Tuesday 21 May 2013

வாழ்க்கை சிறப்பாக அமைய?



ஐபிஎல்;

இந்த வருஷம் நான் ரொம்ப எதிர்பார்த்த அணி ராயல் சேலன்ன்ஜர்ஸ். இறுதியல் பல்பு வாங்கிருச்சு இனி கெயில்,ஏ பி டி அதிரடி ஆட்டங்களை அடுத்த வருடங்களில் தான் காண முடியும். நான் எதிர்பார்கவே இல்ல சன் ரைசெர்ஸ் டாப் 4 வரும் என்று என்ன தான் நாம அய்யாவின் குடும்பத்தை வாரி கொண்டு இருந்தாலும் அவர்கள் கால் பதிக்கும் துறைகளில் வெற்றி பெற்று கொண்டே வருகிறார்கள் இது அவர்களில் குடும்ப ராசி போல.


ஜாதி வெறி;

கால நேரம் நம் மக்களை எவளவோ மாற்றி இருந்தாலும் ஒரு சில மக்கள் இன்னும் மாறவே இல்ல. இன்றைய செய்தி தாளில் ஜாதி மாற்றி காதல் திருமணம் புரிந்து கொண்ட தன் தங்கையை நண்பர்களின் உதவியுடன் கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் கைது. இத்தனைக்கும் தன் அண்ணன் தன்னுடைய வீட்டிற்கு வந்ததும் பாசமாக கரி விருந்து எல்லாம் சமைத்து கொடுத்து இருக்கிறார். அதை சாப்பிட்டு விட்டு சென்று விட்டு மது அருந்தி விட்டு வந்து இந்த செயலை அரங்கேற்றி இருக்கிறார் அந்த அண்ணன்.


இளைய தளபதி அறவிப்பு;

இந்த அரசியல்வாதிகளுக்கே உரிய குணம் என்னவென்ரால் சாதாரணமா தான் பேசுவாங்க ஆனா தன் முன்னே மிக பெரிய கூட்டம் நிற்பதை கண்டு விட்டால் எங்க இருந்து தான் வருமோ அப்படியே அருவி போல கொட்டும் பேச்சு. அதும் அவங்க ஆட்சியா இருந்துச்சுன்னா அள்ளி விடுவானுங்க பாருங்க உங்களுக்கா நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று ஆனா உருப்புடிய  ஒரு ஆணியும் புடுங்க மாட்டங்க. அதே போல மக்கள் கூட்டதை பார்க்கவும் நம்ம இளைய தளபதியும் நடிக்கிரத விட்டுட்டு உங்களுக்கு சேவை செய்யலாம் என தோன்றுகிறது என அள்ளி விட்டார் உடனே நம்ம மக்களுக்கு அவ்வளவு சந்தோசம் பாருங்க கண்டிப்பா மார்க்கெட் போனதும் வருவாரு போல.


புது கவிதை;

பள்ளியில் படிக்கும் நாட்களில் வாரம் வாரம் வரும் குடும்ப மலரில் வெளி வரும் புது கவிதை பகுதியில் வெளி வரும் கவிதைகளில் பிடித்த கவிதைகளை எழுதி வைத்து கொண்டு பொண்ணுகள்ட்ட கூட படிக்கும் பெண்களிடம் நான் எழுதுனதா காட்டி பந்தா பன்றது உண்டு. பின்பு அந்த மாதிரி எழுதி வைக்கும் பழக்கம் போயிருச்சு இப்பலாம் கவிதை படிகிரதோட சரி சமிபத்தில் நான் ரசித்த கவிதை
முதிர்கன்னி
அப்பாவுக்கு கேட்குமா.. 
அடுத்த தெருவில் வரும்.. 

கல்யாண மேளம்?

எழுதியவர்;ராமன்-சென்னை 



பழ மொழிகள்;

மேல படத்தில் உள்ள அனைத்தையும் நம் வாழ்கையில் கொண்டு வருவோமே ஆனால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.


சிந்தனை செய் மனமே;

நல்லதை எடுத்து காட்டுவதே விமர்ச்சனத்தின் நியாயமான குறிக்கோள் ஆகும்.

நல்ல குடும்பத்தை உருவாக்குவதே நீ நாட்டுக்கு செய்யும் சேவை ஆகும்.

விரும்பியதை செய்வது சுதந்திரம்,செய்வதை விரும்புவது சந்தோசம்.

நூறு சதவித ஈடு பாட்டுடன் செய்யும் எந்த காரியமும் வீணாவதில்லை.

நன்றி.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐ : இந்தமுறை MI என்று நினைக்கிறேன்...

ஜா : உள்ளே சென்ற அரக்கன் தன் வேலையை காட்டி விட்டது...

இ : ஈஈ

7 விசயங்கள் சிறப்பு... மற்றனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

Anonymous said...

nallathoru kalavaiyana kadhambam..namma whistle eppavume chennaikkuthan..dhoniyin anugumuraiye avarathu vetrikku karanam..