Thursday 29 August 2013

வாய் விட்டு சிரிப்போம்..!!


மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

கணவன்:

அடி செருப்பால! ...

உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம

குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
..........................................................................................
பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்!

சிக்கினா செத்தான்டா இதோடு..!!
............................................................................................

இன்பத்திலும் சிரிங்க..!

துன்பத்திலும் சிரிங்க!

எல்லா நேரமும் சிரிங்க!

அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.
............................................................................................

மாடு போல சின்னதா இருக்கும்!

ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

சரி,

நானே சொல்றேன்

அது கண்ணுக் குட்டி!

கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
..............................................................................................
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..

அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே!

பாசம் மனைவி மேலே இல்லடா...

பூக்காரி மேல!
....................................................................................................

அப்பா:

ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்:

எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
...............................................................................................

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட

கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட

ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன

கொடும சார் இது?....
..................................................................................................
என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,

கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்

எல்லாம் வைக்க முடியாது...

சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
.....................................................................................................

உங்கட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு

2. அழகு

3. நல்ல டைப்

4. கொழந்த மனசு...

5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
......................................................................................................
அப்பா:

நேத்து ராத்திரி பரிச்சைக்கு

படித்தேன்னு சொன்ன,

ஆனா,

உன் ரூம்'ல லைட்டே எரியல?

மகன்:

படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!
...................................................................................................

நன்றி

Tuesday 27 August 2013

விஜய்யிடம் போனில் பேசினார் ரஜினி


உர்ர்ரென இருக்கிறாராம் விஜய். இது தலைவா படத்திற்கு தமிழகம் முழுக்க கிடைத்திருக்கும் விமர்சனங்களால் அல்ல. தனக்கென்று ஒரு பிரச்சனை வந்தபோது இந்த சினிமாவுலகம் கைகழுவி விட்டுவிட்டதே என்கிற கவலையால். இதே மாதிரி ஒரு சூழ்நிலை கமலுக்கு வந்த போது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களும் கூடிவிட்டார்கள்.

கமல், என்னால யாருக்கும் தர்மசங்கடம் வேண்டாம். என் பிரச்சனையை நான் மீடியாகிட்ட சொல்லிக்கிறேன் என்று சொல்லியும் கூட அவருக்கு ஆதரவு கரம் பெருகி கொண்டேயிருந்தது. ஆனால் தன் விஷயத்தில்?

அஜீத் போனில் பேசினார். சிம்பு மட்டுமேதான் தில்லோடு ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். தனுஷ் போட்ட ட்விட்டுக்கு மறுநாளே வேறு மாதிரி மழுப்பல் கருத்தை அவரே வெளியிட்டார்.

இப்படி ஆளாளுக்கு தன் விஷயத்தில் நடந்து கொண்டது விஜய்யை கவலை அடைய வைத்திருக்கிறது.

இந்த நேரத்திலும் விஜய்க்கு ஆறுதலாக நடந்த ஒரே விஷயம் இதுதான். ரஜினி போனில் பேசினாராம். தைரியமா இருங்க. லைஃப்ல இது மாதிரி நிறைய பார்க்கணும். உங்களுக்கு என்னோட சப்போர்ட் எப்பவும் உண்டு என்றாராம். இவ்வளவு பெரிய ஸ்டாரே கை கொடுக்க முன் வந்த பின்பு எதற்காக கவலை?

அவரும் ரகசியமாக போனில் பேசிவிட்டு அமைதியாகிவிட்டாரே என்பதால் இருக்குமோ?

Monday 26 August 2013

சாதனை எக்ஸ்பிரஸ் - இந்திய வசூலில் முதலிடம்


நம்ம ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரெகார்ட் எல்லாத்தையும் அடித்து நொறுக்கி கொண்டு உள்ளது. அந்த படத்தின் இன்றைய வசூல் நிலவரம் கிழே

ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் இந்திய சினிமா சரித்திரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை சொந்தமாக்கியது. இதுவரை முதலிடத்தில் இருந்த 3 இடியட்ஸின் வசூலை அது தாண்டியது.

சென்னை எக்ஸ்பிரஸ் வெளியான நாளில் இருந்து வசூல் சாதனைகளை உடைத்து வந்தது. இதுவரை 100 கோடியை குறைவான நாட்களில் எட்டிய பெருமை சல்மான்கானின் ஏக் த டைகர் படத்துக்கு இருந்தது. ஐந்து தினங்களில் அப்படம் 100 கோடியை எட்டியது. சென்னை எக்ஸ்பிரஸ் நாலே நாளில் 100 கோடியை தாண்டியது. அதேபோல் வெளிநாடுகளிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வசூலை குவித்து வருகிறது.

அமீர்கானின் 3 இடியட்ஸ் 206.28 கோடிகளை வசூலித்திருந்ததே இதுவரை இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையாக இருந்தது. நேற்று முன்தினம் அதனை சென்னை எக்ஸ்பிரஸ் கடந்தது. இன்றுவரை 210 கோடியை தாண்டி அது வசூல் செய்துள்ளது.

இதுதான் இன்றைய தேதியில் இந்திய சினிமாவின் அதிகபட்ச வசூல்.

மொழி தெரியாத நானே இந்த படத்த இரண்டு தடவ பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் செம்மே. நான் பார்க்கும் பொழுதே நிறைய ஹிந்தி ரசிகர்கள் ரிப்பிட் ஆடியன்ஸ் என்பது தெரிந்து கொள்ள முடிகிறது.

ஷாருக்கின் காமெடி சூப்பர் இடையழகி திபிகா படுகோனே சும்மா ஜிவ்வுன்னு இருகாங்க பா. இந்த படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டிய நாம  பாராட்டியே ஆகணும் நிறைய படத்துல்ல இருந்து பல காட்சிகளா உருவி இருந்தாலும் அதை ரசிக்கும் படியா செய்து இருக்கிறார். அதே தலைவா படத்துல்ல இயக்குனர் விஜய்  பண்ணி இருக்கார் மக்கள் மிரண்டு ஓடுற மாதிரி விஜய் சார் நீங்க ரோஹித் ஷெட்டிட போயி இதெல்லாம் கத்துகங்க.

இந்த படம் இன்னும் வசுலை வாரி குவிக்கும்  என்று நம்ப படுகிறது.

Sunday 25 August 2013

என்ன உலகமடா இது..???


மேனேஜரும் நம்மளும்...

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..
தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..
......

ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்ய முடியலேன்னா….. நேரம் இல்லே..


.......

எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா… முட்டாள்தனம்

அவர் பண்ணினா.. அவரும் மனுஷந்தானே.. கடவுளா..?

.....

நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்

அவர் செஞ்சா.. முன்னுதாரணம்..


......

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.. பிடிவாதம்..

அவர் அப்படி நெனைச்சா… கொள்கையில் உறுதி..

....

நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.. காக்கா பிடிக்கறீங்க.

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.. ஒத்துழைப்பு.. பணிவு..


.....

நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.. ஊர் சுத்தறீங்க...

அவர் இருந்தா.. பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கிறார்..

.....

நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவுபோட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க..

அவர் லீவு போட்டா.. ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..

# என்ன உலகமடா இது..????

நன்றி!

Friday 23 August 2013

திருந்த வேண்டியது மடங்களா ? மனங்களா ?


தொலைக்காட்சியில் வெளியான நித்தியானந்தா சுவாமிகளின் நித்திய ஆனந்த லீலா வினோதங்களால் தமிழக கர்நாடகா பக்தகோடிகளெல்லாம் அல்லோல பட்டனர்

32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு, கொட்டும் பணம். எப்படி சம்பாதித்தார் இவற்றையெல்லாம்..

