Thursday 4 April 2013

தலைவா படத்தின் காட்சிகள் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும்: ஏ.எல்.விஜய்



தளபதி விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் படம் ‘தலைவா’.


விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் ‘தலைவா’ கூட்டணி உருவான விதம் குறித்து இயக்குனர் ஏ.எல். விஜய் கூறுகையில், மதராஸபட்டினம் படத்தைப் பார்த்த விஜய் என்னை அழைத்து நாம இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார்.

ஆனால் இத்திட்டம் திட்டமாகவே இருந்தது. அப்போது தான் விஜய்யின் திகதி வைத்திருந்த தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினை சந்தித்தேன்.

அதன் பின்னரே இத்திட்டம் செயல்வடிவம் பெற்று 'தலைவா'வாக உருவெடுத்தது. நான் கதை முழுவதையும் விஜய்யிடம் கூறிய போது அதை அமைதியாக அமர்ந்து கேட்ட அவர் ஒரு 15 நிமிட நேரம் கழித்து சின்ன சிரிப்பு சிரித்து கையைக் குலுக்கினார்.

இதனையடுத்து பட வேலைகளை துவக்கிவிட்டேன். 'தலைவா' படத்தில் ஸ்டைல், ஆக்ஷன், மாஸ், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் இருக்கும்.

ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போல கண்டிப்பாக அதிரும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் இயக்குனர் ஏ.எல். விஜய்.

துப்பாக்கி வெற்றிக்குப் பின்பு விஜய், தற்போது 'தலைவா' படத்தில் நடித்து வருவதால் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments: