்கும் குழந்தைகள்;

பால் குடித்த குழந்தைகள் அநேக நேரங்களில், சில நிமிடங்களில் பாலை கக்கி விடுவதை பார்த்து இருப்பிர்கள். இதற்கு காரணம் குழந்தைகள் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்குவது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குழந்தை பாலை குடித்ததும் தாய் குழந்தையை தோளில் போட்டு முதுகை தட்டி கொடுத்தால், குழந்தையின் வயிற்றுக்குள் போன காற்று வெளியேறும்.
இல்லாவிட்டால்தான் குழந்தை கக்கும் வயிறு உப்புசமாகும்.

நன்றி.