லிங்கம் எடுத்தல் விபூதி எடுத்தல் என்ற சில்லறை சமாச்சாரத்திற்கு விடைக் கொடுத்துவிட்டு சாமியாரின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்ட வசீகரத்திற்கு வசியப்பட்டுப்போன பக்தகோடிகள் கோடிகளை கொட்ட சாமியாருக்கு ஜோடியும் தேவைப்பட்டது.


குமுதத்தில் கதவைத் திற காற்று வரட்டும் கட்டுரையை எழுதியவரின் அந்தரங்க கதவை திறந்து பார்த்த யாரோ ஒருவர் அதனை படம் பிடித்து தொலைக்காட்சிக்கும் அனுப்பிவிட நித்திய அனுபவங்கள் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

பிரம்மச்சரியத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று எழுதியவர் உணர்ச்சிகளின் உந்து சக்தியால் சிற்றின்பத்தை தகாத முறையில் உய்த்து உணர்ந்தார்.


பாவம் பக்தகோடிகள் இவரின் கட்டுரையை படித்து பண்பட முயன்றவர்கள் திண்டாடிப் போயிருப்பார்க்ள். காஞ்சிக் காமக்கோடியின் காமக்களியாட்டங்களும், கொலைக் குற்றமும் வெளிப்பட்ட பின்பும் வாழாவிருந்த சங்க்பரிவார்களுக்கு நித்யானந்தாவின் நிழலுக அனுபவங்களை கண்டவுடன் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.


நித்யானந்தாவிற்கு ரஞ்சிதா காஞ்சிக்கு ‘எம்’ ’எஸ்’ நடிகைகளின் சேவைகள். கூடவே ‘அனு’வில் துவங்கும் எழுத்தாளரின் கசப்பான அனுபவங்கள். காரணம் புரிகிறது அவர் ‘அவாள்’ ஆனதாலோ!


அடப்பாவிகளா? ஒழுக்கச் சீரழிவிலும் ஜாதி வெறியா?காஞ்சிக் காமக்கோடி முதல் கடைக்கோடி அர்ச்சகன் வரை ஒழுக்கச் சீரழிவின் உச்சத்திற்கே சென்ற செய்திகள் அடிக்கடி வெளியான பின்னரும் அறியாமையிலிருந்து விடுபடாத பக்தகோடிகள் புரோகித கசமாலங்களின் காலடியில் வீழ்ந்தே கிடக்கின்றனர்.


மனிதனை மனிதன் என்ற நிலையில் பார்க்காமல் அவன் காட்டும் சில வித்தைகளால் உச்சத்தில் தூக்கிவைத்து கூத்தாடிவிட்டு அவனது ரகசிய செய்கைகள் வெளிப்படுத்தப்படும் பொழுது நிலைகுலைந்துப் போகின்றனர் இந்த அறிவிலிகள்.


இறைவன் யார்? மனிதனை இறைவன் எதற்காகப் படைத்தான்?அவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள் தேவையா? தான் படைக்கப்பட்டது ஏன்? என்பதை பற்றி உணராததன் காரணமாக அறியாமை என்னும் அந்தகாரத்தில் மனிதர்களில் சிலர் மண்டியிட்டுக் கிடப்பதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில அல்ல பல புல்லுருவிகளும் புரோகித வேடம் பூண்டு பணம் சம்பாதிக்கவும், பாலியல் சுகத்தை அனுபவிக்கவும் தலைப்பட்டு விடுகின்றனர். இத்தகைய சூழலை பயன்படுத்திக் கொண்டு கடவுளை மறுக்கிறோம் எனக்கூறும் கூட்டம் ஒன்று ஒழிக்கப்பட வேண்டியவை எவை மடங்களா? மதங்களா? என பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றது.


கடவுளின் பெயரால் நடைபெறும் அநாகரீகங்களும், அநியாயங்களும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுவது எதனால்? என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இத்தகைய ஒழுக்கச் சீரழிவுகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென்றால் தனது அறிவுக்கு சிறிது வேலையைக் கொடுக்க மனித சமூகம் தயாராகவேண்டும்.


இயற்கை புறம்பான நிலையில் பிரம்மாச்சரியத்தை கட்டுப்படுத்துகிறோம் என்ற மோசடித் தனத்திலிருந்து விடுபட்டு இல்லற வாழ்க்கையின் மூலமே மனிதன் முழுமனிதனாக முடியும் என்று கூறும் மனிதத் தன்மைக்கு ஏற்ற கொள்கையை ஏற்க மனிதர்கள் தயாராக வேண்டும். மனித உள்ளங்கள் இத்தகைய இருள்களிலிருந்து எப்பொழுது விடுதலையடைந்து தன்னைப் படைத்த உண்மையான இறைவனை உணரத் தலைப்படுகிறதோ அன்று இத்தகைய மடங்களெல்லாம் காணாமல் போய்விடும். ஆகவே திருந்த வேண்டியது மடங்களல்ல மக்களின் மனங்களேயாகும்..இப்படி நாம் இன்னும் விளிக்காமல் இருந்தால் இவர்களை போன்றவர்கள் நாளை அரசியலுக்கு கூட வர வாய்ப்பு உள்ளது.

சிந்தித்து செயல் படு !!

நன்றி;முக நூல் 

Sunday 18 August 2013

தமிழ் சினிமாவின் அட்டகத்திகள் !


தலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்தப் படிப்பினையை பால பாடமாக மனதின் ஓரத்தில் வைத்திருப்பது அவசியம்.

தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகளுக்கு வந்த வெத்து வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பிரச்சனை ஆரம்பித்தது. படத்தை வெளியிட்டால் பிரச்சனை வெடிக்கும் என்று காவல்துறை அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படத்தின் பேனர்கள், கட் அவுட்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊர்பேர் தெரியாத யாரோ சிலரின் வெடிகுண்டு மிரட்டலுக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக அவை தெரியவில்லை. வெடிகுண்டு மிரட்டலை காரணமாக வைத்து அதிகார மையம் தலைவா படத்தை முடக்க நினைத்தது. அதை அவர்கள் வெற்றிகரமாக செய்து காட்டினார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் பேச்சில் அது வெளிப்பட்டது.

தலைவா அரசுக்கு எதிரான படம். அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்கி, அரசு சம்மதித்தால் மட்டுமே படத்தை திரையிடுவோம் என அவர்கள் கூறினர். படத்தைப் பார்த்த வரிச்சலுகை அளிக்கும் குழு, வரிச்சலுகைக்கு தகுதியில்லை என நிராகரித்தது. அதற்கு மிகவும் எளிய காரணங்களை தெரிவித்தனர். இதே காரணங்களுடன் வெளிவந்த பல படங்கள் வரிச்சலுகை பெற்றதை உதாரணமாக காட்ட இயலும். யாரோ சிலரின் அல்லது ஒருவரின் கட்டளைகள் அதிகாரத்தின் துணையுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த சிஎம் கனவுடன் யார் காய் நகர்த்தினாலும் அதனை இரண்டு திராவிடக் கட்சிகளுமே விரும்புவதில்லை. மக்கள் இயக்கம், தனிக்கொடி என்று அரசியலுக்குரிய தாளலயத்துடன் விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. காவலன் படப்பிரச்சனை காரணமாக சென்ற தேர்தலில் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். திமுக வுக்கு எதிரான நடவடிக்கையாக அது அமைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் பல இடங்களில் அதிமுக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் நானும் ஒரு அணிலாக உதவினேன் என்று பூரித்தார் விஜய்.

