Wednesday 2 October 2013

தல, தளபதியுடன் மோதும் வைகைப்புயல்!


வருகிற பொங்கலுக்கு விஜய், அஜித், கார்த்தியுடன் மோதவிருக்கிறார் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவேளைக்குப் பின் நமது வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் ஜகஜல புஜபல தெனாலிராமன்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, இப்படம் டிராப் ஆகிவிட்டது என கொலிவுட்டில் தண்டோரா அடித்தனர்.

ஆனால் நமது வைகைப்புயல் தட்டி முட்டி படத்தை 60 சதவீதம் முடித்து விட்டாராம். அதுமட்டுமின்றி தற்போது ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியிட்டுள்ளார்.

அது வேறொன்றுமில்லை, இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டம் தீட்டி வருகின்றனராம்.

ஏற்கெனவே வருகிற பொங்கல் ஜல்லிக்கட்டில் அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் பிரியாணி ஆகிய பபடங்கள் களமிறங்கவுள்ளது.

தற்போது வடிவேலுவும் இந்த ரேசில் கலந்து கொள்ளப்போகிறாராம்.

இப்படத்தை போட்டா போட்டி புகழ் யுவராஜ் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

                                                                                                                                 



அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்;

இந்த உலகம் அன்பு என்னும் அச்சாணியின் மூலமே இயங்குவதாக நாம் அனைவரும் படித்து இருப்போம். ஆனால் இப்பொழுது நடக்கும் உலக நிகழ்வுகளை நாம் பார்க்கும் பொழுது அதெல்லாம் வெறும் பேச்சு மட்டுமே. அன்பை மட்டுமே போதித்த புத்தனை  வணங்கும்  நாட்டில் தான் லட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்க பட்டார்கள்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க அந்த நாட்டை அடிமை படுத்தும் செயல்களில் இறங்குகிறது. முடியவில்லை என்றால் அந்த நாட்டிற்கு எந்த வகையில் தொல்லை கொடுக்க முடியுமோ என்னென்ன குழப்பங்கள் விளை விக்க முடியுமோ அனைத்தையும் செய்து தன்னுடைய காரியத்தை சாதித்து கொள்கிறது.

இவ்வுலகம் எங்கும் சுயநலம் மட்டுமே சூழ்ந்துள்ளது. இவைகளை களைய நாம் என்ன செய்ய போகின்றோம். நம் வருங்கால தலை முறையினற்கு என்ன விட்டு செல்ல போகின்றோம். சக மனிதனை மனிதனாய் மதிக்கும் நிலை எப்பொழுது வரும்.

ஏன் இந்த நிலை? கணவன் மனைவிகுள் பிரச்னை,அண்ணன் தம்பிக்குள் தகராறு, என்று ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே இந்த காலத்தில் ஒற்றுமை இல்லை எனில் நாம் எப்படி இந்த உலகத்தில் அதை எதிர் பார்க்க முடியும்.

இவை அனைத்தும் மாற என்ன வழி?



அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்;

எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை, ஆதரிக்கவில்லை.
பிறரிடம் அன்பு செலுத்துங்கள். நம்மை சார்ந்தவர்களுக்கும், நமது சந்ததியினற்கும் கற்று கொடுங்கள்.

உ‌ங்க‌ள் குடும்பத்தாரிடம் க‌ண்டி‌ப்பை ‌விட அ‌திகமாக அ‌ன்பு கா‌ட்டு‌ங்க‌ள்.

அ‌ன்பை எ‌ந்த வ‌ற்புறு‌த்தலு‌ம் இ‌ல்லாம‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள். மற்றவர்களிடம் இரு‌ந்து வரு‌ம் அ‌ன்பை முழுதாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அவ‌ர்க‌ள் ‌மீது ‌நீ‌ங்க‌ள் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ன்பை அ‌வ்வ‌ப்போது வா‌ர்‌‌த்தைகளா‌ல், செயலா‌ல் வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

அ‌ன்பு அனை‌த்தையு‌ம் பொறு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம், அ‌ன்பு அனை‌த்தையு‌ம் ந‌ம்பு‌ம், அ‌ன்பு எத‌ற்கு‌ம் அடிப‌ணியு‌ம். எனவே இந்த சமுகத்தில் நீ‌ங்களு‌ம் அ‌ன்பு எனு‌ம் ஒரு வ‌ட்ட‌த்‌‌தி‌ற்கு‌ள் ‌சி‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

எதையு‌ம் அ‌ன்பாக‌க் கூறுவத‌ன் மூல‌ம் ந‌ல்ல‌ப் பலனை அடையலா‌ம். அதே‌ப்போல அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் தவறுகளை க‌ண்டி‌க்காம‌ல், எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள். ‌மீ‌ண்டு‌ம் தவறு செ‌ய்யாம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை‌யு‌ம் அ‌ன்புட‌ன் எ‌ச்ச‌ரியு‌ங்க‌ள்.

நாம் நம்மை மாற்றி கொள்வோம். இந்த உலகம் தானாய் மாறும்.

இது ஒரு மீள் பதிவு..

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

அன்பு காட்டுங்கள்....

சரியாகச் சொன்னீர்கள்.....

பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பின் கருத்துக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்...

r.v.saravanan said...

அன்பு காட்டுங்கள் good