Tuesday 19 March 2013

மாணவர்கள் நினைத்தால்?


இன்று தமிழகமே உற்று நோக்கியுள்ளது மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தை தான். காலம் காலமாக அரசியல்வாதிகளை நம்பி ஏமாந்து போன மாணவர்கள் இனியும் ஏமாற தயார் இல்லை. இனி எம் இன மக்களை தாங்களே காப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

அரசியல்வாதிகளால் தபாலும், தந்தியும் மட்டுமே அனுப்ப முடியும் என்று உணர்த்து விட்டனர். அரசியல் என்ற பெயரில் நீங்கள் நடத்தும் அனைத்து அக்கிரமங்களையும் இனியும் பொருத்து கொள்ள முடியாது. எம் இன மக்களுக்கு உண்மையான நீதி வழங்கப்பட வேண்டும். 

இந்தியாவை ஆளும் அரசாங்கத்திற்கும், சட்டையை கிழித்து, மேஜையை தட்டி சுய நலத்திற்காக வேஷம் போடும் எதிர்கட்சி யினற்கும், அரசியல் என்னும் போர்வைக்குள் மறைந்து கொண்டு சுய நலமாக செயல் படும் சிறிய பெரிய கட்சிகளுக்கும், இந்த போராட்டம்  அவர்களை காணாமல் போக செய்து விடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

மாணவர்களால் மட்டுமே இதை சாத்திய படுத்த முடியும். அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சனை விளம்பரமாகவும், பிழைப்பாக மட்டுமே இருக்க முடியும். நாம் அனைவரும் இந்த மாணவ சமுதாயத்திற்கு ஆதரவளிப்போம்.

தமிழ் இனமே எழுச்சி கொண்டு நீ எழுந்து போராடு...

உன் இனத்தை அழித்தவர்கள் எவராயிருந்தாலும் தண்டனைகள் பெற்று 

கொடுக்கும் வரை போராடு.....

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழம் மலரும்


மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள்...

வாழ்த்துவோம்...

Unknown said...

வருகைக்கு நன்றி தனபாலன் அண்ணே