ஆனால் ஜெயலலிதா அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டின. முக்கியமாக, எதிர்காலத்தில் நான்தான் அண்ணா, விஜய்தான் எம்ஜிஆர் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிப்படையாக பேசியது அவருக்கு அதிருப்தியை தந்தது. முதல்வேலையாக விஜய்யின் பிரமாண்ட பிறந்தநாள் விழா முடக்கப்பட்டது. விஜய்யால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறந்தநாள் விழாவை அரசியலுக்கான ஆரம்ப விழா என்று சிலர் திரித்துவிட்டார்கள், நடிப்பதற்கே நேரம் இல்லாத எனக்கு அரசியல் செய்ய நேரமும் இல்லை, ஆசையும் இல்லை என நமத்துப்போன தன்னிலை அறிக்கையை மட்டுமே அவரால் தர முடிந்தது.

அந்த கொந்தளிப்பான சூழல் ஆறி தணிவதற்குள் வந்தது தலைவா படத்தின் வெளியீடு. அதன் பிறகு நடந்ததை நாடறியும். தலைவா படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒரு காரணமாக கூறப்பட்டு படம் எப்படி முடக்கப்பட்டதோ அதேபோல் விஸ்வரூபத்துக்கு முஸ்லீம்களின் எதிர்ப்பு காரணமாகக் காட்டப்பட்டது.


இரண்டுமே ஏறக்குறைய ஒரே பிரச்சனைதான். ஆனால் அதனை விஜய்யும், கமலும் கையாண்டவிதம் வேறு. கமல் மீடியாவின் மூலம் நேரடியாக மக்களை சந்தித்தார், பிரச்சனைகளை பேசினார். தடை செய்த அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். படத்தை வெளியிடக் கூடாது என்பதற்கு அரசு சொன்ன சொத்தை வாதங்களை உதாரணங்களுடன் மடக்கினார். முக்கியமாக, விஸ்வரூபம் வெளியாகாததற்கு அரசின் நியாயமற்ற எதிர்ப்புதான் காரணம் என்பதை மக்கள் முன் வெட்ட வெளிச்சமாக்கினார். திரைமறைவில் அவர் எந்த ரகசிய பேரத்திலும் ஈடுபடவில்லை.

ஆனால் விஜய்யும் அவரது தந்தையும் ரகசியமாக முதல்வரை சந்திக்க முயன்றனர். முதல்வரைப் புகழ்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டார். தலைவா வெளியாகாததற்கு யார் காரணம் என்பதை தெரிவிக்காமலே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நகர்வும் ரகசிய நடவடிக்கையாகவே அமைந்தது. ஒரே வரியில் சொல்வதென்றால், தனது சொந்தப் பிரச்சனைக்காக அவரால் எதிர்த்துப் போராட முடியவில்லை.

இன்னொருபுறம் சரத்குமார் தலைவா பிரச்சனைக்காக போராடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் வெளிப்படையாக எதுவும் பேசவில்லையே என்ற கேள்வி எழுந்த போது, சத்தம் போட்டுவிட்டு எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதா, சத்தம் போடாமல் காரியமாற்றுவது நல்லதா என சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் ட்வீட்டரில் தெரிவித்தார். அங்கேயும் எல்லாமே ரகசியம்தான். இது என்ன இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையா? இல்லை தாவூத்தை பிடிக்க ரகசிய திட்டம் போடுகிறார்களா?

விஜய், சரத் என்றில்லை, தமிழ் சினிமாவின் 24 சங்கங்களில் ஒன்றுகூட தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒரு படத்துக்கு அதிகார மையத்தால் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த சங்கங்கள் கள்ள மௌனத்தின் மூலமே அதனை கடந்திருக்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போது கருணாநிதியை கிண்டல் செய்து கலை நிகழ்ச்சி நடத்துவதும், கருணாநிதி முதல்வராகும் போது ஜெயலலிதாவை கிண்டல் செய்வதுமாக சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துதான் இவர்கள் சலுகைகளை பெறுகிறார்கள் என்பது கண்கூடு. காவிரிக்காக நெய்வேலியில் திரையுலகம் திரண்டது ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் என்பதும், சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தது கருணாநிதியின் கண்ணசைவில் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். கடந்த இரு பத்தாண்டுகளில் ஈழத்துக்காக ராமேஸ்வரத்தில் இயக்குனர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட போராட்டத்தை தவிர்த்து திரையுலகம் ஒன்று கூடிய அனைத்துப் போராட்டங்களுமே ஆள்பவர்களின் விருப்பத்தின் பேரில் நடத்தப்பட்டவையே. ஆள்பவர்களின் விருப்பத்துக்கு மாறான சின்ன அசைவை வெளிப்படுத்தவே திரையுலகம் பதறுகிறது. நேர்மையான உரிமைகளை போராடிப் பெறாமல் கூழைக்கும்பிடில் காரியம் சாதித்து அரசை அண்டிப் பிழைப்பதாகவே திரையுலக சங்கங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.


கூழைக்கும்பிடு, சந்தாப்பவாதம், ரகசிய பேரம் என பை பாஸில் பயணிக்கிறவர்களால் எந்தப் பிரச்சனையையும் நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பது சரித்திரம். சொந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்களிடம், காவிரிப் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, ஈழப்பிரச்சனையை ஏன் முன்னெடுக்கவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பது கேலிக்குரியது. ஒருமுறை கூடங்குளம் பிரச்சனையில் சிறை சென்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. நடுத்தர வயது மீனவப் பெண். படிக்காதவர். சிறை சென்று தினம் கஷ்டத்தை அனுபவிக்கும் போதும் அணு உலை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பேருந்தில் கையில் விலங்கிட்டு நீமன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போது, பேருந்தில் இருந்த சிலர் பிரியாணிக்காகவும், ஐநாறு ருபாய்க்காகவும் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஆயிரம் ரூபாயும், பிரியாணியும் தர்றேன் நீ இந்த மாதிரி கையில் விலங்கோடு சிறைக்கு போகத் தயாரா என்று இவர் திருப்பி கேட்டிருக்கிறார். ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் அவர்கள் போராடவில்லை. அது உரிமைக்கான போராட்டம், எதிர்காலத்துக்கான போராட்டம். அந்த மீனவப் பெண்ணிடம் காணப்பட்ட உறுதியிலும், நெஞ்சுரத்திலும் கால்வாசி இல்லாதவர்கள் நமது சினிமா அட்டக்கத்திகள். இவர்களைப் போய் தலைவா என்றும், தலைமை ஏற்க வா என்றும் கூவுவதைவிட கேவலம் என்ன இருக்கிறது? இந்த அட்டக்கத்திகள் திரையரங்கு இருட்டில், இருந்தால் இமயமலை எழுந்தால் எரிமலை என்று சுயபுகழ்ச்சி பாடுகையில் கைத்தட்டுகிற ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

திரைப்படம் பார்ப்போம், திரைப்படத்தை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு செம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். சுயமரியாதையான சமூகத்தில்தான் சுயமரியாதையான அரசு சாத்தியம்.

நன்றி-இணையம்

Thursday 15 August 2013

என்னை கவர்ந்த தலைவர் - சே குவேரா


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

'சே குவேரா' பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக அவரை சிறிது பிரதிபலிப்பார்கள்,அவரது உருவம் பதித்த உடை மற்றும்பொருட்களை இன்று அணிவது வழக்கமாகிவிட்டது. எல்லோரும் அணிகின்றனர் நானும் அணிகிறேன் என்ற எண்ணமே இப்போது உள்ளது. சே யார்? எதற்காக அவரை உலக மக்கள் கொண்டாடுகின்றனர்? ஏன் சே தலைவானான்?முதலில் சே பற்றி தெரிந்து கொள்ளுங்கள், அவருக்கு தோன்றிய எண்ணங்களில் சிறிதளவு உங்களுக்கு வந்தால் மட்டுமே அவரை பிரதிபலியுங்கள். அவரை பற்றி சிறு துளிகள் மட்டுமே இங்கே....

