Wednesday 25 December 2013

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள் !!!

1.காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேக்ஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.

2.காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..

3.காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..

4.உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..

5.காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..

6.முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..

7.ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..

8.உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..

9.உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..

10. கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..

#நமக்குத்தான் குடுப்பினை இல்லை.. (நம்புங்கப்பா..) காதலிக்குற மக்களாவது குஜாலா இருங்கப்பா..!

3 comments:

ராஜி said...

நல்ல ஆலோசனைகள். இதுல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சுட்டு பக்கத்துலயே உக்காந்துக்கோங்க.

கிருஷ்ணா said...

//உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..//

100 % true..........

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனைகள்...... :)