Wednesday 12 February 2014

அடிமையாகாதே ! ! !


போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

3 comments:

Anonymous said...

வணக்கம்

ஒவ்வொருவரிகளும் உண்மைதான்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

மிக அருமையான வரிகள்...
பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொன்றும் அருமை....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சக்கரகட்டி.