சே குவேரா பற்றி தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் செலவழித்தால் அது பயனற்று போகாது, இன்றைய அரசியல் சாக்கடையில் இருக்கும் பன்றிகள் குவேராவின் படத்தை காட்டி தன்னையும் ஒரு போராளியாக காட்ட நினைக்கின்றனர். உண்மையில் சே யார்? தேடுங்கள், தெரிந்துகொள்ளுங்கள்... 'சே'வாக மாறுங்கள்...


சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

இவ்வளவு புகழ்ச்சிக்கும் உரிய இந்த நாயகன் யார்? உலகமே இவரைக்கொண்டாட காரணம்? என்ன இன்று உலகில் பல அமைப்புக்கள் இவரை முன் மாதிரியாக கொண்டு இயங்கக் காரணம் என்ன?
அசாதாரணமான சாதனைகளையும் மிகச்சிறந்த வெற்றிகளையும் தேடித்தரக்கூடிய அந்த அசாத்தியமான மன உறுதிதான் சேவின் பயணங்களிலயும் அவரின் அரசியல் பார்வையிலும் அவரின் ராணுவ தலைமையிலும் மற்றும் பொருளாதார நிர்வாகத்திலும் வெளிப்பட்டது. எல்லையற்ற இம்மன உறுதியின் ஊற்றுக்கண்ணை விட அதன் தாக்கம் தான் முக்கியம் ஆனது. யோசித்து கூட பார்க்க முடியாத செயல்களை மேற்கொள்வதற்கும் மிகவும் தெளிவான ஈவு இரக்கமற்ற சுய பகுப்பாய்வை நடத்துவதற்கும் எர்னெஸ்ற்றோ குவேராவிட்கு இருந்த தன்னம்பிக்கையை ஒரு சில மனிதர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி!ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு. கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.


1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது. 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். 


 பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்க்சியம் அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்றால் மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.


இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது.

1955 ஆம் ஆண்டு கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் சந்தித்தனர். வெவ்வேறு துருவங்கள். இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அஸ்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார். அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரன் இறுதியில் சுட்டுக்கொள்ளப்பட்டார்.



சே குவேரா கையெழுத்து 
மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன் தான் சே, சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவரைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர், சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை.

இதனை பகிர்வதற்கு நாம் ஒன்றும் பெறும் போராளியாக இருக்கத் தேவையில்லை, ஒரு போராளியின் எண்ணங்களை சரி என்ற எண்ணத்தில் பின் தொடர்பவனாகவே இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நன்றி-இணையம்

Monday 12 August 2013

*** அயல்தேசத்து அநாதைகள் ***


எவ்வளவு சம்பாதித்தும் என்ன?

நாங்கள் அயல்தேசத்து அநாதைகள் தான்!

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெ ல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்.....

இதயம் தாண்டி பழகியவர்களெல்லா ம்...

ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே... கரைந்துவிடுகிறா ர்கள்....!

இறுதிநாள் நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்

எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்

முதல் ஸ்பரிசம் ...

முதல் பேச்சு...

முதல் பார்வை...

இவற்றின் பாக்கியத்தை
தினாரும்-திர்ஹமும்-டாலரும்
தந்துவிடுவதில்லை !

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

பெற்ற குழந்தையின் முகத்தை கூட
தொலைபேசி வழியாகத்தான்
உருவகபடுத்தி
சிலாகித்து கொள்கிறோம்

யாருக்கு புரியும் எங்கள் ஏக்கம்...!

ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்.. .

பெற்ற குழந்தையின்
முதல் பார்வை...

நெருங்கியவர்களி ன்
மவுணம், திடீர்மறைவு ...
இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்

பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...

மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

குழந்தைகளின் எதிர்காலமும்...
எதிர்கால பயமும்...

பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது!

மீண்டும் அயல்தேசத்திற்கு !

என்று விடியும் ...? எங்களின் வைகறை !
                                                                                  



வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவரின் வேதனைக் குரல்! ! ! !

பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும் போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம்.

நெஞ்சங்களில் படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை.

கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம்.

மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் – குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த...

இதே புலம்பல் தான் தினந்தோறும் அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒரு நாள் அணையும் ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம் ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும்...

வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவார் உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவார் அப்படிஇல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவார் இதே புலம்பல்தான் தினந்தோறும்...

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும் அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத்தாய் நாடு சென்றால் மட்டும் வாலிபங்கள் துள்ளும்.

வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டிடங்களை காணுகிறோம் நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்...

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம் அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டுகூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்...

-இதே புலம்பல்தான் தினந்தோறும்...


நன்றி - நாகூர் யூசப் (DUBAI)


நன்றி-இணையம்

Friday 9 August 2013

49 ஓ - கவுண்டமணி விவசாய ஹீரோவாக நடிக்கும் படம்


தமிழ் சினிமாவில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென மக்கள் மனதில் தனி இடம் பதித்தவர் நம்ம கவுண்டமணி அவரை பற்றிய ஒரு புதிய செய்தி இதோ.

நக்கல் நையாண்டி காமெடிக்கு கவுண்டர்தான் எப்போதுமே முதல் சாய்ஸ். மற்ற காமெடியன்கள் மற்றும் ஹீரோக்களால் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும்தான் நக்கல் செய்ய முடியும். கவுண்டமணிதான் ஜனங்களின் மொண்ணைத்தனத்தையும் கிண்டல் செய்யக் கூடியவர். குவாட்டருக்கும், கோழி பி‌‌ரியாணிக்கும் ஓட்டை விற்றவங்கதாண்டா நீங்க என்று ஜனங்களையே கேலி செய்கிறவர்.

ச‌ரி, இவ்வளவு டீட்டெயில் எதுக்கு என்றால் கவுண்டர் மீண்டும் தனது கடையை திறந்திருக்கிறார். எஸ், ஹி இஸ் பேக்.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் 49 ஓ படிவத்தை வாங்கி நிரப்பித்தர வேண்டும். எழுத்தாளர் ஞானிதான் இப்படியொரு முறை இருப்பதை தமிழகத்தில் பிரபலப்படுத்தினார். அதன் பிறகு பலரும் தேர்தலின் போது 49 ஓ படிவத்தை வாங்கி பூர்த்தி செய்தனர். பல வாக்குச்சாவடிகளில் 49 ஓ படிவம் இல்லாத கூத்தும் நடந்தேறியது.

இந்த 49 ஓ என்பதைதான் கவுண்டமணி நடிக்கும் படத்துக்கு பெயராக வைத்துள்ளனர். இதில் கவுண்டர் விவசாயியாக வருகிறார். இன்றைய மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கையும், விவசாயிகளின் கஷ்டத்தையும் தனக்கேயு‌‌ரிய கேலியுடன் படம் நெடுக பட்டைய கிளப்பயிருக்கிறாராம். இந்த தகவல்களை தெ‌ரிவித்தவர், 49 ஓ வை இயக்கப் போகிற ஆரோக்கியதாஸ்.

கவுண்டமணி இதுவரை ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றியடைந்ததில்லை. 49 ஓ தீர்ப்பை திருத்தி எழுதுமா?


Wednesday 7 August 2013

தலைவா - தலை வலிக்குமா ?


தலைவா ஆகஸ்ட் 9 வெளியாகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பும், எதிர்ப்பும் கலந்து கட்டுகிறது. இருநாளும் இல்லாத திருநாளாக (பலி நாளாக...?) தலைவா திரையிடப்படும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், பெயரைச் சொல்ல திராணியற்ற சில போக்கி‌ரிகள். தலைவா கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்ப்பதில் ஒரு கிக் இருக்கதான் செய்கிறது.

