Wednesday 12 February 2014

அடிமையாகாதே ! ! !


போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

3 comments:

  1. வணக்கம்

    ஒவ்வொருவரிகளும் உண்மைதான்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிக அருமையான வரிகள்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் அருமை....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சக்கரகட்டி.

    ReplyDelete

உங்கள் எண்ணங்கள் எழுத்து வடிவிலாக அறிந்து கொண்டு என் தவறுகளை திருத்தி கொள்ள ஆசைபடுகிறேன்...

போடுங்கம்மா ஒட்டு!!!!