Wednesday 20 November 2013

மீண்டும் சிம்பு ஜோடியானார் நயன்தாரா


உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதலர்களாகிறார்கள். இந்தமுறை திரையில் மட்டும்.

பாண்டிரா‌ஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று அவரை அணுகி கதை சொல்லியிருக்கிறார் பாண்டிரா‌ஜ். கதையை கேட்ட நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்புவைப் பொறுத்தவரை கரும்பு தின்ன கூலியா கதைதான். அவருக்கும் ஓகே.

கௌதம், சிம்பு நடிக்கும் படம் தொடங்கும் முன்பே திட்டமிட்டபடி முதல் ஷெட்யூலை பாண்டிரா‌ஜ் முடித்திருக்கிறார். சிம்பு, நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. டிசம்ப‌ரில் திட்டமிட்டிருக்கிறார்கள்.

முன்னாள் காதலர்கள் ரன்பீர் கபூரும், கத்‌ரினா கபூரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த ஹே ஜவானி ஹே திவானி சூப்பர்ஹிட்டானது. பட ‌ரிலீஸுக்குப் பிறகு இருவரும் வெளிநாடு டூர் சென்றதோடு பிரைவெட் பீச்சில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது. அதேகதைதான் இங்கேயும். சிம்பு, நயன்தாரா இணைகிறார்கள் என்பதே படம் பாதி ஹிட்டான மாதி‌ரிதான்.

மீதி பாதி... டிசம்பர் வரட்டும் பா‌ர்ப்போம். 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

போச்சுடா...! வரட்டும் பார்க்கலா... ம்....ம்....

வெங்கட் நாகராஜ் said...

நடக்கட்டும் நடக்கட்டும்!