ஏ.எல்.விஜய் மதராசப்பட்டணத்தை முடித்திருந்த நேரம். படத்தைப் பார்த்த விஜய், மதராசப்பட்டணத்தை பாராட்டியதுடன், நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார். அன்று சொன்னது தலைவாவில் சாத்தியமானது.

தலைவாவை தயா‌ரித்திருக்கும் மிஸ்‌ரி புரொடக்சன் சந்திரப்பிரகாஷ் ஜெயின் பைனான்சியர். அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தை தயா‌ரித்தவர். கடைசிப்படம் - தயா‌ரிப்பாளராக - ‌ரிக்சா மாமா. அதன் பிறகு படமே தயா‌ரிக்காமல் இருந்தவருக்கு விஜய் படம் கனவு புராஜெக்ட். அது கைகூடிய மகிழ்ச்சியில் இன்னும் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

தெய்வத்திருமகள் படத்தில் அமலா பாலுக்கு சின்ன வேடம். வெயிட் பண்ணு, பெ‌ரிய ரோலாக தருகிறேன் என்று ஏ.எல்.விஜய் சொன்னதாகவும், அந்த பெ‌ரிய ரோல்தான் தலைவாவில் அவர் விஜய் ஜோடியாக நடித்திருப்பது என்பதாகவும் கோடம்பாக்கம் இன்னமும் முணுமுணுக்கிறது. இருந்தாலும், படத்தின் ஆரம்பத்தில் சமந்தா ரூத் பிரபு, யாமினி கௌதம் போன்றவர்களின் பெயர்களும் கதாநாகி ரோலுக்கு அடிபட்டது.


ஆஸ்திரேலியாவில் ஆட்டம் பாட்டம் என்று ஜாலியான டான்ஸராக இருக்கும் விஜய், தனது தந்தையின் மரணம் காரணமாக தமிழகம் திரும்புவதாகவும், தந்தையின் மரணத்துக்கு காரணமான சக்திகளை முறியடித்து மக்கள் தலைவராக உருவெடுப்பதாகவும் தலைவா கதை பின்னப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது (கவனிக்க, கூறப்படுகிறது). விஜய்யின் தந்தையாக சத்யரா‌ஜ் நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படத்தின் கதை என்று மீடியா கற்பனை செய்வதற்கும், நிஜ படத்துக்கும் ஆறு வித்தியாசம் நிச்சயம் இருக்கும். தலைவாவில் அப்படியிருந்தால்... வேறென்ன... திட்டாமல் மறந்திடுங்க.

அமலா பால் முதல்முறையாக இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.

விஜய் படம் ஒன்றுக்கு ‌ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பது இதுவே முதல்முறை. விஜய் படத்துக்கு இசையமைக்கிறோம் என்றதும் அவர் முதலில் முடிவு செய்தது, விஜய்யை பாட வைக்க வேண்டும். அந்தப் பாடல்தான் நீங்கள் கேட்கும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. பாடல்.

தலைவாவின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. முடிந்தது ஆஸ்ட்ரேலியாவில்.

நடன கலைஞராக இதில் விஜய் நடித்திருக்கிறாராம். ஆஸ்ட்ரேலியாவில் நடந்த படப்பிடிப்பில் நிறைய நடனக் கலைஞர்கள் பங்கு பெற்றனர். சுமார் 300 பேர் என்கிறது தலைவா டீம்.

திருமண வேலைகள் காரணமாக ‌ஜி.வி.பிரகாஷால் பின்னணி இசை சேர்ப்பை முழுமையாக முடிக்க முடியவில்லை. அந்த கோடிட்ட இடங்களை இசையால் நிரப்பியவர் ரகு நந்தன்.

துப்பாக்கியிலும் புதிய வில்லனை அறிமுகப்படுத்தியது போல் இதிலும் அபிமன்யூ சிங் என்ற நடிகரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர் ராம்கோபால் வர்மாவின் ரத்த ச‌ரித்திரம், அனுராக் காஷ்யபின் குலால் ஆகிய படங்களில் கலக்கியவர்.

இவர்கள் தவிர இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயாவும் நடித்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

இவர்கள் தவிர இந்தி டிவி நடிகை ராகினி நந்துவானியும் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயாவும் நடித்திருக்கிறார்.

நா.முத்துக்குமார் படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு நீரவ் ஷா. ஆண்டனி எடிட்டிங்.

படத்தில் மொத்தம் 4 சண்டைக் காட்சிகள். ஸ்டண்ட் சில்வா இதனை அமைத்துள்ளார்.

சத்யராஜுக்கு பெ‌ரியய்யா என்ற பவர்ஃபுல் வேடம். விஜய் கதாபாத்திரத்துக்கு திருப்புமுனை ஏற்படுத்துவதே சத்யரா‌ஜின் பெ‌ரியய்யா கேரக்டர்தான் என்கிறார்கள். தாடியுடன் வெள்ளை காஸ்ட்யூமில், தோளில் நீண்ட அங்கியுடன், சிவா‌ஜி கணேசனின் யாருக்காக... இது யாருக்காக... கெட்டப்பில் வருகிறார்.

சற்றே நீண்ட திரைப்படம். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது.

சென்சா‌ரில் யுஏ சான்றிதழ்தான் கிடைத்தது. யுஏ என்றால் 30 சதவீத வ‌ரிவிலக்கு கிடைக்காது என்பதால் ‌ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்றிதழ் பெற்றனர். ‌ரிவைஸிங் கமிட்டியில் 4 இடங்களில் படம் கத்த‌ரிக்கப்பட்டது.

இதுவரை வெளியான விஜய் படங்களில் தலைவாவுக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 2000 திரையரங்குகள். தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகள்.

தலைவா என்ற டைட்டிலும், படத்தின் ட்ரெய்லரும், டைம் டு லீட் என்ற கேப்ஷனும் (தெலுங்கில் பார்ன் டு லீட்) இதுவொரு அரசியல் படம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. படத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொந்தரவுகளுக்கு தலைவா அரசியல் படம் என்ற அனுமானம்தான் காரணம் என்று நினைத்ததால் இயக்குனர் விஜய்யும், இளைய தளபதி விஜய்யும் தொடர்ந்து, இது அரசியல் படம் இல்லை என அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

லேட்டஸ்ட் தகவல், தலைவா திரையிடப்பட உள்ள திரையரங்குகளுக்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல். வெத்துவேட்டு மிரட்டல் என்று தெரிந்தாலும் பொறுப்புணர்ச்சி காரணமாக போலீஸில் புகார் செய்து டிக்கெட் ‌ரிசர்வேஷனை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் விளம்பரத்துக்கே பெ‌ரிதும் உதவி செய்கின்றன.

மிஸ்‌ரி புரொடக்சன் தயா‌ரித்துள்ள படத்தை வேந்தர் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. ஆந்திராவில் அண்ணா என்ற பெய‌ரில் தெலுங்கில் வெளியாகிறது. கேரளாவில் தலைவா என்ற அதே பெய‌ரில் தமிழிலேயே வெளியாகிறது.

தொலைக்காட்சி உ‌ரிமையை வாங்கியிருப்பது சன். 15 கோடிகள் என்கிறார்கள்.

ச‌ரி, படத்தைப் பற்றிய ‌ரிசல்ட் என்ன? முதல் பகுதி சுமார், இரண்டாம் பகுதி பரவாயில்லை (சூப்பர் என்றும் சிலர் சொல்கிறார்கள்). ராம்கோபால் வர்மாவின் சர்க்காரை ஞாபகப்படுத்துவதாகவும் கமெண்ட் வந்துள்ளது.

தலைவா - தலை வலிக்குமா இன்னும் ஒரு நாள்தானே. திரையரங்கில் நேரடியாகவே தெரிந்து கொள்வோம்.

Sunday 4 August 2013

தோரணம் - 04/08/2013


இந்த வார நகைச்சுவை;

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"

9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க
சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள்
சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

இந்த வார நகைச்சுவை; 2

2.500 ரூபாய்க்கு முடி வெட்டி,
100 ரூபாய்க்கு ஜெல் வாங்கி,
அத அரைமனி நேரமா
தலயில போட்டு தேய்ச்சி
Spike வச்சிக்கிட்டு,
சும்மா... பந்தாவா...
ஆபிஸ் வந்தா...
பக்கத்து டேபிள் தம்பி
சொல்றாரு...
.
.
"சார் ...., தல கலஞ்சிருக்கு!.


இந்த வார கவிதை;

பேருந்து

உங்களை ஜாதி மதம் பார்க்காமல்
சுமந்து சென்றேன் ...

ஆனால் நீங்கள் ஜாதி சண்டைக்காக என்னை கல்லை கொண்டு எரிவது சரிதானா .????

கல்லெடுத்து எறிந்தால் ஏன் என்று கேட்க ஆள் இல்லாத கவர்மெண்ட் பஸ்ஸின் குமுறல்....

மாற்றம்;

அழகிய கூந்தல் அதிலொரு பின்னல்,
காதில் கம்மல், அதில் ஒரு மாட்டல் ,
பின்னழகு பரவாயில்லை,
முன்னழகு எடுப்பாயில்லை,ஏறெடுத்து பார்த்தேன்,
மொத்தமாய் ஏமாந்தேன்,
ஆடவன் அவன்.

கே.தமிழ் இனியா - கொள்ளிடம்



மரத்தின் மகிமை;

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.

வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.

''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம்.காரணம் கேட்க அவர் சொன்னார்,

''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு

எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.


ஆறறிவு படைத்த-அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?'


பயனுள்ள தகவல்;

*மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -தாய்,தந்தை
*மிக மிக நல்ல நாள் -இன்று
*மிகப் பெரிய வெகுமதி -மன்னிப்பு
*மிகவும் வேண்டியது -பணிவு
*மிகவும் வேண்டாதது -வெறுப்பு
*மிகப் பெரிய தேவை -நம்பிக்கை
*மிக்க கொடிய நோய் -பேராசை
*மிகவும் சுலபமானது -குற்றம் காணல்
*கீழ்த்தரமான விடையம் -பொறமை
*நம்பக் கூடாதது -வதந்தி
*ஆபத்தை விளைவிப்பது -ஆதிக்க பேச்சு
*செய்ய கூடாதது -நம்பிக்கை துரோகம்
*செய்ய கூடியது -உதவி
*விலக்க வேண்டியது -சோம்பேறித்தனம்
*உயர்வுக்கு வழி -உழைப்பு
*நழுவ விடக் கூடாதது -வாய்ப்பு
*பிரிய கூடாதது -கணவன் மனைவி ,சொந்தம் ,நட்பு
*மறக்க கூடாதது -நன்றி


இரங்கல்;

எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை!

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் வாலி திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 1931ல் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் வாலிக்கு 2007ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி

சிறுகதை, கவிதை, உரைநடை நூல்களையும் வாலி எழுதியுள்ளார் கவிஞர் வாலி.

இளம் தலைமுறை கவிஞர்களை ஊக்குவிப்பதிலும், வாய்ப்புக்கு வழிவகுப்பதிலும் முதன்மையானவர் கவிஞர் வாலி.

புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இது போன்ற பாடல்கள் ஏராளம்.

இன்றுடன் வாலி இறந்து 15 நாட்கள் ஆகின்றன..
அவரது இழப்பு தமிழிற்கு பெரும் இழப்பு தான்..
வாலி மறைந்தாலும் அவரது புகழ் மறையாது ..
வாலிக்கு நிகர் வாலிதான்!


வலைச்சரம்;

ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுபேற்க சீனா ஐயா வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த ஒரு வார காலத்திற்கு எனக்கு பிடித்த பதிவர்களையும், அவர்களின் பதிவுகளையும் அங்கு பதிவாக இட போகிறேன். நாளையில் இருந்து வலைச்சரத்தில் எனது பதிவுகள் தொடரும்.

Thursday 1 August 2013

தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்

தமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று சொன்னால் சே குவேராவே நடுங்குகிற அளவுக்கு தமிழ் சினிமா முழுக்க புரட்சியாளர்கள். இப்படி பட்டறை இரும்பாக அடிபட்ட சில 'கெட்ட' வார்த்தைகளை தொகுத்துப் பார்க்கலாமே என்று ஒரு அசட்டு ஆசை. புரட்சியிலிருந்தே தொடங்குவோம்.


10. புரட்சி

இந்த பரந்த பூமியில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே புரட்சியாளர்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் தடுக்கினால் ஏதாவது புரட்சிக்காரர் மீதுதான் விழவேண்டும். சமயத்தில் தடுக்கியவரும், தடுத்தவரும் புரட்சியாளராக இருப்பதுண்டு. சாலிக்கிராமத்தில் ஐவரில் ஒருவர் புரட்சிக்காரர் என்கிறது புள்ளி விவரம்.

புரட்சி கலைஞர், புரட்சி தமிழர், புரட்சி தளபதி, புரட்சி இயக்குனர் என உயர்திணையிலும் புரட்சிகரமான கதை, புரட்சிகரமான இயக்கம், புரட்சிகரமான நடிப்பு, புரட்சிகரமான வசனம் என அஃறிணையிலும் சினிமாவில் புரட்சி நொதித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இட நெருக்கடி காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சி குறித்த அதிருப்தி தெரிகிறது (முன்னோர்கள் தேய்த்த தேய்ப்பு அப்படி). ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த புரட்சியின் மகத்துவம் இப்போது குறைந்து வருவதை - ஒருவகையில் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.


9. ஜானர்

வெளிநாடுகளில் நிழல் உலகத்தைப் பற்றி படம் எடுத்தால் அந்த உலகத்தை தாண்ட மாட்டார்கள். காமெடி என்றால் அது மட்டுமே இருக்கும். அப்படிதான் ஆக்ஷன், ரொமான்டிக் எல்லாம். அதனால் ஜானர் என்ற சொல்லுக்கு அங்கு அர்த்தம் உண்டு.

தமிழுக்கு ஜானர் புத்தம் புதிய வெளியீடு. நியூ ரிலீஸ். இப்பொழுதுதான் பேசி பழகுகிறார்கள். இரண்டு உதவி இயக்குனர்கள் (அல்லது இயக்குனர்கள்) சந்தித்தால் என்ன கதை என்று கேட்பதில்லை. என்ன ஜானர்? இதுதான் இப்போது பேஷன்.

சமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.

"கையிலே என்ன ஜானர் வச்சிருக்கீங்க"

"ரொமான்டிக்"

"இப்போ காமெடிதான் போகுது"

"அதுவும் இருக்கு" பிரபலமான காமெடியன் ஒருவாpன் பெயரைச் சொல்லி, "அவர் மெயின் ரோல் பண்றார்."

"அப்ப சரி. பைட்?"

"நாலு வச்சிருக்கேன்"

இப்படி அவரின் ரொமான்டிக் ஜானாரில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என எல்லா ஜானர்களும் உண்டு. உலகில் எங்கு ஜானர் அழிந்தாலும் தமிழில் வாழ்வாங்கு வாழும்.


8. ட்ரெண்ட் செட்டர்

ஆர்வ மிகுதியில் (கோளாறு என்றும் சொல்லலாம்) இருப்பவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல். இவர்களை தனித்து அடையாளம் காணலாம். கூண்டிலிட்ட கரடியாக ஒரே இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் அனேகமாக தில்லானா மோகனாம்பாளாக இருக்கும்.

பெரும்பாலான இயக்குனர்கள் இந்த கட்டத்தை தாண்டியவர்கள். கூச்சம் கருதி ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தையை தவிர்த்தாலும் அவர்களின் நண்பர்கள் (உண்மையில் இவர்கள்தான் நிஜ எதிரிகள்) அவரோட படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சம்பந்தப்பட்டவர்களை பொது மேடைகளில் நெளிய வைப்பார்கள்.

இவர்கள் ட்ரெண்ட் செட்டர் என குறிப்பிடும் படங்களைப் பார்த்து, இவர்கள் ட்ரெண்ட் செட்டரை சொல்கிறார்களா இல்லை டெண்ட் கொட்டாயை சொல்கிறார்களா என்று வரலாற்றாய்வாளர்கள் திரிபு மயக்கம் கொள்வதுண்டு.


7. கதைக்கேற்ற கிளாமர்

உலகில் அர்த்தம் கண்டுபிடிக்கப்படாத எட்டு வார்த்தைகளில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலை இதனை வகைப்படுத்தியிருக்கிறது. காத்து கருப்பு மாதிரி எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம். கோடம்பாக்கத்தில் சித்த சுவாதீனமில்லாமல் திரிகிறவர்களில் சமபாதி பேர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி புறப்பட்டவர்கள்.

நடிகையின் வாழ்வியலை வைத்து இதற்கு ஏகதேசமாக ஒரு மேப் வரைந்திருக்கிறார்கள்.

நடிகை அறிமுகமாகும் போது கெடுபிடி அதிகமிருக்கும். அப்போது கதைக்கேற்ற கிளாமர் என்பது கணுக்காலை தாண்டாது.

நான்கைந்து படங்கள் முடியும் போது, கதைக்கேற்ற கிளாமர் முட்டிக்கு மேல் ஏறி நிற்கும்.

அதன் பிறகு பாய்மரப் படகின் பாயை சுருட்டி மேலேற்றிய கதைதான். கதைக்கேற்ற கிளாமர் அப்போது எதற்கேற்ற மாதிரியும் மாறியிருக்கும். இந்த வார்த்தை அர்த்தம் இழக்க ஆரம்பிப்பதே அந்த இடத்தில்தான் என மொழியியலாளர்கள் சுட்டுகின்றனர்.


6. கெமிஸ்ட்ரி

சினிமா ஒரு விஞ்ஞானம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என பெயர் தெரியாத ஏதோ புண்ணியவான் வேதியலை இழுத்துவிட்டிருக்கிறhர். இசை வெளியீட்டு விழா, படத்தின் அறிமுக விழா போன்றவை கெமிஸ்ட்ரி கொலு வீற்றிருக்கும் இடங்கள். ஞஇந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு என இயக்குனர்கள் பூரிப்பார்கள்;.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரியை இம்போசிஷன் செய்ததில், கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் வொர்க் அவுட்டாகி, கலா மாஸ்டரின் பரம்பரை சொத்து போலிருக்கிறது, அதை நாம் பயன்படுத்தி, பேடண்ட் உரிமை அது இதுவென வழக்கு போட்டால்...? எதற்கு வம்பு என சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் அதிகமாக கெமிஸ்ட்ரியாவதில்லை.

தாங்க்ஸ் கலா மாஸ்டர்.


5. மக்கள்

ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது. அதிக நுகர்வோரின் ஆதரவு தேவைப்படும் வியாபாரங்களில் - சினிமா, அரசியல் முதலானவை - இதற்குத்தான் பரிவட்டம், முதல் மரியாதை எல்லாம். ஜனங்கள், பொதுமக்கள் என்று வெவ்வேறு பெயர்களிலும் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை என்டர்டெயின் செய்வதுதான் என்னுடைய வேலை, மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன், மக்கள் என்னை நடிகனாக அங்கீகரித்திருக்கிறார்கள் என மக்களுக்காக பிறந்து மக்களுக்காக வளர்ந்து மக்களுக்காக உழைத்து மரணிக்கும் தியாகிகளால் நிரம்பியது தமிழ் சினிமா. இவர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கும் ஆயுதம், மக்கள்.

இந்த ஆயுதத்தை எதிரிகளின் முன்னால் சும்மா வீசினால் போதும், எதிரி தொலைந்தான். உதாரணமாக, "நான் படம் நடிப்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை" என்று ஒரு நடிகன் சொன்னால், டமார்... அடுத்தகணம் விமர்சகன் காலி. "மக்களின் அங்கீகாரம்தான் எனக்கு மிகப்பெரிய விருது" டமார்... விருது காலி.

இப்படி விமர்சகன், விருதை மட்டுமில்லை யாரை வேண்டுமானாலும் காலி செய்யலாம். "விவசாயிகள் தண்ணீருக்காக சாலை மறியல் பொதுமக்கள் அவதி" என்று விவசாயிகளையும், "ஓட்டுநர்கள் உண்ணாவிரதம், பேருந்தின்றி மக்கள் தவிப்பு" என ஓட்டுநர்களையும்கூட கட்டம் கட்டலாம். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். விமர்சகன், ஓட்டுநர்கள், விவசாயிகள் எல்லாம் மக்கள் கிடையாதா? அப்படியானால் மக்கள் என்பது யாரை குறிக்கிறது?

கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் எப்படி ஒரு மாயையோ அதேபோலதான் இந்த மக்கள் என்ற வார்த்தையும். செட்டப் செய்யப்பட்ட மாயை. கலைடாஸ்கோப்பை பிரித்தால் சில கண்ணாடி சில்களும், நாலைந்து வளையல் துண்டுகளும் கிடைக்கும். மக்களையும் பிரித்துவிட வேண்டும். எப்படி? விவசாயிகள், ஆசிரியர்கள், கிரிமினல்கள், ஊழல் அரசியல்வாதிகள், மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதிகள், ஐடி அலுவலர்கள், சாக்கடை சரி செய்பவர்கள், சாலை போடுகிறவர்கள், சாமிக்கு தீபம் காட்டுகிறவர்கள், சாமியே இல்லை என்பவர்கள், இடைத் தரகர்கள், காசுக்கு உடலை விற்பவர்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் மாமாக்கள்...

ரயிலை காலில் கயிறு கட்டி நிறுத்தும் ஹீரோவிடம், ஏன் சார் இப்படி என்றால், மக்களுக்கு என் படம் பிடிச்சிருக்கு என்பார். சரி, எந்த மக்கள்? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே? பாருங்கள்... மக்கள் என்று சொல்லும் போது கிடைக்கும் அந்த மாய கௌரவம் அவர்களை பிரித்து சொல்லும் போது எப்படி நிறமிழந்து போகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது, நாலு ஜுரிகள் தேர்வு செய்து தரும் விருதைவிட சிறந்தது என்று சொல்லும் போது கேட்க நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எந்த மக்கள் தேர்வு செய்தது? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், ரிலீஸ் அன்று ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறுக்கு வாங்கிப் பார்ப்பவன்... இவர்களைவிட அனுபம் கேர், ஷியாம் பெனகல் போன்ற ஜுரிகளின் ரசனை மோசமானதா?

மக்கள் என்ற வார்த்தை பெரும்பாலும் பெரும்பான்மையினர் என்ற அர்த்தத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நடிகன், மக்கள் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்பது, பெரும்பான்மையினர் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான். வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படத்தை விமர்சிக்கையில் வரும் முதல் எதிர்வினை, நீ என்ன வேணா எழுதிக்கோ, படம் சூப்பராக போய்கிட்டிருக்கு, மக்களுக்கு பிடிச்சிருக்கு என்பதாகதான் இருக்கும்.

பெரும்பான்மையினர் அங்கீகரித்தால் அதுதான் சரி என்பது அடிப்படை இல்லாத வாதம். சினிமா தவிர்த்து வேறு எதிலும், யாரும் இதனை பின்பற்றுவதுமில்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததால் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று எந்த திமுக காரனும் ஒப்புக் கொள்வதில்லை. உலகில் அதிகமானோர் பின்பற்றுவது கிறிஸ்தவத்தை என்பதால் அவர்தான் உண்மையான கடவுள் என்று இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதத்தினர் ஒப்புக் கொள்வார்களா? எனில் சினிமாவில் மட்டும் பெரும்பான்மைக்கு ஏன் கட்டுப்பட வேண்டும்?

நடிகன், அரசியல்வாதி, ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும் தங்களின் பலவீனத்தை மறைக்கவும், தங்களின் தேர்வை நியாயப்படுத்தவுமே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற கலர்பேப்பரில் பொதிந்து தரும்போது ரயிலை கயிறு கட்டி நிறுத்தியதையும், தொப்புளில் ஆம்லெட் போட்டதையும், ஒரு ரூபாயில் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதையும் தமிழ் சினிமாவால் நியாயப்படுத்த முடிகிறது. நமது ரசனையை மேம்படுத்தாதவரை உலகமகா அபத்தங்களையும், மக்களுக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லியே நமது தலையில் கட்டுவார்கள். மேலும், அடுத்தமுறை யாராவது மக்கள் என்று சொல்லும் போது எந்த மக்கள் என்று உஷாராக கேளுங்கள். சொந்த ரத்தத்தில் பிறந்த மக்களாகவும் இருக்கலாம்.


4. எளிமை

சினிமாவில் இதுவொரு மங்களகரமான ஜால்ரா வாத்தியம். எங்கும் அடிக்கலாம், யாருக்கும் அடிக்கலாம். அதன் சத்தம் பெரும்பாலும், "எவ்ளோ பெரிய ஸ்டாரு, எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா மனுசன் ரொம்ப எளிமைங்க" என்பதாக இருக்கும். காந்தியே எட்டிதான் நிற்கணும். அவர்கள் எளிமையை பேணுகிற விதமே தனி. பயணிப்பது ஒன்று ஒன்றரை கோடி மதிப்புள்ள காரில், ரெஸ்ட் எடுப்பது தினம் பத்தாயிரம் வாடகை தரும் கேரவனில், கோழிக்கு ஒரு ஹோட்டல் (பைவ் ஸ்டார் அவசியம்) குழம்புக்கு ஒரு ஹோட்டால், சோறுக்கு ஒரு ஹோட்டல். தலைவர் கவுண்டரி ன் பாஷையில் சொன்னால் எளிமையோ... எளிமை.

ஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கும் ஆடம்பரவாசிகள் இந்த எளிமை கிளப்பில் இடம்பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு பிஎம்டபுள்யூ வாவது வேண்டும். ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் என்றால் (இனி வருவதை, அந்த குழந்தையே நீங்கதான் மாடுலேஷனில் வாசிக்கவும்) அந்த எளிமையே நீங்கதான்.

காமராஜரையும் கக்கனையும் எளிமைன்னு சொல்றக்ங்க, இவங்களையும் எளிமைன்னு சொல்றாங்க. அப்படீன்னா இந்த எளிமைங்கிறது என்ன என்பதை கண்டறிய செம்மொழிதுறையில் புதிதாக எளிமை துறை ஒன்று மிக எளிமையான முறையில் திறக்கப்பட உள்ளது.

நல்லவேளையாக இந்த நவீன எளிமைகளை தரிசிக்கிற பாக்கியம் காந்திக்கும், காமராஜருக்கும் கிட்டவில்லை, லக்கி கைய்ஸ்.


3. இதுதான் பெஸ்ட்

தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரிதான் இந்த, 'இதுதான் பெஸ்டங' பாடலும். படத்தின் புரமோஷன் தினத்தில் இந்த பாடலை புராதன கிராமபோனில் நடிகர்கள் ஒலிக்கவிடுவார்கள்.

'இந்தப் படம்தான் நான் நடிச்சதிலேயே பெஸ்ட்... லலலலா...
இந்தப் படத்துக்கு கஷ்டப்பட்டது போல் எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை... லலலலா...'

இரண்டே வாப்கள். அடுத்தடுத்தப் படங்களின் ப்ரமோஷனில் இதே வரிகளை ஒலிக்கவிட்டு காதில் ரத்தம் எடுப்பார்கள்.


2. உண்மைச் சம்பவம்

படத்தை அறிமுகப்படுத்தும் போது, வாய்ஸை குறைத்து சீரியஸ் பாவனையில், "இதுவொரு உண்மைச் சம்பவங்க" என்பார்கள். அவங்க உண்மையைத் தவிர வேற எதையும் எடுப்பதில்லை. உயர்தர உண்மைகள் மட்டுமே பரிமாறப்படும். அப்படி என்ன உண்மைங்க? சமீபத்தில் ஒரு உயர்தர உண்மை சப்ளையரிடம் கேட்ட போது இப்படி சொன்னார். 'ரவுடி ஒருத்தன் ஒரு பொண்ணால திருந்துறான் சார்.'

தமிழ் சினிமாவில் பொண்ணாலதான் ரவுடி திருந்துவான், போலீஸ் அடிச்சா திருந்துவான்.

இதேபோன்று ரவுடியை கொல்லும் ரவுடி, ரவுடியால் சாகும் ரவுடி, ரவுடிக்கு ரவுடி மற்றும் ரவுடியோ ரவுடி போன்ற உண்மைச் சம்பவ சப்ளையர்கள் கோடம்பாக்கத்தில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஹோல்சேலுக்கு இயக்குனர் சஞ்சய் ராம்.


1. வித்தியாசம்

லூமியர் சகோதரர்கள் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கிய காலகட்டத்திலேயே இந்த வார்த்தை கோடம்பாக்கத்தில் முளைவிட தொடங்கியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைகின்றனர். கதை, நடிப்பு, இசை என்று எதுவுமில்லாத பாலைவனச்சூழலிலும், இந்த அனைத்துமே சீரழிந்துப்போன சதுப்புநிலங்களிலும்கூட இது செழித்து வளரக் கூடியது.

இதுவொரு வித்தியாசமான கதைங்க... உண்மையிலேயே இது வித்தியாசமான படம்... பைட்டை டிபரண்டா எடுத்திருக்கோம்... ஆக்சுவலி படத்துல வித்தியாசமான ஒரு பாடல் வருது... டோட்டலி டிபரண்ட் லொகேஷன்... வித்தியாசமா ஒரு கெட்டப் ட்ரை பண்ணியிருக்கோம்...

இப்படி எல்லாவிதங்களிலும் கதற கதற அடிப்பதால், தங்களின் வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட, "எல்லோரும் வித்தியாசமான கதைன்னு சொல்வாங்க. பட் எங்களோடது உண்மையிலேயே வித்தியாசமான கதைங்க" என்று உண்மையான வித்தியாசம், வித்தியாசத்தில் வித்தியாசம், இதுதான்டா வித்தியாசம் என வித்தியாசத்துக்கு பல விழுதுகளும்கூட இறங்கிவிட்டது. வளர்ப்பானேன். அதிக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வார்த்தை என போலீஸ் ரிக்கார்ட்லேயே பதித்திருக்கிறார்கள். 

நாய்கள் ஜாக்கிரதை, திருடர்கள் ஜாக்கிரதை... 

வித்தியாசம் ஜாக்கிரதை.

நன்றி; இணையம்